Tuesday, March 25, 2014

ஐம்பெரும் காப்பியமாய்...





இமை சொட்டும் நீர் சிதறிப்போனது..! 

விழிக்குள் ஒளிர்ந்த வெண்முத்தை 

கண்ணுற்ற 

அடர் மழையும் சிலிர்த்தது..! 

அள்ளி சென்ற காற்றும் 

மெல்ல கிள்ளி சென்றது..! 

துள்ளிசென்ற குடையும் 

மேனி நனைய சிறகணிந்து 

காற்றில் இணைந்து சென்றது.! 

கடந்து சென்ற கார் முகிலும் 

இடியாய்சத்தமிட்டு சென்றது.! 

அழகின் தேவதையை ஒரு 

பார்வையில் கிள்ளிக்கொள்ள 

மின்னலும் சுற்றி சுற்றி சுழன்றது..! 

ஐம்பெரும் காப்பியமாய் 

கண பொழுதினில் கரைந்து போனாள் 

கன்னியவள்எனக்குள்..!!

  

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

No comments:

Post a Comment