Friday, June 6, 2014

ஒரு மதியபொழுதினில்.....







முற்றத்து நடுவினில் ஓயாமல்
சத்தமிட்டபடி தானியத்தை கொத்தித்தின்றன
குருவிகளும் காக்கைகளும் புறாக்களும்
ஒரு மதியபொழுதினில்

இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்
இறக்கை அடிப்பிலே தெரிந்தது  அதில்
ஒற்றை புறா ஒன்று உணவை  விழுங்கி
ஊட்டிக்கொண்டிருந்தது பிள்ளைக்கு

அடுக்களையில் புகை சூழ் நடுவே
கற்றையாய் விழும் கூந்தலை
அள்ளி முடிக்க வியர்வை மழையால்
குளித்து போயிருந்தன அவள் விழிகளும்

சைக்கிளின் மணிச்சத்தத்தில் படபடவென
பறந்த பறவைகள் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது
கிடுகிடுவென்று வாசல் போனது மனம்

நீள்வாசலின் நேரேதிரே மாட்டியிருந்த
அலமாரி கண்ணாடி கூறியது அவள்
நெற்றி பொட்டிழந்தக்கதையை ..அவன்
நினைவுக்குழந்தையாய் கரம் பற்றி அணைத்திருந்தான்

அழவுமில்லை மீண்டும் பொட்டிட துணிவுமில்லை
பறவைகளினூடே ரெக்கைகட்டிபறந்தமனம் சிலாகித்தது ..!!
நெல் மணிகளை சிதறிக்கொண்டிருந்தது
கைவிரல்கள்..!
கவிதையாக்கம்

**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**

புரிதலற்று காத்திருக்கிறது காதல்


 

சங்கமிக்கும் எண்ணங்கள் மனதினில் ஓராயிரம் ,
வலிகள், அதில் எழும்புகிறதுதுடித்தெழுந்து
ஆர்பரிக்கும் விழிகள் நிரம்புகிறது குளமாய்
வழிந்தோடும் வேதனைகளின் சூட்டில் அனைத்தும்
தொலைந்து போகிறது.
தனிமையில் சுட்டெரிக்கும் சூரியானாய்
உதிக்கும் நினைவுகள் எனக்கும் மட்டும்தானா?
பொய்சொற்களை புகலும் உன் எண்ணத்திலும்
வடிகிறது வியர்வை துளிகள் ! அட ஆமாம்..!
நீ பொய்தான் புகன்றிருக்கிறாய்..!
பாசமதன் மீது வேஷம் கட்டிய கட்டியக்காரனாய்,
மேடை நாடகம் நிகழ்த்துகிறாய்…
இடைவெளி விட்டு கூவிக்கொண்டே வரும்
நாகரீக கோமாளியாக்குகிறாய் என்னை…
இதயத்தில் எழுதிய பெயரை திரையிட்டு
மறைக்கிறது.. உன் மெளனப்பூச்சு பூசிய இதழ்..!
எங்கோ என்றோ விட்டு சென்ற உணர்வை ,
தொட்டு தொடரும் எழுத்துக்களாய் என்னில்
எழுதிவிட்டு ஏக்கங்களை சுமக்க வைத்து
காத்திருக்கும் மயானமாய் ஆக்கிவிட்டாய்..!
கொட்டு மேளத்தையும் வாசனை திரவியத்தையும்
எதிர்கொண்டு காத்திருக்கிறேன்… அது
எந்த மாலை பெற ஏன்று அறியாதவளாய்,
எதுவும் நடக்கட்டும் என பூவிழி கரைய,
புரிதலற்று காத்திருக்கிறது காதல் கொண்ட மனது..!

  

Tuesday, March 25, 2014

நினைவுகளில் கூடுவோம்...




ஆராதிக்கும் அழகாய் அன்பின் வலியாய்
உன் நினைவுகள் நிரம்பியிருக்கிறது என்னுள்...

மணம் வீசும் மாலை நேர பூக்கள் கதைபேசும்
காற்றினில் அசைந்து இசைவாய் இணைக்கும்
நம் எண்ணங்களை..

தவிக்கும்பொழுதுகள் அற்புதமாய் பூத்திருக்கும்
அந்திமாலையில் அவளின் வருகையில்..

ஆனந்தமாய் அழகூட்டும் அவளின் அருகாமை
அந்நியப்பட்டு போகும் அந்திமாலையின்  பொழுதுகள்

பூவாய் மென்னிதழ் புன்னகையில் பூத்தஅசைவும்
மொழியென்று என் விழிகள் அறியும்..

நீண்ட பொழுதின்  காத்திருத்தலில் மெல்லிய
இருக்கங்கள் கூடுதாலாகிபோகிறது தனிமையில்..

மணம்வீசும் குழலின் கூடிய விரல்கள் வீணையாய்
மீட்டுவதில் மெய் மறந்துதான் போவாய் அப்பொழுதெல்லாம்
நீ….என் மடிமீதினில்….        

நினைவுகளில் கூடுவோம் வாழ்வினில் கூடுதாலாகி 
போகின்ற நாட்களை எதிர்க்கொண்டுகாத்திருக்கிறேன்
 உனக்காக……


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

ஏக்கம்.....................





#உலக_கவிதை_வாரம்


ஏக்கம் வறண்ட விழிகள் 

புதைமணலாய் புதைந்து 

போகிறது பூத்த பூக்கள்.. 

வறண்ட வானமும் வெடித்த 

நிலமுமாய் வாழுமிந்த

முகங்கள் சிரிக்க தெரியாத 

சில்வண்டுகள்.. 

சிதைந்து போன தாயகக்கனவுகள் 

துணிச்சலோடு உறவை என்றாவது 

சந்திப்போம் என்று வாழும் இந்த 

உயிர் பூக்கள்.. 

விதைக்க விதையின்றி 

பேரிளம்பெண்ணாய் திருமண கனவுகள்

நோக்கி பூத்து கிடக்கும் இந்த

சிரிப்பு மறந்த பூக்கள் சிதைக்கும்

செல்லும் இப்படியே .. 

துக்கங்கள் தொண்டைக்குழியை 

அடைக்கட்டும் துன்பங்கள்\ 

எங்களை தொடரட்டும் பிழைப்பின்றி 

வாழ வழியின்றி  கிடந்து மக்குகிறோம்\ 

சொந்த மண்ணிலே ஆனால் 

அதுதான் தெரியவில்லை சொந்த மண் 

எது என்று.. அ--கதி(களாய்)யற்று 

கிடக்கிறோம்…



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்


#உலக_கவிதை_வாரம்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்
தைரியமற்று போகும் நிஜங்கள்
உயிர் துளியாய் இதய இசையாய்
உன் நினைவுகள்

றுக்கப்பட்ட பொழுதிலும்மனம்
முழுதும்மாற்றும் திறனின்றி
உலாவும் என் நினைவுகள்
உனக்குள்ளே…

வெறுப்புகள் கூடுதலாக்கபார்வையை 
வேறுபுறம் திருப்பும் உன்எதார்த்தங்கள்
இதழ்களிலே தவிப்புடன் கூடிய
துடிப்புகள்

ணைபிரியா தண்டவாளமாய்இணைந்தே
வரத்துடிக்கும்ரயிலின் வருகை போல்
சிநேகித்த உன்னைமறப்பதேது...

தொடரும் பொழுதுகளும்விடியலும்
புது கோலங்கள்போடப்போகிறது -
என்வாழ்வில் கனவுகளில்..

ரசிய வார்த்தைகள் உன்னுள்
உரமாக வில்லையா
விழிகளின் கூடல்கள்
உன்னுள்விதைக்கவில்லையா
தொடல்களில் தழுவல்கள்
தடங்களாகவில்லையா

ன்னை மறக்கலாம் தவரென்று
தெரிந்தும் என்னை மறக்கலாம்
தடங்களை மறக்கலாமா?

யிர் தேடும் விடைகள் உனக்குள்
கூடுதலாய் கூடத்தான் செய்கிறது
இருந்து மறந்துதான் போகிறாய்..
கேட்பாரற்று நானிருப்பதால் ...

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

உனைபோலத்தான் காற்றும்...-




செவிகளின் இன்பமா நீ

தேடியலைகிறது உன் 

குரலின் வசீகரத்தை ..

மலரிதழின் தன்மையா நீ

சுகந்தமளிக்கிறாய்

மனதிற்கு இதமாய்..

மாலைப்பொழுதின் வனப்பா நீ

சுழலவைக்கிறாய் என்னை..

கிறங்க வைக்கிறாய் ..

கார்குழலை ஒட்டு மொத்தமாய்

குத்தகை எடுத்தவளா நீ 

கார்மேகமாய் சுருட்டுகிறாய்

என்னிதயத்தை .

தெளிந்த நடையில் அழகான

பார்வையில்அள்ளிப்போகிறாய் 

பொத்தி வைக்கிறாய் என்னை

தொட்டு தழுவுகிறேன் காற்றை

தொடுதலில் காற்றும்

உனை போலவே வீசிவிட்டு

செல்கிறதுபார்வையை..!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

தீவிரவாதியாகிறேன் ..!






செழித்திருக்கும் மல்லிகை 

தோட்டத்தில்


சூழ்ந்திருக்கும் தேனிக்களின் 


கூட்டத்தில்


முந்தியும் பிந்தியுமாய் சேமிக்கும் 


அறை நோக்கி


விர்ரென்று பறக்கும் ”ஜெட்” டாக 


பறந்து செல்கிறது 


என் பொழுதுகள் ...


உன் வருகைக்காகவே..!!


மல்லிகையின் வாசம் சூழ்ந்திருக்கும்


கார்குழலில் இணைந்திருக்கும் 


சங்கு கழுத்தில் வழியும் 


வியர்வை துளி .உன் ஒற்றை 


மூக்குத்தியாய் மின்னுகிறது 


ஒளி வெள்ளத்தில்..!!


பொட்டு பொட்டாய் பட்டென 


விரியும் பருத்தி பஞ்சிற்கென 


காத்திருக்கும் கிள்ளையாய்


என் காத்திருப்பின் கவனம் 


மொத்தமும் சிதறி தெறிக்கும் 


மெர்க்குரியாய் உன் அள்ளமுடியா 


அடுக்குப் புன்னகையில் அமிழ்ந்து 


போகிறது. அமிழ்ந்ததை அள்ளி 


கொட்டினாலும் தீராத அன்பு 


உன்மேல் தீவிரவாதமாய் 


என்னை முடக்கி போடுகிறது 


அடியே தீவிரவாதியாகிறேன் 


உன்னால் உனக்குள்...!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...




கட்டங்களுக்குள் கட்டிடங்களுக்குள்,

கணிணிக்கு முன் கவிழ்ந்தமுகங்கள் ..!

சிதறும் எண்ணங்கள் சிதையும் மனங்கள்..!

பொருளாதார நிலை மட்டுமே உயர்வுஎன

தேடும் சமூகத்தில் கணநேரமும்தனக்கின்றி

உழைக்கும் மெய் முகங்கள்..!

மறக்கின்றது  மெய்யை..!

காணாமல்  கரைந்து போகிறது ,

விழி தேடும் சொந்தங்கள் ..!!

கனாக்களில்  மட்டுமே நிதர்சனம்..!!

இதுதான் இன்றைய பெண்மை..!!

ஏதும் எதிர்பார்ப்பின்றிஉழைக்கும்  

                 எம்மக்களுக்கு

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

பிஞ்சு மனம்.....




விரல்களில் சிக்குண்டு 
வெளிவர முடியா பிஞ்சு குழந்தை 
தவிக்கின்றது விளையாட ..!
தாயின் கைபிடித்து பள்ளிசெல்லும்
பிஞ்சு..!

மூச்சு முட்ட வியர்வை வழிய
மூட்டை தூக்கி எட்ட
நடைபோடும் பிஞ்சுகள்
தூக்கத்தில் சிரிக்கிறது..
ஒடி விளையாடுகிறது
கனவினில்  ……!

தாய் தரும் அனைத்தும் பள்ளி
இடைவேளையில்.! 
கடித்து மென்று தின்றுவிடுகிறது
குப்பைகூடைகள் ..!
வகுப்பறையில் நடந்து நடந்து
பழகும் ஆசிரியையின் பார்வை
மறைவினில்…!

காய்ந்த மையும்,கலைந்த தலையுமாய்
கண்ணிரண்டும் விளையாட்டு
மைதானத்தில் வட்டம்போட
முடிந்தது வகுப்பு....!
ஏங்கும் மனம் எதிர்பார்க்கும்
தாயின் வரவை..!

கைவிரலில் இணைந்த சுகம்
கதைப்பேசுகிறது தாயிடத்தில்
அவிழ்த்து விட்ட கன்றாய் ஆட்டம்
போட்டபடி ..!

  
காலையும் மாலையும் இல்லையெனில்
பிரிவென்பதே இல்லை
அம்மாவிடமிருந்து..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

ஐம்பெரும் காப்பியமாய்...





இமை சொட்டும் நீர் சிதறிப்போனது..! 

விழிக்குள் ஒளிர்ந்த வெண்முத்தை 

கண்ணுற்ற 

அடர் மழையும் சிலிர்த்தது..! 

அள்ளி சென்ற காற்றும் 

மெல்ல கிள்ளி சென்றது..! 

துள்ளிசென்ற குடையும் 

மேனி நனைய சிறகணிந்து 

காற்றில் இணைந்து சென்றது.! 

கடந்து சென்ற கார் முகிலும் 

இடியாய்சத்தமிட்டு சென்றது.! 

அழகின் தேவதையை ஒரு 

பார்வையில் கிள்ளிக்கொள்ள 

மின்னலும் சுற்றி சுற்றி சுழன்றது..! 

ஐம்பெரும் காப்பியமாய் 

கண பொழுதினில் கரைந்து போனாள் 

கன்னியவள்எனக்குள்..!!

  

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

மெய் வளர்த்தேனடி....




சுழன்றோடும் நதியில்
பொங்கிடும் ஊற்றாய்
சிலிர்த்திடும் நுரையின்
தீற்றலில் உன் முகம்
நான் கண்டேனடி..!!

வளைந்தோடும் நதியின்
நடையின் சுழிப்பில்
உன் இதழின் சுழிப்பு
நான் கண்டேனடி..!!

உள்வாங்கும் சுழலில்
உன் இமையிரண்டும்
சுகமாய் சேருவதை
நான் கண்டேனடி..!!

ஊர்வந்து சேர்ந்தேனடி
உனைகாண உவகையில்
உன் பூரிப்பை நான் காண
வந்தேனடி..!!

ஓளித்தீற்றலாய் உன்னுடன்
ஓர் இணை கண்டதும்
உன்பொய்யான காதலை
மெய்யென கொண்டு
மெய் வளர்த்தேனடி…
வீணாய்ப்போனேனடி..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

தைரியமற்ற....




காற்றின் பலம் புழுதியின்
வீச்சில் கலைந்து போகிறது ..!!

காதலின் பலம்பிரிவின்
இடைவெளியில்சோர்ந்து போகிறது..!!


நெஞ்சக்கூடு விம்மித்தணிகிறது
தைரியத்துடன் கூடிய பயத்தில் 
கடைசியிலாவது வருவாய் 
எனும் நம்பிக்கை..!!


சுழல்கிறது காலம் 
மின்மினிபூச்சியாய்..!!

காலத்திற்கும் மதிப்பில்லை
காதலுக்கும் மதிப்பில்லை
உன் அகராதியில்..!!

கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Friday, February 21, 2014

செங்கற்சுவர்கள்.....


விரல்களில் அடிப்பட்டு வழியும் 
பிஞ்சு அடிமைகளின் குருதி 
கொண்டு சிவக்கிறது….!

விழி மூடிய முதலாளியின்
கனவில் குரூரமாய்
குதறிடும் நாய்கள்……!

பனைஓலையில் பாய்ந்தோடும் 
பல்லியை காட்டி 
விளையாடும் பிள்ளைகள் இருளில்…!

காய்ந்த தேங்காய் வட்டுக்களை
சுரண்டும் தாய்மை…!

காய்ந்து வற்றிய மார்பில் ஈரம்
தேடும் ஓர் உயிர்..!

கனத்த மழையில் பிசைந்த மண்ணும் 
பிரிந்துதான் போகிறது..!

பனை ஓலையில் சொட்டும் துளியின் 
ஒலியில் நாளை வேலைஇல்லை
என மகிழும் தாய்மை..!

மழையை சபித்தபடி 
விறைப்பாய் வெள்ளுடை அணிந்தவன்..! 


அடுக்கி வைத்த செங்கற்சுவர்கள் 
கலவைகளுக்கு இடையே 
வண்ணம் மாறித்தான் போனது..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Thursday, February 20, 2014

வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது..!!




தடங்கள் தட்டுப்படும்
தனை மறந்து சுயதழுவலில்
சில நேரங்களில்..!!


துணிவற்ற மனிதர்கள்
மனதை ஊன்றுகோலில்இருத்தி 
தெளிவாக இருப்பதாக சொல்லி
உலாத்திக்கொண்டிருக்கிறார்கள்..!!


ஓர் பொழுதில் உழன்றுவரும்
உணர்வுகள்
மெளன நதியாய்மெல்ல ஓடி
தின்று தீர்க்கும்வாழ்வின்
பொழுதுகளை


எண்ண அலைகளின் ஓட்டத்தில்
ஒத்து போகும் குரல்களில்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்...!!



வண்ணமயமாய் ..விழி தெளிக்கும் சாரலாய்..
தழுவும் தென்றலாய்..!!
வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது
அவரவர்களின் எண்ணச்சிதறல்களில்...!!

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்..

Wednesday, February 19, 2014

"நானிருக்கேன் உனக்காக"



ஓட ஓட விரட்டியது
பல பொழுதுகளில்
பட்டினி கிடக்கச்செய்தது..!!


முன்னும் பின்னுமாய்
மோதி உதைத்திருக்கிறது..!!


வெள்ளத்தில்
மூழ்கச்செய்திருக்கிறது..!!


தாங்கமுடியா துயரை
தந்து அடித்து
துவைத்திருக்கிறது..!!


ஏதும் எண்ணமுடியா
சிறு குழந்தையாய்
கட்டிப்போட்டிருக்கிறது..!!


எது எப்படியிருப்பினும்
எதிர்கொள்ளநம்பிக்கை
கைவிடவில்லை...
காத்திருக்கிறேன்....!!


"நானிருக்கேன் உனக்காக"
எனும்ஒற்றை வார்த்தைக்காய்..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Wednesday, February 12, 2014

புதியதாய்....












உதிரும் இலைகளை மறந்த
தளிர்க்கும் மரங்கள்….
புதியதாய் உற்சாகத்தில்..!!

வெறுக்கும் விடியலை மறந்த
 நிலவும் புதியதாய்.. 
ஒவ்வொரு நாளிலும்..!!

காற்றில் வீசியெறியப்பட்டு
மரம் மறந்த விதைகள் ..
புதுவிடியலை நோக்கி..!!

வண்டு துளைத்த பொந்துகளில் 
தனை மறந்த காற்றும் …
புது ராகம் இசைக்க..!!

பருவத்தில் பொழியும் மழையும்
தனை மறந்து புது உற்சகத்தோடு..
உயிர்களை உயிர்பிக்க..!!

காத்திருக்கிறேன் எனை மறந்த..
உன்னை எதிர்க்கொண்டு..
புதியதாய் பூபாளம் இசைக்க..!! 


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்..

Tuesday, February 11, 2014

மங்கியதோர் மாலைப்பொழுதினில்...!!




மண்ணிலே வெண்நிலவு

அவளைபார்த்த விழிகளில்

வேறு ஏதும் தெரியவில்லை


ஏட்டிலே ஏதும் புரியவில்லை

ஏனிப்படி என ஏங்கியே தவித்தது 

தயங்கியே நின்றது மனது


உயிர்கொடுத்தாள் என் விழிகளுக்கு

அவளையே சிறைக்கொண்டேன் என்னுள்


ஏகாந்த பொழுதுகளாய்  அவளை 

எண்ணிய நாட்கள்  கடந்து சென்றது

காணவில்லை அவளை


நேசம் தான் என்னுயிர் என்றவள்

சொற்களில் போதையேற்றி

என்நெஞ்சில் பாட்டெழுதியவள் 

மங்கிய மாலைபொழுதின் வேளையில்

மஞ்சள் மலர் சூட என்

மடி சாய வருவாளோ..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்..

Monday, February 10, 2014

சிறைப்படுவேன் உன்னுள்...


சிணுங்கும் 

செல்லக்கொஞ்சலில்

சிதறிடுவேன் ..!!

பார்க்காமல் பார்க்கும்

உன் விழியழகில் 

மயங்கிடுவேன்..!!


துளி பார்வை போதும்

துவளாமல் இடையணைப்பேன்..!!

துவண்டுவிழும் கூந்தலை

அள்ளி அணைத்து ரசித்திடுவேன்..!!

தனிமையில் பொங்கும்

நினைவுகளில் சுகப்படுவேன்..!!

என்னை சுற்றும் உயிராய்

நீ என்அருகினில் இருந்தால்

சிறைப்படுவேன் ..!!

உன் அழகினில் ..!!


கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

எதோ ஒன்றை சார்ந்தே அதன் ஈர்ப்பும்....





வாடிய பூக்களுக்காக

புன்னகைக்க மறப்பதில்லை..பூக்கள்..!!

உதிரும் இலைக்காக

துளிர்க்க மறுப்பதில்லை மரங்கள்..!!

விடியல் புறக்கணிக்கும் இரவை

அந்தி வரவேற்க மறக்கவில்லை..!!

சிலமணித்துளிகள் தழுவும் பனித்துளிகளை

இலைகள் வெறுக்கவில்லை..!!

இடைவெளியோடு கிடக்கும் நினைவுகள்

இயல்பை மீறுவதில்லை..!!

இயல்பை மீறும் பொழுதுகள் மகிழ்ச்சியால்

ததும்பி கிடக்கிறது..!!


கவிதையாக்கம்

**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

Thursday, February 6, 2014

அரும்பிய புன்னகை..


 




வழியிருந்தும் போக

மனமின்றி சிறைபட்டு

கிடக்கும் நெஞ்சத்தின்

நினைவு ..!!

தேங்கிய நதியில்

சிதறிய நினைவுத்துளிகள்

பாதை வகுத்தது

விழி வழியே ..!!!

வழிந்த நீரில்

சுவை தேடிய

செவ்விதழ்கள்

மலர்ந்தது ...!!

அரும்பியது புன்னகை..!!

நெருங்கியது நீ..!!



கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**


Wednesday, February 5, 2014

வார்த்தை தேடுகிறேன்....

Photo: இடைவெளி தீர வழி என்ன என்னவளே..!!
என் அன்பு மொத்தமும் முத்தமாய்
முதலீடு வைத்ததாலா??
விட்டில் பூச்சியானதம்மா மொத்த 
அன்பும்  முத்தமாய்
வினாடிகள் கூட எனக்கானதாக இல்லை
மொத்தமும் உனக்கானதாய் இருக்க
வார்த்தை தேடுகிறேன் உன்னிடம் 
என் மனம் சொல்ல ..!!!

கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**


இடைவெளி தீர வழி என்ன என்னவளே..!!

என் அன்பு மொத்தமும் முத்தமாய்


முதலீடு வைத்ததாலா??


விட்டில் பூச்சியானதம்மா மொத்த 


அன்பும் முத்தமாய்


வினாடிகள் கூட எனக்கானதாக இல்லை


மொத்தமும் உனக்கானதாய் இருக்க


வார்த்தை தேடுகிறேன் உன்னிடம் 


என் மனம் சொல்ல ..!!!

கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**