Tuesday, March 25, 2014

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்


#உலக_கவிதை_வாரம்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்
தைரியமற்று போகும் நிஜங்கள்
உயிர் துளியாய் இதய இசையாய்
உன் நினைவுகள்

றுக்கப்பட்ட பொழுதிலும்மனம்
முழுதும்மாற்றும் திறனின்றி
உலாவும் என் நினைவுகள்
உனக்குள்ளே…

வெறுப்புகள் கூடுதலாக்கபார்வையை 
வேறுபுறம் திருப்பும் உன்எதார்த்தங்கள்
இதழ்களிலே தவிப்புடன் கூடிய
துடிப்புகள்

ணைபிரியா தண்டவாளமாய்இணைந்தே
வரத்துடிக்கும்ரயிலின் வருகை போல்
சிநேகித்த உன்னைமறப்பதேது...

தொடரும் பொழுதுகளும்விடியலும்
புது கோலங்கள்போடப்போகிறது -
என்வாழ்வில் கனவுகளில்..

ரசிய வார்த்தைகள் உன்னுள்
உரமாக வில்லையா
விழிகளின் கூடல்கள்
உன்னுள்விதைக்கவில்லையா
தொடல்களில் தழுவல்கள்
தடங்களாகவில்லையா

ன்னை மறக்கலாம் தவரென்று
தெரிந்தும் என்னை மறக்கலாம்
தடங்களை மறக்கலாமா?

யிர் தேடும் விடைகள் உனக்குள்
கூடுதலாய் கூடத்தான் செய்கிறது
இருந்து மறந்துதான் போகிறாய்..
கேட்பாரற்று நானிருப்பதால் ...

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

No comments:

Post a Comment