Tuesday, March 25, 2014

தைரியமற்ற....




காற்றின் பலம் புழுதியின்
வீச்சில் கலைந்து போகிறது ..!!

காதலின் பலம்பிரிவின்
இடைவெளியில்சோர்ந்து போகிறது..!!


நெஞ்சக்கூடு விம்மித்தணிகிறது
தைரியத்துடன் கூடிய பயத்தில் 
கடைசியிலாவது வருவாய் 
எனும் நம்பிக்கை..!!


சுழல்கிறது காலம் 
மின்மினிபூச்சியாய்..!!

காலத்திற்கும் மதிப்பில்லை
காதலுக்கும் மதிப்பில்லை
உன் அகராதியில்..!!

கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

No comments:

Post a Comment