Thursday, February 20, 2014

வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது..!!




தடங்கள் தட்டுப்படும்
தனை மறந்து சுயதழுவலில்
சில நேரங்களில்..!!


துணிவற்ற மனிதர்கள்
மனதை ஊன்றுகோலில்இருத்தி 
தெளிவாக இருப்பதாக சொல்லி
உலாத்திக்கொண்டிருக்கிறார்கள்..!!


ஓர் பொழுதில் உழன்றுவரும்
உணர்வுகள்
மெளன நதியாய்மெல்ல ஓடி
தின்று தீர்க்கும்வாழ்வின்
பொழுதுகளை


எண்ண அலைகளின் ஓட்டத்தில்
ஒத்து போகும் குரல்களில்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்...!!



வண்ணமயமாய் ..விழி தெளிக்கும் சாரலாய்..
தழுவும் தென்றலாய்..!!
வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது
அவரவர்களின் எண்ணச்சிதறல்களில்...!!

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்..

2 comments: