Tuesday, March 25, 2014

உனைபோலத்தான் காற்றும்...-




செவிகளின் இன்பமா நீ

தேடியலைகிறது உன் 

குரலின் வசீகரத்தை ..

மலரிதழின் தன்மையா நீ

சுகந்தமளிக்கிறாய்

மனதிற்கு இதமாய்..

மாலைப்பொழுதின் வனப்பா நீ

சுழலவைக்கிறாய் என்னை..

கிறங்க வைக்கிறாய் ..

கார்குழலை ஒட்டு மொத்தமாய்

குத்தகை எடுத்தவளா நீ 

கார்மேகமாய் சுருட்டுகிறாய்

என்னிதயத்தை .

தெளிந்த நடையில் அழகான

பார்வையில்அள்ளிப்போகிறாய் 

பொத்தி வைக்கிறாய் என்னை

தொட்டு தழுவுகிறேன் காற்றை

தொடுதலில் காற்றும்

உனை போலவே வீசிவிட்டு

செல்கிறதுபார்வையை..!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

No comments:

Post a Comment