Thursday, August 30, 2012

பொம்மலாட்டம் .





வேகமா போற ..மெதுவா போ .இன்னும் நாடகம் ஆரம்பிக்கலை..
சீக்கிரம் போனாதான் இடம் பிடிக்க முடியும் .
மெல்லமாக இருளில் எனை இடித்து கொண்டு போனாள்...என்னவள்

ரொம்ப பத்திரமா பாத்துக்கோ அவளை, அவ எனக்கு முக்கியம் ..
அவளில்லாத வாழ்வு என்னால நினைக்க முடியாத ஒன்று..
ம்ம் கோவம் கோவமா வந்தது ,அவ மட்டும் தான் நேசிக்கனுமா ,
ஏன் நான் உன்னைய நேசிக்க கூடாதா ,நான் உனக்கு சொந்தமில்லையா?
என்ன கொஞ்சம் தூரத்தில இருக்கேன் ,நான் இல்லாம நீ இருக்க முடியுமா....
நம்ம நிகழ்சிகள் ஏதும் நடக்குமா.. புரிந்து கொள்ளாமல்,
நீ அவளுக்கு மட்டும் சொந்தம்னு சொல்றது சரியில்ல ..
ஆரம்பித்தது பொம்மலாட்டம் ..சீதா புராணம் ...ரொம்ப சுவையா நடந்து கொண்டிருந்தது .
அவளை மெதுவாக கவனித்தேன் ... அவள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்..

ம்ம் உள்ளே வரட்டும் பார்த்து கொள்கிறேன்... பொம்மலாட்டம்
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் முன் ஒரு சிறு இடைவேளை ....
ரொம்ப வலித்தது எனக்கு ,என்னை பார்த்து கொண்டே இருந்த,
அவளை மெல்லமாக தொட முயற்சிக்க அவள் மற்ற என் சொந்தங்களுடன்,
சேர்ந்து வழி விடாமல் ....கவலையோடு .....நான் ..

பேச ஆரம்பித்தேன் பொம்மலாட்டம்
வருசத்திற்கு ஒரு முறை என்றாகி விட்டது ,அழிந்து போக ஆரம்பித்து விட்டது.
நாம் சரியாக ஒன்று கூடி சிறப்பாக நடத்தினாள் மீண்டும் இந்த கலைக்கு
புத்துயிர் கொடுக்க முடியும் என் பேசி முடிக்க
மீண்டும் ஆரம்பித்தது பொம்மலாட்டம் ...சுழன்று சுழன்று ஆடினாள் அவள் .
நான் அமைதியாக அவளை கவனித்தேன் .. திடீரன என்னை இணைத்து ,
அவள் சுழல பொம்மலாட்டம் களை கட்டியது... .ஒரே கை தட்டல் விசில்
என தூள் பறந்தது அங்கு ...இது மாதிரியான நேரங்களில் மட்டும் அவள்
என்னை நெருங்க முடியும் ..என்ன செய்ய அவள் ஓரிடம் நான் வேறிடம் .
அவளின்றி என்னால் இயங்க முடியாது நான் இன்றி அவள் மட்டுமல்ல
யாராலும் இயங்க முடியாது .

பொம்மலாட்டம் நிறைவு பெற்றது என கூறி சேர்ந்தன விரல்கள்...
கட்டை விரல் எட்டி பார்த்தது சுண்டு விரலை ...

மெல்லமாக இடித்து கொண்டு போனவள் கை விரல்கள்
கோர்த்து வீடு திரும்பினாள் கணவனோடு...

Sunday, August 26, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......




பகுதி - 2

மெல்ல எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.

தாக்கங்கள் என்னை எதோ செய்தது..

பேசியதில்லை ,பார்த்திருக்கிறேன்..யாரோ எனும் நினைப்பில்அவனை,

ஆனால் இன்று அவன் நினைவு முழுதும் நிரம்பி...தளும்புகிறது .

அவனில்லை இங்கு ,நினைக்க நினைக்க அவன் கடிதம் எழுதும்போது பார்த்ததுதான்

நினைவுக்கு வருகிறது ..

அந்த முகமே மனதில்,நினைவில் வருகிறது..

இது காதலா ..யோசிக்க பயமும் கூடவே...கையை திருப்பி

மணி பார்க்க நேரம் ,நரகமாக ஓடி கொண்டிருந்தது .

இன்னும் அரை மணியில் சுந்தரி எனை பார்க்க வந்து விடுவாள் ..கிளம்பணும்

நானும்,கிளம்பணுமா என்ற எண்ணம் தலை தூக்க ..

ஒரு தட்டு நானே தட்டினேன் என் தலையில் ,வீட்டிற்கு

கிளம்ப யோசிக்கும் அளவுக்கு என் நிலை ...என்னையே

திட்டிக்கொண்டு உள்ள சென்றேன்..

என் கைபையை எடுத்து கொண்டு வெளியே வந்தேன் .

யாரிடமும் கிளம்புவதாக கூறவில்லை .தொலைபேசியை

பார்த்து கொண்டே கிளம்பினேன் .

வெளியில் வந்து பார்த்தேன் எப்போதும் போல அந்த மகிழம்பூ

மரத்தடியில் சுந்தரி ..அருகினில் அந்த இருசக்கரம் நின்று கொண்டிருந்தது.

அதன் மேல சாய்ந்து கொண்டு நான் வருவதையே பார்த்து கொண்டிருந்தான்

அவன்..அந்த மரத்தடிக்கு கூட போக வில்லை கொஞ்சம் தூரத்திலிருந்தே

நான் வருவதை பார்த்த சுந்தரி எழுந்து வந்து விட்டாள்...

வாடி என் செல்ல புன்னகையே என் கூப்பிட்டுகொண்டே என்

அருகினில்....சுந்தரி.

அதே புன்னகயுடன் நான் அவள் கைபிடித்து வேகமாக கிளம்பினேன்.

சுந்தரி கணக்கராக துணி கடையில் பணி செய்கிறாள்.

அவள் இன்று அலுவலகத்தில் நடந்த விசயங்களை சொல்லி கொண்டே

வந்தாள்..சுவரசியமாக கேட்டு கொண்டே வந்தேன்..அந்த இரு சக்கர வாகனம் எனை கடந்து

சென்றது..ரயில் பாதை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருதோம்..

அப்படியே திரும்பி பார்க்க அந்த அவன் வண்டியை நிறுத்தி விட்டு

எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் .

Monday, August 20, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் .......



ரயில் விட்டு இறங்கி ரயில்பாதை கடந்து நடந்தாள்..அவளை தாண்டியும் முன்னும் பின்னுமாய் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் காலெடுத்து வைத்தாள் , இன்னும் ஒரு 5 நிமிடத்தில் உள்ளே நுழைந்து விடலாம் ..சட்டென. ஒரு குரல் நமஸ்தே ஜி..
நமஸ்தே என சொல்லிவிட்டு பரப்புடன் அலுவலகத்தில் நுழைந்தாள்.

உள்ளே நுழையும் போதே ஒரே வாசம் பொங்கல்,இட்லி வடை சட்னி என என் மூக்கை துளைத்தது ....வாம்மா துளசி உள்ளே டிபன் சாப்பிட்டு விட்டு சீட்டுக்கு போகலாம் என கூப்பிட டிபன் அறைக்குள் நுழைந்தேன்...

2இட்லி யும் வடையும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே ..அப்பாவின் நண்பர் எத்திராஜுலு சார், இந்தாம்மா என்றார் ஒரு சிகப்பு ரோஜாவும் அத்துடன் ஒரு கடிதமும்...அங்கிள் நீங்களே படியுங்க,தினம் தான் இந்த கதை நடக்குதே , அந்த பூவையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்னு சொல்லிட்டு என் சீட்டுக்கு சென்றேன்..

தபால் அலுவலகம் நான் பணி புரிந்தது..மிலிடரி கேம்பஸ் குள் இருந்தது ..எங்கு நோக்கினும் ஹிந்தி மட்டுமே..எனக்கு சுத்தமாக ஹிந்தி வராது..

பேசுபவர்களிடம் மட்டும் கொஞ்சம் உளறி வைப்பேன் ஹிந்தியில்...

கவுண்டருக்கு போனேன் ஒரே கூட்டம் கட கடவென வேலை ஓடிக்கொண்டிருக்க
எதோ ஒன்று நம்மை பார்ப்பது போல உணர்வு..
திரும்பி பார்க்க, கலா மேடம் ..என் அருகினில் வந்து அமர்ந்தார்கள் ..
துளசி துளசி என கூப்பிட ,ம்.... கொட்டிவிட்டு வேலையை தொடர்ந்தேன்..
அப்பாடா . கொஞ்சம் காலியானது..கவுன்ட்டர்...
நிமிர்ந்து வெளியே பார்க்க எனை பார்த்து பின் தலை குனிவதுமாக கடிதம் எழுதி கொண்டிருந்தான் அவன்......

மேடம் சொல்லுங்க என சொல்லி திரும்ப, சூப்பர் ஆ இருக்கு உன்னோட blouse எங்க தைக்கிறாய்..என்னோட மகளுக்கு தைக்கனும்னு சொல்ல, சரிங்க மேடம் நீங்க கொண்டு வந்து தாங்க நான் தைத்து வாங்கி தரேன்னு சொல்லி நிமிர,

கடிதம் எழுதாமல் என்னையே பார்த்து கொண்டிருந்தான் ..என்ன வேண்டும் என கேட்க மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டான்.. நான் அவனையே கவனிக்க சட்டென்று எழும்பி வந்து விட்டான் என் அருகில், என்ன கேட்பது வென்று தெரியாமல் பார்க்க ,

ஸ்டாம்ப் வேணும் என கேட்க்க ,அந்த கவுன்டருக்கு போங்க என, மேடம் உடனே சொல்லிட்டாங்க...
என்ன துளசி என்னவாம் அவனுக்கு ரொம்ப நேரம் இங்கு இருக்கிறான் என என்னிடம் கேட்க அமைதியாய் நான் ..தெரியவில்லை என தலையாட்டினேன நினைவுகளில் அவன் வேலை செய்ய ,நிமிர்ந்து பார்க்க காணவில்லை அவனை ....

மேடம் நாளை எனக்கு மோர்னிங் ஷிப்ட் .நீங்க அடுத்த வாரம் எடுத்து வந்து கொடுங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். எனக்காக சுந்தரி வாசலில் காத்திருந்தாள்..அழகோவியமாய் அவள்...
என்னுடன்..அவளுக்கு நான் என்றால் மிக இஷ்டம் ...

ரயில் பிடிக்க விரைவாக நடந்து கொண்டிருந்தோம்

..மீண்டும் அந்த சத்தம் அந்த புல்லெட் காரன் ..அவளிடம் அவனை பற்றி பேசி கொண்டே ,கண்கள் அலை பாய ..ரயில் நிலையத்தை அடைந்தேன்..
ஒரு ரயில் மிஸ் செய்து விட்டு பேசிகொண்டிருந்தோம் " அம்மா வேர்கடலை" என அந்த பெரியவர் கேட்க..இருவரும் வாங்கி கொண்டு செங்கல் பட்டு ரயிலுக்காக காத்திருந்தோம்..அப்போதும் எனை தூண்டிய உணர்வு திரும்பி பார்க்க சொல்ல, யாருமில்லை ..மீண்டும் வேர்கடலையுடன் நாங்கள்..

ரயில் வந்து கிளம்ப ரயில் நிலையம் தாண்டும் முன்
அந்த பெயர் போர்டில் சாய்ந்த வண்ணம் இருப்பது யார் என்று யோசிக்க சட்டென நினைவுக்கு வந்தான் கடிதம் எழுதியவன் , சுந்தரி அவன்தான் அங்கே பாரு நல்ல எட்டி பாருடி நான் சொன்னனே என கூற நிலையம் முழுதுமாய் மறைந்தது....அவள் பார்க்கவில்லை,என் கண்கள் முழுதும் அவன் ..

காலை 6.30 ரயில் பிடித்து நான் வந்து நிலையத்தில் இறங்க.. யாருமில்லாதது போன்ற உணர்வு...நடையை துரிதமாக்கி அலுவலகத்தில் நுழைந்தேன் ....அந்த புல்லெட் காரன் கவுன்ட்டருக்கே வந்து விட்டான்...எப்படியோ அவன் கொண்டுவந்த வேலையை முடித்து கொடுத்தேன்..

நினைவு ஓடி கொண்டிருக்க மீண்டும் சிகப்பு ரோஜாவும் கடிதமுமாய் எத்திராஜுலு சார், என்னருகில் ..இது யாருன்னு கண்டு பிடித்து ஒரு பதில் சொல்லிவிடும்மா என கூற

பார்வையால் என்ன அங்கிள் நீங்களே இப்படி சொல்லறீங்க.. நேரம் நெருங்க அடுத்த ஷிப்டுக்கு வந்து விட்டார்கள், நான் கிளம்ப ,இன்று தனியாக ரயில் நிலையம் போகணுமேன்னு நினைத்துகொண்டே கிளம்பினேன் ..வாசல் வரை வரும்போதே உள்ளிருந்து துளசி உனக்கு போன்,
வாம்மா என்ற கலா மேடமின் குரல்..

யார்.............யாராக இருக்கும்..யாருக்கும் இந்த நம்பர் தெரியாதேன்னு கேட்டுகொண்டே எடுத்தேன் தொலைபேசியை ..

சில நிமிட மௌனங்கள் யார்..யார் என நான் கேட்க.ப்ளீஸ் வெச்சிடாதீங்க நான் சொல்றதை கேளுங்க..இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போகிறேன்.இனி உங்களை பார்க்க முடியாது.என்னுடைய அட்ரஸ் உங்களுக்கு தருகிறேன் உங்களுக்கு சரியென்று பட்டால் கடிதம் எழுதவும்..
நான் சரியாகத்தான் தேர்ந்தேடுத்திருகிறேன் என்று சொல்லிவிட்டு ,ஹெலோ நீங்க யாரு என கேட்பதற்குள்தொலைபேசி அணைக்கப்பட்டது ...

யோசித்து கொண்டே எழுந்தேன் ரயில்நிலையம் வரை தனியாக செல்லணுமே ..யோசித்து கொண்டே நடக்க மீண்டும் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் என் அருகினில் வந்து வண்டியை நிறுத்தினான் ....சைகை செய்தான்..மேற்கொண்டு நடக்க முடியாமல் என்னவென்று தமிழில் கேட்க..அவன் சொல்வது புரிந்து புரியாமல் நடக்க ஆரம்பித்தேன்.....
ரயில் நிலையம் வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்..ரயில் வர ஏறாமல் அமர்ந்திருந்தேன் ..

வெள்ளை உடையில் எனை கடந்து சென்றவன் என் பார்வையை இழுக்க ஆரம்பிக்க மெல்லமாக திரும்பினால் அந்த கடிதம் எழுதியவன்..ஓ இவன் கப்பற்படையில் வேலை பார்பவனோ என நினைத்து கொண்டே அடுத்த ரயில் வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன் ,ஒரே படபடப்பு என்னிடம் .

ரயில் கிளம்பியது ,வேகமாக ஓடி வந்த அவனின் கையில் இருந்த ஒரு புத்தகத்தைசன்னல் வழியாக தந்துவிட்டு மறைந்தான் ..நான் திரும்பு நேரம் அவனை காணவில்லை..பக்கத்தில் இருப்பவர்கள் என்னை பார்ப்பது போன்ற உணர்வு.....இனம் புரியா படபடப்பு.

மெதுவாக எடுத்து பிரித்து பார்த்தேன் ..காதல் கவிதைகள் 12 மட்டுமே..அதற்கான காரணத்தை நேரில் காணும் போது சொல்கிறேன் என்று குறிப்பு வேறு.....

எனை பார்த்த தினத்திலிருந்து இன்று வரை அனைத்தும் குறிப்பிட்டு எழுதிருந்தான், அதன் கடைசியில் அலுவலக முகவரி...
அதை வைத்து அவனை கண்டு பிடிக்கணும் என சொல்லி கொண்டே திரும்ப கட்டிலிருந்து விழுந்தேன்..அம்மா என்னவென்று கேட்க ..இனம் புரியா சந்தோசம் எனக்கு....ஒன்றுமில்ல என சொல்லிவிட்டு கிளம்பினேன் அலுவலகத்திற்கு..

கடிதம் எழுதிகொண்டிருந்தேன் அவனுக்கு ....அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ..என்ன எழுத ஒண்ணும் புரியல.... ...

துளசி உனக்கு பார்சல் வந்திருக்குமா ...பிரிங்க அங்கிள்..
பாரும்மா இதிலையும் சிகப்பு ரோஜா,...என சொல்லி கடிதத்தை அங்கிள் பிரிக்க ...கடிதத்தை பிடுங்கிக்கொண்டு ,அந்த பழைய கடிதங்களையும் தாருங்கள் அங்கிள் என சொல்லி , என் சீட்டுக்கு சென்றேன்.
அங்கிள் ரோஜாவை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் ......
என் எண்ணங்கள் முழுதும் சிதறிய வண்ணங்களாய் ....இதுதான் காதலா ..............

Thursday, August 9, 2012

பிறந்த நாள்



ஸ்ரீ இங்க வாம்மா ....என அம்மா கூப்பிட ஸ்கூல்பேக் எடுத்துக்கொண்டு

ஓடினேன், என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவாக நடந்தாள்

அம்மா, இன்னும் நேரம் இருக்கு பள்ளி வாகனம் வர..

சுசி அக்காவும்,அத்தையும் வந்தாங்க,அத்தை அம்மாவுடன்

பேசி கொண்டே வந்தாங்க.சுசி அக்கா என் கையை பிடித்து

தன்னுடன் என்னை சேர்த்து நடந்தாள்....

சுசி அக்கா நீங்க நேற்று சொன்னது போல ஈவ்னிங் வீட்டுக்கு

வாங்க உங்க கை நிறைய சாக்லேட் கேக் எல்லாம் தரேன் ....

ம். வரேண்டா ....

எங்க பஸ் முன்னாடி வந்திடும் நான் உனக்காக வெய்ட் செய்கிறேன்...

உனக்கு என்ன வேணும்னு சொல்லு அக்கா வாங்கிகொண்டு வரேன்....


டா... டா டா ...


கல்லூரி பேருந்துக்குள் ஏறும் வரை என் கவனம் ஸ்ரீ மீது..எல்லாருக்கும்

சாக்லேட் கொடுத்து கொண்டிருந்தது பஸ் நிலையத்தில்..

இன்று கல்லூரியில் ஸ்ரீயை பற்றி தோழிகளிடம் அதிகம் பேசினேன்...

முதல் வகுப்பில் படிக்கும் அவளுக்கு,அழகான ஒரு பென்சில்

பாக்ஸும், குட்டி கரடி பொம்மையும் வாங்கினேன்... ஸ்ரீ கேட்ட

பெயின்டிங் செட்டும் வாங்கி கொண்டேன்....


அவளுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்..

மாமா பிள்ளைகளை அழைத்து கொண்டு பள்ளிவேனில்

சென்றார் புன்னகையுடன்...

ஸ்ரீ யின் பஸ் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்றது...

பின்னால் சத்தம் போட்டு கொண்டு

மக்கள் ஓடி வர...பஸ்சிலிருக்கும்

பிள்ளைகள் அழுது கொண்டே இறங்க .

டிரைவர் இறங்கி ஓட மக்கள் விரட்ட....

பரபரப்பு..அங்குமிங்கும் ஸ்ரீ யை தேட என் கண்கள்....

தார் சாலையில் தாராய் அவளின் ரத்தம் ஓட ...

சுருண்டு கிடந்தாள்...

முதல் சுவாசம் கிடைத்தநாளில் ...சுவாசமின்றி..
---------------------------------------------------------------------

Friday, August 3, 2012

கைம்பெண்ணின் கனவுகள்




என் நினைவுகளின் நேரங்கள் ...
தன் வயம் கொண்டகனவுகள்
குழலின் நாதம்போல நீண்டுசெல்லும்நேரங்கள்....
இனம்புரியாமல் காணுகின்ற கனவுகள்
விழிக்கையில் இனம் புரியா படப்படப்பு
உயிர் துடிக்க உடலெங்கும் தகிக்க ..

விழிகளின் வேலிகளுக்குள் நீ எனை
மீண்டும் அழைக்க.உன்னுடனான அந்த
கனவு கோட்டைக்குள்....அளவில்லா
ஆனந்தங்கள் ,கரிய இருளுக்குள்...
வெளிச்சத்தை கொண்டு வரும் ..
நினைவுக்கனவுகள்

பலவண்ணங்களாய் சிதற தினம் தினம்
கனவுக்குளியல் சிறகடித்து பறக்க...
வெடவெடத்து உயிர் நடுங்க ...
தனிமை கனவுகள் உடலை சருகாக்கும்
தீயிலிட்டு பொசுக்கும் தருணம்

சாரலாய் தூறலாய் நீ என் மேல் விழ...
நிலையில்லா கனவுகளின் மேலிருந்து
விழுந்து ,வேதனைகளை...மறைத்து ,
சன்னல் கம்பி பிடித்து எழுந்தேன்
கோடி சாரலாய் கொட்டிய மழையுடன்
இணைந்தேன் நீ என்று..................

கருவறை ஊமை

மலையில நாம் ஓடி இருந்தால் நிச்சயம் வளைந்து நெளிந்து ஓடி

பாதையை பிடித்திருப்போம்..

ஆனா இப்படி எல்லாருடனும் ஓட வேண்டி இருக்கே நொந்துகொண்டேன்.

நான் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி மட்டுமே எனக்கு.

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களோடு ஓடிவர நான் மட்டும் வெற்றிக்கனி பறித்தேன்,

அளவில்லா ஆனந்தத்தில் மிதக்க..

என்னுடன் இன்னொருவரும் இணைந்து வர.....

நான் மிகவும் வேதனையோடு வெற்றியை பகிர்ந்து கொள்ளணுமா

என நினைத்து கண்ணீர் விட்டேன்..

அம்மா சந்தோஷத்தில் தடவி கொடுத்தார்.. விட்டு கொடுத்தேன்..

நாட்கள் நகர்ந்தன, நிறைய வேறுபாடுகள்

எங்களுக்குள். நிறைய சந்தோசங்கள்

சின்ன புன்னகைகள் ,விட்டு கொடுத்து இருப்பது

என எல்லாவிதத்திலும் ஒற்றுமையாய் இருந்தோம்..

புது உலகை நோக்கி எங்கள் பயணம் முதலில் அவளும் ,பின்னர் நானும் ..

எங்கள் அருகினில் அம்மா ......சந்தோசங்கள் கொஞ்சல்கள் ...

அவள் தங்கையாம்,நான் அண்ணன் என்று பல குரல்கள்....

அருகினில் அம்மா... சட்டென்று ஒரு மயான அமைதி அருகினில் குரல்களை காணோம்

.கண் விழித்து பார்க்க தங்கையை காணோம் ..குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள்

9து மாதங்கள் என்னுடன் வாழ்ந்தவள்,இருட்டுக்குள் என் அன்பை பெற்றவள்

பிறக்கும்முன்னே வெற்றி பெற்றவள் பெண் குழந்தை என்பதால்..

அழிக்கப்பட்டாள் என் சகோதரி .


விருப்பமில்லா பிறப்பை ஊமையாய் எதிர் கொண்டேன் நான்...