Friday, December 30, 2011




புதிதாய் நீ..

ஒவ்வொரு முறையும்
உன்னை அதிகமாய்
புரிந்து கொள்கிறேன் ..ஆழமாய்
நெருங்குகிறேன்
உன் சிறு சண்டைகளுக்கு பின்..
உன்னையும் என் போலவே எண்ணுகிறேன்
நீ கொண்ட அதீத பாசம் என்னை
சண்டைக்குள் இழுக்கிறதே ..அதனால் என்னவோ
மௌனமாய் உன் முன் ...உன் மூச்சு காற்றின்
நெருக்கத்தில் இடை வளைத்து,
என் உயரம் வளைத்து ... உன்னை
என் இதழ் சேர்த்து ஆழமாய் நெருங்குகிறேன் ..சண்டைகளிணுடே..
புதிதாய் நீ ஒவ்வொரு முறையும் ....

Wednesday, August 24, 2011


குறுகுறு பார்வை ..
கேள்விக்கு சீண்டலான பதில்..
கைபேசியும்.கையடக்க கணினியும் ..
காணாமல் தேடும் மனம் ..
பார்க்கும் பார்வையிலெல்லாம் காண..
...சிறு தகவல் எதிர் கொண்டு கை பேசி கிடக்க ..
குரல் கேட்குமோ என நினைக்க ..மொழி...
என்ன ..மொழி .. எதை எதிர் பார்க்கிறது மனது.
.எந்த அலைவரிசையை எதிர் பார்க்கிறது... .... எண்ணஅலைவரிசையில் ராகம் பாட

..தனிமை...மட்டுமே யடி கண்ணே ....
நொடி பொழுதில் ,இவையனைத்தும் காணவில்லை...
விழித்தேன் ..அணைத்தபடி மகளே அருகினில் .. ....

Thursday, August 18, 2011



நிலவை கவிழ்த்த ...
ஆதவனின் வருகை கண்டு ...
வெளுத்த மேகங்கள் கூடி ....
நிலவில்லாத மேகத்தின் துணை கொண்டு...
கவிழ்த்தன ஆதவனை .....
...இருள் சூழ்ந்து...இதமான தென்றல் வீசி...
ஒய்யார மழை ....
சிரித்து,,,,
துவண்டு...வாடி..உதிர்ந்து ..தனியனாய் .......
சிலிர்த்து ..தளிர்த்து புதியவனாய் ......
மழை ..


Tuesday, July 12, 2011


உயரங்களில் அளவில்லா வானம் ...
வானங்களில் மட்டுமே வசப்படும் ...மேகம்....
மேகம் மட்டுமே மெய்யாக ...
மெய்யான அன்பு மட்டும் ..வானத்தை போல ....

Tuesday, May 3, 2011

நீ அறிய முடியா நிலையில்...


எதை எதிர்பார்கிறேன்... வசந்தத்தை வாழும் காலங்களில் ....
துளிர்த்து அடர்ந்து ,விழுதுகளுடன் தோப்பாய்
....வாழ நினைய ..

...மழலை ரசித்து ...........தன்னை நினையாது..

உயிராய் வளர்த்தவளே..
உயிராய் மட்டுமே வாழ்கிறேனடி ..
உயிர் காதல் நினைய...
மறந்து உனை.....
தோப்பாகவில்லையடி நான்....
உயர் காதல்..உயிர் காதல் ..உடல் பொசுக்க கருக..............
-மறந்திருந்தால்..உன் உயிராய் இருந்திருப்பேன் ..
எனை ரசிக்கும் உனை ரசித்து ...
..உடல் துறந்து நிலையில்...
நான் ..நீ அறிய முடியா நிலையில்...
மீண்டும் வருவேனடி..
உன் மகளாய் மட்டும்...
வாழ்வேனடி
...
விழுதுகளுடன் தோப்பாய்....
மறு ஜென்மம் என்றிருந்தால்...

Wednesday, April 20, 2011

எழுதபடாத விதி.....



..பசியில்லா சாப்பிட முடியல ..ஆனாலும் வேலைக்கு செல்கிறோமே..நாம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் கவனிசக்காகனுமே ..இது வேலை செல்லும் பெண்களின் எழுதபடாத விதி.... தலை சுற்றும் வாந்தியுமாக..அதிகபடியான வயிற்று வலியுடன் எழுந்தேன் ..அன்றிய பயணத்தை தொடங்க...வலி.. தொடர்ந்து அதிகமானதால் குடும்ப மருத்துவரை பார்க்க சென்றேன்.கொஞ்சம் வசதிதான் ..அதனால் வலியுடன் காரில் பயணம்..சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்சிகுள்ளகியாது..உடனே மருத்துவமனியில் அட்மிட் ஆகுபடி சொல்ல இன்னும் வலி அதிகமானது கண்ணில் நீருடன் ..அவர் எழுதி கொடுத்த மருத்துவமனைக்கு உடனே பயணம்...அலை பேசியில் அம்மாவுக்கும் ..கணவருக்கும்.தெரியபடுத்த..
ரிசப்ஷன்ல எங்கள் மருத்துவர் தந்த கடிதத்தை கொடுக்க எந்த விவரமும் கேட்காமால் அட்மிட் செய்யப்பட்டேன்...எனகென ஒரு தனி ரூம் கொடுத்து என் சம்பத்தப்பட்ட விவரமெல்லாம் கேட்டாங்க..கண நேரத்தில் ..சில மருத்துவர்கள் என்னை வந்து பார்த்து சென்றனர்..இன்னும் கணவரும் அம்மாவும் வரவில்லை..வலியுடன் பயத்துடன் இருக்க..யார் வந்திருக்காங்க உங்களுடன் கேட்க இன்னும் பயம் கண்ணில் தெரிய..சொல்லுங்க என்னிடம்...இல்ல 60,000 பணம் உடனடியாக செலுத்தவேண்டும் என் கூற ..என் அலை பேசியில் கணவரை தொடர்புகொள்ள அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் ....என் அறையின் கதவு திறக்க என் கணவர்...
என்ன சொன்னங்க என்ன என்ன என பதறுவார் என எதிர்பார்த்திருந்த எனக்கு அவரின் ஆபீஸ் போலவே ம்ம்.என்ன சொன்னாக அதிகார தோரணையில்..
சொன்னது தான் தாமதம்..இன்னும் வலி அதிகரிக்க ..“ட்ரீட்மெண்டுக்கான பணத்தை இப்பதே காட்ட வேண்டும் என்று சொல்ல ..என்னவென்றே தெரியாமல் அவர்...

இதன் நடுவில் மருத்துவமனையில் வேலை பார்பவர்கள் அவர் அவர் வேலையின் படி அணைத்து டெஸ்ட் ம எடுக்க ஆரம்பிக்க ..சில மணி நேரங்களில் கணவரை தனியாக அழைத்து அவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி அது வெடித்து விடும் நிலையில் இந்து வந்திருகிறார்கள் உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவே .
பணத்தை செலுத்துங்கள் என கூற .இன்று மாலை அல்லது நாளை kaali வைத்து கொள்ளலாம் என கூற..அவரும் பணம் செலுத்தி பின் தான் என்னை வந்து பார்த்து சொல்ல நான் இன்னும் அரள...
என் ஜாதகப்படி 44 வயதில் கண்டம்னு என் தாத்தா சொன்னதும அதை நினத்ருந்த எனக்கு இந்த விஷயம் மிக பெரிய பாதிப்பை உண்டு செய்ய..அம்மாவும் வந்து சேர்ந்தார் அங்கு.. குணமாகணுமே..
அன்று முழுதும் என்னை maruthuvarkalin கண்காணிப்பில் வைத்திருந்த maalai ஆபரேஷன்.
உள்ளே செல்லும் நேரம் என் நினைவில்
கண்களில் மின் மினி பூச்சி பறக்க என்னை மறக்க ...
என்னுள் என்னை தாய்மை அடைய செய்த அந்த உறுப்பையும்
அதன் கூடவே வளர்ந்திருந்த- அதையும் அகற்றி விட்டனர்.
கிட்டத்தட்ட ஒன்னே கால் மணி ...நேரம்
ammavukku paarkka ..அனுமதி கொடுக்க அம்மா சொன்னது..
அந்த அது 2 கிலோ மேல் எடை இருந்ததுடி அதை பார்க்க மனது என்னமோ செய்தது..
இதன் காரணமாக தான் உன்னால் சில வருடங்களாக சரியான உணவு உட் கொள்ள முடியவிலை ..பசி எடுபதில்லை..என அம்மா சொன்னது நினைவில் வர , அடுத்த நாள் காலை கண் விழிக்கிறேன்..
குடும்பத்தில் உள்ள அனைவரும் என் முன்னே... இது ஒரு வழியாய் முடிய
5 நாளில் வீடு செல்ல பணம் நிறைய selavu ஆகி போயிருந்தது ..
ஒரு வழியை thaththaa சொன்ன கண்டம் தப்பி நான் வீடு வந்து சேர ஒரு மாதம் work செல்லாமல் வீட்டில் ரெஸ்ட்...

இதன் நடுவே ஆபீஸ் வேலைகள் வீட்டிலிருந்தே...சரி இங்கிருந்து செய்வதோடு..ஆபீஸ்ல join செய்தேன் ..

ஒரு சில மாதங்கள்...ஆபரேஷன் செய்த ஹோச்பிடல் டாக்டரும் மீண்டும் வந்து பாருங்கள் என கூற வில்லை ரெஸ்ட் எடுத்தால் போதும் என கூறி விட்டனர் அவர்கள் மருந்துகளுடன்....

அனால் அதன் பின்னr வலது கை சரியாக தூக்க முடியாமல் போக..திடிரென்று..உடம்பு முழுதும் ஒரு 5 வியர்க்க திடிரென்று உடல் முழுதும் சில்லிட்டு போக ..sila nerngalil நல்ல நிலைமையில் இருக்க பயந்து போனேன் அம்மாவிடம் சொல்லி .வருத்தப்பட..
ஆபரேஷன் செய்த மருதுவamanikku சென்ற பார்க்க அவர்கள் இதெல்லாம் ஹார்மோன்கள் inbalance என்று கூறி விட்டனர்..அதற்குரிய மாத்திரைகள்..
வலி அதிகமாக மருத்துவரை வீட்டின் அருகயே அணுக..அவர் சொன்னது சில்லிட வைத்தது என்னை.....
இந்த ஆபரேஷன் பிறகு கால்சியம் குறைய உங்களுக்கு elumbu தேய்மானம் எனவே உங்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கணும் சரியாகும் என் சொல்ல .....
அதை தொடர்ந்து நானும் அதற்கு ஒரு வாரம் டைம் எடுத்து அந்த மருத்தவரை anuki adharkunnadana marunthukal.. eduthukolla ...sila naatkalil
back pain.. ..அதன் காரணமாக மீண்டும் அந்த மருத்துவரை அணுக அவர் kooriyadhu .பெண்களுக்கு கர்ப்பப்பை ஆபரேஷன் நடந்தால் இது மாதிரியெல்லாம் வரும் என் கூற.. ஐயோ பனிரெண்டாவதில் மாவட்டத்தில் முதன்மைன்மையாக வந்த எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்க... அதை விடுத்தது இன்ஜினியரிங் படிக்க ..இன்று ஒன்னும் புரியவில்லையே என நினைக்க...தற்போது back pain அதிகரிக்க மருத்துவர் சில மருந்துகள் கொடுக்க.. இதில் sariyaagavillayenil ..உங்களுக்கு mudhugu thandil ஒரு சிறிய ஆபரேஷன்...செய்ய வேண்டி இருக்கும் என கூற...ஐயோ அந்த கண்டமே நிறைவேறி இருக்கலாமே என நினைக்க.. "பெண்கlaai பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்" என்பதுதான் என் நினைவில் ......வலியுடன் மருந்துகளின் துணையுடன் officel ..அதிகாரியாக.. ..நடுத்தர வர்க்கம் அல்லவா ..எழுதபடாத விதி. நமக்கு

Tuesday, April 19, 2011

இதழ் சுவையறியா.....


ஒளி பரந்து விரிந்து வெண்மேகம் போல் பரவ ...
பரவசமானேன் காற்றென .சென்றேன் ..
ஒளி உரச என்னுள் ....சில்லென காற்று வருட..
சென்றேன் ஒளிக்குள் ..வெப்பமான உன்...
உயிர் காற்றை என் அருகே விடுத்து ..
இழுத்தணைத்து இதழ் வருட ....இறுக்கும் கரங்களுக்குள் தகிக்க....மெல்லிய இடை துவள.....உன் வாசனை என்னுள் ..
இதழ் சுவைக்க...மறுக்க இயலா நிலையில் ...
லயித்திருக்க ...நொடிகளும் நேரங்களாக மாற ..கரைந்தது....இதழ் மட்டுமல்ல இதயமும் தான் ..
ஒலியோடு மணி இணைய..வேகமாக ஒளி விலக ..காற்று முகத்தில் பரவ ..விலகி செல்கிறேன் ...ஒளிக்குள் மறைந்து ....
மறைகிறாய் நீ ..நீ மட்டும்..சென்று உயிர் கொல்கிறாய்..
இதழ் சுவையறியா என்னை ........
உயிர் காற்று தகிக்க விழிக்கிறேன் நான் ..கனவுகளில்....
விடை பெற்று நினைவுகளில் உயிர் ...
வாழ உன்னுடன் நிஜத்தில்..,!!!!!!

Monday, April 18, 2011

நிலை மறக்க செய்யடா



விண்மீன்கள் பாட ..நிலவு தூங்க ...
சத்தமின்றி ஓடி வந்தாயா...கோபக்கனலை காட்ட..
தென்றலை அழைத்திருக்கிறேன் செல் ..
வெண் மேகங்களில் மறைந்தோடி..
தூங்கும் அவள் அழகு காண்....
கோபம் கொண்டு தீய்த்து விடாதே ..
முழு அழகு காண அசந்து போவாய் ...
அழகு கண்டு நிலை மறந்து கோபக்கனலை விடுத்து ... இனிமையோடு வசந்த காலத்தில்..
தென்றலோடு இணைந்து நிலை மறக்க செய்யடா ....

Tuesday, April 12, 2011


என்று தணியும் இந்த தாயின் ....

ஓடி ஆடி...விளையாடி ... பள்ளி சென்றும் விளையாடி...
.பக்கம் அக்கம் தோழிகளோடு விளையாடி ...படிப்பை மறந்து...
பருவத்தில் பத்தில்..அடியெடுத்து வைக்க..படிப்பே ...கடிக்க முடியா கல்லுருண்டை ..
போல மாறி..விளையாட்டும்..அக்கம் பக்க தோழிகளும்.எங்கள் ராஜ்ஜியம் .என நினைத்து..
பள்ளி செல்ல மறுத்து ..
மொத்த விலையில் பழங்கள் எடுத்து அக்கம் பக்கம் கொடுத்து..
அதே தன் தொழிலாக கொண்ட தந்தை ..பிரம்பெடுத்து விளாச..
வாழைப்பட்டை காலில் கட்டி அவர் கொடுக்கும் அடியை ...சுகமாக பெற்று..
வீட்டில் இருப்பதையே சுகம் நினைத்த எனக்கு ...வரப்போகும் ..வலிகள் தெரியாமல் ..
தொடரும் ..............

Thursday, March 24, 2011




நினைவுகளின் சமுத்திரத்தில் சுழலாய்... சுனாமியாய் ...ஆர்ப்பரிக்காதே ..
நீந்தும் நினைவு மீன்கள் ...சிக்கி கரையில் ....
சென்று அனைத்தையும் வென்று அமைதியாய்.. ......மீண்டும்..நினைவுகளின் சமுத்திரத்தில் என்னுடனே...நிஜமாய் ....

Friday, January 21, 2011

அன்பு உன்னை அழிக்கும்




அதிகபடியான அன்பு உன்னை அழிக்கும்
அன்பு செலுத்தும் போதும் அது கிடைக்கும்போதும் சந்தோசப்படும் நாம் .
அந்த அன்பு அதிகபடியான அன்பாக மாறும் பொது...வெறுப்புக்கு மட்டுமே உள்ளகிறோம்..எதுவுமே அளவுக்குள் இருக்கணும்..அப்படிதானே..எல்லையை தாண்டும்போது.. எதுவும் நம்மை விட்டு சென்று விடுகிறது..அன்பு ஒரு பக்கம் இன்றி இரு பக்கத்திலும் இருக்கணும்..அது தாய் அன்பாக இருந்தாலும் தந்தை அன்பாக இருந்தாலும்...கணவன் மற்றும் பிள்ளைகள் அன்பாக இருந்தாலும்..
அதிகபடியான அன்பு..நம்மை விலகியே இருக்கவைக்கிறது..
பிறந்ததிலிருந்து கிடைக்கும் தாயன்பும் இன்னொரு பிள்ளை பிறந்த பின் மாறுகிறது.
கூட பிறந்தவர்களின் அன்பும் ஒரு கால கட்டத்தில் நம்மை விட்டு மாறுகிறது..
பழகும் நட்புகளின் உண்மையான அன்பு..சில சமயங்களில் எல்லை தாண்டுகிறது...

அன்பு மாறாமல் என்று..நிலைக்கும் .எப்போது...???
இது கேள்வி குறியாகவே உள்ளது..
இன்றிய கால கட்டத்தில் ..
கணவன் மனைவி அன்பும்..மாறுகிறது..நம்பிக்கை இழக்கும்போது ...சந்தேகம் ஆட்கொள்ளும்போதும்..
அன்றைய வாழ்கை நிலையில் பெண் சந்தேகப்பட்டாலும்..அது பெரிதாக எடுக்காமல் ஆண்கள் செய்வதே சரி என்று இருந்தது..
அனால் அப்போதாவது குடும்பம் வாழ்க்கை என்பது சரியான பாதையில் சென்றது ..
ஆனால் இன்றைய நிலைபாட்டில்..நம்பிக்கை அற்ற தன்மையாலும்.அதீத அன்பினாலும்..அனைத்தையும் இழக்கிறோம்.
பெண் என்று எடுத்துகொண்டால் அவள் வேலைக்கு சென்றாலும் அல்லது படித்தாலும்..எங்கு சென்றாலும் அவள் யாரிடம் பேசினாலும் அவளை தவறாகவே எடுத்துகொள்ளும் மனோபாவம் அதிகபடியான அன்பு செலுத்தும் கணவனுக்கு வந்து விடுகிறது .அதை புரிந்து கொள்ளும் பெண்ணின் வாழ்க்கை நிலை இந்த சமுகத்தில் சரியாக அமைகிறது..அனால் அவளுடைய நிலை கணவனை விட அந்தஸ்துள்ளதாக மாறிவிட்டால்..அவள் இந்த வாழ்க்கையே வேண்டாம் இந்த அன்பே வேண்டாம் என்று தன நிலை மாறிகொள்கிறாள்..அப்படி அவள் மாறும்போது..அவன் நிலையிலிருந்து மாறி கொலை காரனகிறான்...அல்லது..ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்ற அவப்பெயருடன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான்..
தயவு செய்து அதிகபடியான அன்பை மாற்றிகொள்ளுங்கள் இது சந்தோசமாக வாழ வைக்கும்..விட்டு கொடுத்து வாழுங்கள்.இது உங்களை இன்னும் அதிகமாக சந்தோசப்படுத்தும் .நிலையான அன்பு..நம்பிக்கையான அன்பும் வேருன்றி வாழும் காலங்கள் கடந்தும் .............................

Thursday, January 13, 2011








தை திருநாள் தமிழர் திருநாள்

தைப்பெண்ணே
வருக வருக
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்




தை திருநாள் தமிழர் திருநாள்

தைப்பெண்ணே
வருக வருக
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

Sunday, January 9, 2011

அவனும் கனவுகள் கொண்ட மனித இனம்தான்








தான் நினைத்தது தான் சரி என்று யோசிக்காமல்..
எப்போதும் மற்றவர்களின் கருத்தையும் அலசி பார்க்கவேண்டும்..
திருமணம் என்பது நமது சமுகத்தின் நம்பிக்கை..

அனால் இன்றைய காலகட்டத்தில்
அது தேவை படுவதில்லை.நம் இளைஞர்களுக்கு ..
படிக்கும்போதே காதல்..உடனே திருமணம்..தெரிந்தும் தெரியாமலும்...
வாழ்க்கைஎன்னவென்று தெரியாத வயதில் அது ஆரம்பித்து விடுகிறது..பெண் வளர்ந்த சூழல்.ஆண் வளர்ந்த சூழல்...இவை எல்லாமே ஒரு சிலமாதங்களுக்கு அவர்கள் நினைவில் இல்லை..அனால்..பிள்ளைகள் பெற்றதும்.பொருளாதாரமின்மை, இதன் காரணமாக பெண் வேலைக்கு செல்லும் போது அவளின் நிலை கண்டு ஏமாற்றும் உலகம்...இதன் விளைவு காதல் கணவனை மற்றவர்கள் முன் அவமானபடுத்துவது..அவன் சரியில்லை குடிக்கிறான் எதற்கும் லாயிகறவன் என்று குறை கூறுவது..இது என்ன?? இதுவே அவர்களின் பிரிவுக்கும்.. அது இந்த காதல் இனகவ்ர்ச்சிதான் என்று தெரிவதற்குள் அவன் வாழ்கை வீணாகிவிடுகிறது..அவன் பெற்றவர்களின் ஒரே வாரிசாக இருந்தால்..இன்னும் அவமானம் தான்..
இது ஒரு கால கட்டம்....
அனால் இன்றைய சூழல் ..
படிக்கும் போதும் வேலை செல்லும் போதும் வரும் காதல் சாதிக்கிறது..ஒரு 75 % விழுக்காடு
அனால் இன்றைய படித்த இளைஞர்களின்/இளைஞிகளின் நிலை
உனக்கு பிடிகிறதா .எனக்கு பிடிகிறதா சேர்ந்து வாழலாம்..
சேர்ந்து அனுபவிக்கலாம் தவறில்லை..அனால் மணம் என்று வந்தால் அவர் அவர் வீட்டின் நிலைபாடிற்கேற்ப
வேறு ஒருவனை மணம் செய்து கொண்டு உள் நாட்டிலோ ..வெளி நாட்டிலோ வாழ்கிறார்கள்...

ஒன்று மட்டும் புரிவதில்லை..எனக்கு
ஏன் மணம் செய்யும் பொழுது நம்மால் ஏற்று கொள்ள முடிந்த நம் காதலன் ..பின் கணவனான பிறகு அவன் செய்யும் எதையும் ஏற்று கொள்ள முடிவதில்லை அன்று அவன் சிகரட் பிடித்தாலும் சுப்பர் தான். மது குடித்தாலும் சூப்பர் தான் அவனை நீயே தூண்டி விட்டு இது செய் நீ இப்படி இருப்பாய்..அதை செய் நீ அப்படி வருவாய் என்று அவனை அன்றே உன் கண் சொல்லும் வேலைக்கு அடிமை படுத்திவிட்டாயே ..அவனுக்கும் தனி சிந்தனைகள் இருக்கும் என்றாவது நினைத்திருப்பயா ..அவனும் கனவுகள் கொண்ட மனித இனம்தான்.. இதில் பிள்ளை இருந்தால் இன்னும் அவள் பாடு கொண்டாட்டம் தான்..அதை அவன் கண் முன் காட்டாமல் அவள் அழைத்து சென்று விடுவது..அவனே வேண்டாம் அவனுடிய பிள்ளை மட்டும் தேவையா .காதல் என்ற ஒரே தவறு தான் அவன் செய்தது..அனால் அவன் நிலை ???//