Wednesday, February 19, 2014

"நானிருக்கேன் உனக்காக"



ஓட ஓட விரட்டியது
பல பொழுதுகளில்
பட்டினி கிடக்கச்செய்தது..!!


முன்னும் பின்னுமாய்
மோதி உதைத்திருக்கிறது..!!


வெள்ளத்தில்
மூழ்கச்செய்திருக்கிறது..!!


தாங்கமுடியா துயரை
தந்து அடித்து
துவைத்திருக்கிறது..!!


ஏதும் எண்ணமுடியா
சிறு குழந்தையாய்
கட்டிப்போட்டிருக்கிறது..!!


எது எப்படியிருப்பினும்
எதிர்கொள்ளநம்பிக்கை
கைவிடவில்லை...
காத்திருக்கிறேன்....!!


"நானிருக்கேன் உனக்காக"
எனும்ஒற்றை வார்த்தைக்காய்..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

2 comments: