Wednesday, February 29, 2012

சாலை வாழ்வில்.....சில கணங்கள் .....




ஒரு நாளைக்குள் எத்தனை வார்த்தைகள் ...
தினம் தாங்கியே பக்குவபட்ட மனங்கள் ...

விடியலில் இன்றைய பொழுதை ..
எதிர் நோக்கும் கணங்கள்.....பதினாறுகள்..

இனிப்பை மட்டுமே எதிர் பார்க்கும் பிள்ளைகள்..
துக்கத்தையும் தாங்கும் சில கணங்களில் ...

பொழுது முழுதும் தொடரும் எண்ணங்கள் ...
சாய்ந்த அந்தி பொழுதின் உன் அர்ச்சனைகள் ..

எதையுமே உணராத பயமில்லாத
என்னை சுற்றி ஓடும் எலிகள்,கரப்பான்கள் ..

வேதனையை வெளி உணரும் தருணங்கள் ...
சந்தோசத்தையே உணராத உன் மனம்-என்

எண்ணங்களின் வெளிப்பாடுகள் ... எதிலும்
ஒட்டாமல் முடியும் தருணங்கள் ....

வானமே கூரை என்றாலும்
வண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...

மரப்பெட்டிகளும் பிளாஸ்டிக் ....
குடங்களும் சொத்துக்கள் - மீண்டும்

பயம் உன் வார்த்தைகளின் வேகத்தினால் ..
மறைப்பில்லாத தினம் தினம் ...

புது சேலை உடுத்தி அமர்ந்திருக்கும் ..
உன்னை கையெடுத்து கும்பிடும் கரங்கள் ...எக்கணத்திலும் ..

எதை எதிர் நோக்கி நீளும் வார்த்தைகள்
வீண் வதைகளையே தரும் வார்த்தைகளை

சார்ந்த உன் எண்ணங்கள் அதில் வெளிபடுத்தப்படும்
புன்னகையின் நீளங்கள் போல ....பூக்கள்

பூக்கும் தருணங்கள் போல -தெரியாமலே
போகிறது வாசனையுடன் -உன் அர்ச்சனைகள்

தேவை முடித்ததும் தொடருகிறது ...
அடுத்த சில கணங்களில் ...

பொழுது புலருகிறது மனங்களின் -பல
வேண்டுதல்களோடு ...மீண்டும்

தொடர்கதையை சாலை பயணங்கள் ...

Sunday, February 26, 2012

ஜெர்மானிய விருதுக்கு நன்றி

Thenakka ( LIEBSTER BLOG AWARD)


சும்மா சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!! என்ற வலைப்பதிவு எழுதிவரும் THENAMMAI LAKSHMANAN

அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள்.



இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.

இதை நான் 1.http://rathnavel-natarajan.blogspot.in/

2.http://ragasiyasnegithiye.blogspot.in/

3. http://podhigairajan.varuga.com/

4. கரிசல்குளத்தானின... வயக்காடு!

5 http://kavithaivaasal.blogspot.in/

இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை


உணர்வோம்..:)

அந்த வாசம் ....



எழுந்திரும்மா .அம்மா கூப்பிட... ம்ம் ..இதோ வரேம்மா என முனகியபடியே திரும்பி படுத்தேன் ,என்ன கிழமை மா ,,,இன்னைக்கு சண்டே டி ..மீண்டும் அம்மாவின் குரல் பதில் ஏதும் கூறாமல் கிளம்பினேன் .

அங்கிள் என்ன இன்னைக்கு இவ்வளவு வேகம் மெல்லமா போங்க ...வயசாகுது சொல்லிட்டு சின்ன சிரிப்புடன் திரும்பினேன்.... அம்மா எப்போதும் போல 10 அடி இடைவெளி விட்டு ....

இங்க நடக்கிறதில இருக்கிற சந்தோசம் எதிலும் இல்லம்மா னு குரல் காற்றில்...
வேகமாக நடந்து கரைந்து போனார் அந்த அதிகாலையில் இதமான பனியில் ...

சென்னையின் நுழைவு வாயில்..அழகிய மரங்களடர்ந்த மலை சார்ந்த கிராமம் ,அந்த மலைப்பாதையில் தான் எங்களின் காலை நடை பயிற்சி ...சினிமா,அரசியல் அக்கம் பக்கம் வீடு கதைகள் ,மாமியார் மருமகள் சண்டை ,பிள்ளைகளை பற்றிய குறை,யோகா மாஸ்டர் பற்றி கிசுகிசு அனைத்தும் அங்கே கேட்கும் அந்த அதிகாலையில் ..

அந்த சில்லென்ற அதிகாலையில் மூலிகைகளுடன் கூடிய ஒரு நறுமணம் ஆஹா..அற்புதம் .எங்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய ஒன்று சென்னையின் புறநகரில் வாழ்ந்தும் யோசித்து கொண்டே நடந்தேன்..அம்மா இன்னைக்கு கொஞ்சம் குளிர் அதிகம் அம்மா என் சொல்லி திரும்பி பார்க்க அம்மா தன்னுடைய சீரான நடையில் என்னம்மா என கேட்க ,

ஒண்ணுமில்ல ..நடையை துரிதமாக்கினேன்,இன்னைக்கு லீவ் நாள் அதனாலே நிறைய சந்திப்புகள் அங்கு ...

என்னை கடக்குமுன் அம்மவரலையா கேட்டவர்கள் கடந்த பின் வணக்கம் மா.. சொல்லுவது காதில் கேட்டது..

எப்போது சந்தித்தாலும் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்"அந்தோணி அங்கிள் ..யோசனையுடன் நடக்க ..அப்ப்பப்பா என்ன ஒரு வாசம் என்றுமில்லாமல் ..

"சின்ன புன்னகையுடன் வேகமான நடையில் என்னை கடந்தார் "அந்தோணி அங்கிள் "
ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு சென்றாலும் ஒரு சிலர் நம்ம ஊரிலயே தங்கி இங்கு வாழ்ந்தவர்களில் " அந்தோணி அங்கிள் " குடும்பமும் ஒன்று..

சந்திக்கும் போதெல்லாம்"நானும் உங்க அப்பாவும்னு "ஆரம்பிப்பார் நேரம் ஆகுது அங்கிள் உங்க மகள் தேடுவாங்க பேத்தி அழும்னு சொன்ன,உடனே ஓகே வரேம்மா னு போய்டுவார் ...
எங்களின் இடம் ...எப்போதும் நாங்கள் செல்லும் தூரம் வந்தது அங்கு ஒரு அழகான கல் ..அதை ரொம்ப ரசிப்பேன் சில நேரம் அதில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு தான் திரும்புவேன் ...

மெல்ல மூச்சு பயிற்சி செய்துகொண்டிருக்க மீண்டும் அதே இனிமையான வாசம் என்னை தாக்கியது .அம்மாவும் நெருங்கி வந்துவிட்டார் .அம்மா சில உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்க



"அந்தோணி அங்கிள் "மீண்டும்...மலை பாதையில் நடக்கிறார் ,..... ஓகே இன்னைக்கு லீவ் தானே அதனால மீண்டும் தொடருகிறார் போல நினைத்து ..அம்மாவிடம் அம்மா "அப்பா" இருந்த நம்மகூட வந்து இருப்பாங்க தானேனு கேட்டேன் ,இதற்கு இப்பவும் உங்களுடனே இருக்கிறார் அங்கிள் பதில் கொடுத்துகொண்டே சென்றார் ...


அம்மா இன்னிக்கு குளிர் அதிகம் அம்மா ,சித்திரை மாசம் ஒரு பூ பூக்குமே அம்மா இந்த மலையில அந்த வாசம் இப்போ வந்தது அம்மா னு சொல்ல சீக்கிரமா போகலாம்மா,பாபு வருவான்னு அம்மா சொல்ல மீண்டும் தொடர்ந்தோம் நடையை..


சாலையை அடைந்தோம்...ஆரம்பித்து விட்டது வாகனங்களின் போக்கு வரத்து ... சூரியனும் மேலேழும்பிவிட்டான் , போகும்போது இருந்த குளிர சூரியன் சாப்பிட்டது போல வெப்பம் .........


சாலையின் இடது பக்கத்தில் "அந்தோணி அங்கிள்"அவங்க வீடு ஒரே கூட்டம் குழப்பம் ....ஏன்

என நினைத்துகொண்டே அம்மா இப்படியே இருங்கள் விசாரித்துவிட்டு வருகிறேன்னுசொல்ல..


வீட்டினுள் செல்ல எத்தனிக்க ...........குரல் ஒன்று காற்றில்



"அப்பா" உயிர் பிரிந்து 10 நிமிடம் .....முழுதும் கேட்குமுன் ...


அந்தவாசம் என்னை தாக்க "அப்படியே உறைந்து போனேன் "