Thursday, February 6, 2014

அரும்பிய புன்னகை..


 




வழியிருந்தும் போக

மனமின்றி சிறைபட்டு

கிடக்கும் நெஞ்சத்தின்

நினைவு ..!!

தேங்கிய நதியில்

சிதறிய நினைவுத்துளிகள்

பாதை வகுத்தது

விழி வழியே ..!!!

வழிந்த நீரில்

சுவை தேடிய

செவ்விதழ்கள்

மலர்ந்தது ...!!

அரும்பியது புன்னகை..!!

நெருங்கியது நீ..!!



கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**


2 comments: