Tuesday, March 25, 2014

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...




கட்டங்களுக்குள் கட்டிடங்களுக்குள்,

கணிணிக்கு முன் கவிழ்ந்தமுகங்கள் ..!

சிதறும் எண்ணங்கள் சிதையும் மனங்கள்..!

பொருளாதார நிலை மட்டுமே உயர்வுஎன

தேடும் சமூகத்தில் கணநேரமும்தனக்கின்றி

உழைக்கும் மெய் முகங்கள்..!

மறக்கின்றது  மெய்யை..!

காணாமல்  கரைந்து போகிறது ,

விழி தேடும் சொந்தங்கள் ..!!

கனாக்களில்  மட்டுமே நிதர்சனம்..!!

இதுதான் இன்றைய பெண்மை..!!

ஏதும் எதிர்பார்ப்பின்றிஉழைக்கும்  

                 எம்மக்களுக்கு

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment