Tuesday, March 25, 2014

நினைவுகளில் கூடுவோம்...




ஆராதிக்கும் அழகாய் அன்பின் வலியாய்
உன் நினைவுகள் நிரம்பியிருக்கிறது என்னுள்...

மணம் வீசும் மாலை நேர பூக்கள் கதைபேசும்
காற்றினில் அசைந்து இசைவாய் இணைக்கும்
நம் எண்ணங்களை..

தவிக்கும்பொழுதுகள் அற்புதமாய் பூத்திருக்கும்
அந்திமாலையில் அவளின் வருகையில்..

ஆனந்தமாய் அழகூட்டும் அவளின் அருகாமை
அந்நியப்பட்டு போகும் அந்திமாலையின்  பொழுதுகள்

பூவாய் மென்னிதழ் புன்னகையில் பூத்தஅசைவும்
மொழியென்று என் விழிகள் அறியும்..

நீண்ட பொழுதின்  காத்திருத்தலில் மெல்லிய
இருக்கங்கள் கூடுதாலாகிபோகிறது தனிமையில்..

மணம்வீசும் குழலின் கூடிய விரல்கள் வீணையாய்
மீட்டுவதில் மெய் மறந்துதான் போவாய் அப்பொழுதெல்லாம்
நீ….என் மடிமீதினில்….        

நினைவுகளில் கூடுவோம் வாழ்வினில் கூடுதாலாகி 
போகின்ற நாட்களை எதிர்க்கொண்டுகாத்திருக்கிறேன்
 உனக்காக……


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

ஏக்கம்.....................





#உலக_கவிதை_வாரம்


ஏக்கம் வறண்ட விழிகள் 

புதைமணலாய் புதைந்து 

போகிறது பூத்த பூக்கள்.. 

வறண்ட வானமும் வெடித்த 

நிலமுமாய் வாழுமிந்த

முகங்கள் சிரிக்க தெரியாத 

சில்வண்டுகள்.. 

சிதைந்து போன தாயகக்கனவுகள் 

துணிச்சலோடு உறவை என்றாவது 

சந்திப்போம் என்று வாழும் இந்த 

உயிர் பூக்கள்.. 

விதைக்க விதையின்றி 

பேரிளம்பெண்ணாய் திருமண கனவுகள்

நோக்கி பூத்து கிடக்கும் இந்த

சிரிப்பு மறந்த பூக்கள் சிதைக்கும்

செல்லும் இப்படியே .. 

துக்கங்கள் தொண்டைக்குழியை 

அடைக்கட்டும் துன்பங்கள்\ 

எங்களை தொடரட்டும் பிழைப்பின்றி 

வாழ வழியின்றி  கிடந்து மக்குகிறோம்\ 

சொந்த மண்ணிலே ஆனால் 

அதுதான் தெரியவில்லை சொந்த மண் 

எது என்று.. அ--கதி(களாய்)யற்று 

கிடக்கிறோம்…



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்


#உலக_கவிதை_வாரம்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்
தைரியமற்று போகும் நிஜங்கள்
உயிர் துளியாய் இதய இசையாய்
உன் நினைவுகள்

றுக்கப்பட்ட பொழுதிலும்மனம்
முழுதும்மாற்றும் திறனின்றி
உலாவும் என் நினைவுகள்
உனக்குள்ளே…

வெறுப்புகள் கூடுதலாக்கபார்வையை 
வேறுபுறம் திருப்பும் உன்எதார்த்தங்கள்
இதழ்களிலே தவிப்புடன் கூடிய
துடிப்புகள்

ணைபிரியா தண்டவாளமாய்இணைந்தே
வரத்துடிக்கும்ரயிலின் வருகை போல்
சிநேகித்த உன்னைமறப்பதேது...

தொடரும் பொழுதுகளும்விடியலும்
புது கோலங்கள்போடப்போகிறது -
என்வாழ்வில் கனவுகளில்..

ரசிய வார்த்தைகள் உன்னுள்
உரமாக வில்லையா
விழிகளின் கூடல்கள்
உன்னுள்விதைக்கவில்லையா
தொடல்களில் தழுவல்கள்
தடங்களாகவில்லையா

ன்னை மறக்கலாம் தவரென்று
தெரிந்தும் என்னை மறக்கலாம்
தடங்களை மறக்கலாமா?

யிர் தேடும் விடைகள் உனக்குள்
கூடுதலாய் கூடத்தான் செய்கிறது
இருந்து மறந்துதான் போகிறாய்..
கேட்பாரற்று நானிருப்பதால் ...

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

உனைபோலத்தான் காற்றும்...-




செவிகளின் இன்பமா நீ

தேடியலைகிறது உன் 

குரலின் வசீகரத்தை ..

மலரிதழின் தன்மையா நீ

சுகந்தமளிக்கிறாய்

மனதிற்கு இதமாய்..

மாலைப்பொழுதின் வனப்பா நீ

சுழலவைக்கிறாய் என்னை..

கிறங்க வைக்கிறாய் ..

கார்குழலை ஒட்டு மொத்தமாய்

குத்தகை எடுத்தவளா நீ 

கார்மேகமாய் சுருட்டுகிறாய்

என்னிதயத்தை .

தெளிந்த நடையில் அழகான

பார்வையில்அள்ளிப்போகிறாய் 

பொத்தி வைக்கிறாய் என்னை

தொட்டு தழுவுகிறேன் காற்றை

தொடுதலில் காற்றும்

உனை போலவே வீசிவிட்டு

செல்கிறதுபார்வையை..!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

தீவிரவாதியாகிறேன் ..!






செழித்திருக்கும் மல்லிகை 

தோட்டத்தில்


சூழ்ந்திருக்கும் தேனிக்களின் 


கூட்டத்தில்


முந்தியும் பிந்தியுமாய் சேமிக்கும் 


அறை நோக்கி


விர்ரென்று பறக்கும் ”ஜெட்” டாக 


பறந்து செல்கிறது 


என் பொழுதுகள் ...


உன் வருகைக்காகவே..!!


மல்லிகையின் வாசம் சூழ்ந்திருக்கும்


கார்குழலில் இணைந்திருக்கும் 


சங்கு கழுத்தில் வழியும் 


வியர்வை துளி .உன் ஒற்றை 


மூக்குத்தியாய் மின்னுகிறது 


ஒளி வெள்ளத்தில்..!!


பொட்டு பொட்டாய் பட்டென 


விரியும் பருத்தி பஞ்சிற்கென 


காத்திருக்கும் கிள்ளையாய்


என் காத்திருப்பின் கவனம் 


மொத்தமும் சிதறி தெறிக்கும் 


மெர்க்குரியாய் உன் அள்ளமுடியா 


அடுக்குப் புன்னகையில் அமிழ்ந்து 


போகிறது. அமிழ்ந்ததை அள்ளி 


கொட்டினாலும் தீராத அன்பு 


உன்மேல் தீவிரவாதமாய் 


என்னை முடக்கி போடுகிறது 


அடியே தீவிரவாதியாகிறேன் 


உன்னால் உனக்குள்...!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...




கட்டங்களுக்குள் கட்டிடங்களுக்குள்,

கணிணிக்கு முன் கவிழ்ந்தமுகங்கள் ..!

சிதறும் எண்ணங்கள் சிதையும் மனங்கள்..!

பொருளாதார நிலை மட்டுமே உயர்வுஎன

தேடும் சமூகத்தில் கணநேரமும்தனக்கின்றி

உழைக்கும் மெய் முகங்கள்..!

மறக்கின்றது  மெய்யை..!

காணாமல்  கரைந்து போகிறது ,

விழி தேடும் சொந்தங்கள் ..!!

கனாக்களில்  மட்டுமே நிதர்சனம்..!!

இதுதான் இன்றைய பெண்மை..!!

ஏதும் எதிர்பார்ப்பின்றிஉழைக்கும்  

                 எம்மக்களுக்கு

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

பிஞ்சு மனம்.....




விரல்களில் சிக்குண்டு 
வெளிவர முடியா பிஞ்சு குழந்தை 
தவிக்கின்றது விளையாட ..!
தாயின் கைபிடித்து பள்ளிசெல்லும்
பிஞ்சு..!

மூச்சு முட்ட வியர்வை வழிய
மூட்டை தூக்கி எட்ட
நடைபோடும் பிஞ்சுகள்
தூக்கத்தில் சிரிக்கிறது..
ஒடி விளையாடுகிறது
கனவினில்  ……!

தாய் தரும் அனைத்தும் பள்ளி
இடைவேளையில்.! 
கடித்து மென்று தின்றுவிடுகிறது
குப்பைகூடைகள் ..!
வகுப்பறையில் நடந்து நடந்து
பழகும் ஆசிரியையின் பார்வை
மறைவினில்…!

காய்ந்த மையும்,கலைந்த தலையுமாய்
கண்ணிரண்டும் விளையாட்டு
மைதானத்தில் வட்டம்போட
முடிந்தது வகுப்பு....!
ஏங்கும் மனம் எதிர்பார்க்கும்
தாயின் வரவை..!

கைவிரலில் இணைந்த சுகம்
கதைப்பேசுகிறது தாயிடத்தில்
அவிழ்த்து விட்ட கன்றாய் ஆட்டம்
போட்டபடி ..!

  
காலையும் மாலையும் இல்லையெனில்
பிரிவென்பதே இல்லை
அம்மாவிடமிருந்து..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

ஐம்பெரும் காப்பியமாய்...





இமை சொட்டும் நீர் சிதறிப்போனது..! 

விழிக்குள் ஒளிர்ந்த வெண்முத்தை 

கண்ணுற்ற 

அடர் மழையும் சிலிர்த்தது..! 

அள்ளி சென்ற காற்றும் 

மெல்ல கிள்ளி சென்றது..! 

துள்ளிசென்ற குடையும் 

மேனி நனைய சிறகணிந்து 

காற்றில் இணைந்து சென்றது.! 

கடந்து சென்ற கார் முகிலும் 

இடியாய்சத்தமிட்டு சென்றது.! 

அழகின் தேவதையை ஒரு 

பார்வையில் கிள்ளிக்கொள்ள 

மின்னலும் சுற்றி சுற்றி சுழன்றது..! 

ஐம்பெரும் காப்பியமாய் 

கண பொழுதினில் கரைந்து போனாள் 

கன்னியவள்எனக்குள்..!!

  

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

மெய் வளர்த்தேனடி....




சுழன்றோடும் நதியில்
பொங்கிடும் ஊற்றாய்
சிலிர்த்திடும் நுரையின்
தீற்றலில் உன் முகம்
நான் கண்டேனடி..!!

வளைந்தோடும் நதியின்
நடையின் சுழிப்பில்
உன் இதழின் சுழிப்பு
நான் கண்டேனடி..!!

உள்வாங்கும் சுழலில்
உன் இமையிரண்டும்
சுகமாய் சேருவதை
நான் கண்டேனடி..!!

ஊர்வந்து சேர்ந்தேனடி
உனைகாண உவகையில்
உன் பூரிப்பை நான் காண
வந்தேனடி..!!

ஓளித்தீற்றலாய் உன்னுடன்
ஓர் இணை கண்டதும்
உன்பொய்யான காதலை
மெய்யென கொண்டு
மெய் வளர்த்தேனடி…
வீணாய்ப்போனேனடி..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

தைரியமற்ற....




காற்றின் பலம் புழுதியின்
வீச்சில் கலைந்து போகிறது ..!!

காதலின் பலம்பிரிவின்
இடைவெளியில்சோர்ந்து போகிறது..!!


நெஞ்சக்கூடு விம்மித்தணிகிறது
தைரியத்துடன் கூடிய பயத்தில் 
கடைசியிலாவது வருவாய் 
எனும் நம்பிக்கை..!!


சுழல்கிறது காலம் 
மின்மினிபூச்சியாய்..!!

காலத்திற்கும் மதிப்பில்லை
காதலுக்கும் மதிப்பில்லை
உன் அகராதியில்..!!

கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்