Monday, February 10, 2014

சிறைப்படுவேன் உன்னுள்...


சிணுங்கும் 

செல்லக்கொஞ்சலில்

சிதறிடுவேன் ..!!

பார்க்காமல் பார்க்கும்

உன் விழியழகில் 

மயங்கிடுவேன்..!!


துளி பார்வை போதும்

துவளாமல் இடையணைப்பேன்..!!

துவண்டுவிழும் கூந்தலை

அள்ளி அணைத்து ரசித்திடுவேன்..!!

தனிமையில் பொங்கும்

நினைவுகளில் சுகப்படுவேன்..!!

என்னை சுற்றும் உயிராய்

நீ என்அருகினில் இருந்தால்

சிறைப்படுவேன் ..!!

உன் அழகினில் ..!!


கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

1 comment: