Wednesday, February 12, 2014

புதியதாய்....












உதிரும் இலைகளை மறந்த
தளிர்க்கும் மரங்கள்….
புதியதாய் உற்சாகத்தில்..!!

வெறுக்கும் விடியலை மறந்த
 நிலவும் புதியதாய்.. 
ஒவ்வொரு நாளிலும்..!!

காற்றில் வீசியெறியப்பட்டு
மரம் மறந்த விதைகள் ..
புதுவிடியலை நோக்கி..!!

வண்டு துளைத்த பொந்துகளில் 
தனை மறந்த காற்றும் …
புது ராகம் இசைக்க..!!

பருவத்தில் பொழியும் மழையும்
தனை மறந்து புது உற்சகத்தோடு..
உயிர்களை உயிர்பிக்க..!!

காத்திருக்கிறேன் எனை மறந்த..
உன்னை எதிர்க்கொண்டு..
புதியதாய் பூபாளம் இசைக்க..!! 


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்..

No comments:

Post a Comment