Monday, February 10, 2014

எதோ ஒன்றை சார்ந்தே அதன் ஈர்ப்பும்....





வாடிய பூக்களுக்காக

புன்னகைக்க மறப்பதில்லை..பூக்கள்..!!

உதிரும் இலைக்காக

துளிர்க்க மறுப்பதில்லை மரங்கள்..!!

விடியல் புறக்கணிக்கும் இரவை

அந்தி வரவேற்க மறக்கவில்லை..!!

சிலமணித்துளிகள் தழுவும் பனித்துளிகளை

இலைகள் வெறுக்கவில்லை..!!

இடைவெளியோடு கிடக்கும் நினைவுகள்

இயல்பை மீறுவதில்லை..!!

இயல்பை மீறும் பொழுதுகள் மகிழ்ச்சியால்

ததும்பி கிடக்கிறது..!!


கவிதையாக்கம்

**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

No comments:

Post a Comment