Thursday, March 29, 2012

காணி நிலம்







எல்லையில்லா கனவுகள்.
நினைத்து நினைத்து -நான்
ஏங்கிய காணி நிலம் -விழி
விரித்து பார்க்க பார்க்க
விண்ணை தொடும் ஏக்கங்கள் ..
ஏர் உழுது ...நீர் பாய்ச்சி...
சேற்றுக்குள் சுகமாக நடந்து ..
நாற்று நட்டு ---விடியல்தோறும் ..
காணி நிலம் என் கண்ணுக்குள்...
களை எடுக்க............
மருந்து தெளிக்க ...பயிர்
முகம் சிரித்து செழித்து வளர
நாளை அறுவடை .....
இங்கேயே உங்களுக்கு
மதிய உணவு என சொல்ல ....
என்னாலும் முடிந்ததே விவசாயம்
செய்ய ...
இனி செய்வேனா விவசாயம் ???
காணி நிலம் முழுதும் கவர்ன்மெண்டின்
ஆக்கிரமிப்பில் ....
எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏங்கிய
என் விழிகள் கனவுகளில்.............
மட்டுமே செயல்படும்..........

Wednesday, March 21, 2012

"சாமிக்கு பூ"



செம வெயில் இன்னைக்கு சொல்லிட்டே வேலைக்காரி உள்ளே வந்தாள்..

அம்மா உங்க மொபைல் அடிக்குது ....எங்க இருக்கீங்க கத்தினாள்...

அத கொஞ்சம் மாடிக்கு எடுத்துட்டு வாயேன் ..

அந்த ரூம் ல சரியா சிக்னல் இருக்காது ...சொன்னங்க பார்வதியம்மாள்

வேலைக்காரி முனகிக்கொண்டே கொண்டு போனாள்,,

இப்போ போடற வத்தல் ஒரு வருசத்துக்கு வருமுன்னு சொல்லிட்டே

பார்வதியம்மா உள்ளே வந்தாங்க..

இந்த வருடம் தான் வெயில் அதிகம்னு தொலைக்காட்சி அலறியது ,

எங்கு நோக்கினும் பவர் கட் பற்றியே பேச்சு ....

ஆனால் எங்களுக்கு எந்த கவலையுமில்ல ,

நாங்க பார்வதியம்மா வீட்டுக்கு வந்ததிலிருந்து , நோ பவர் கட் ...

அந்த பிரச்னை டிவிசெய்தில மட்டும்தான் கேட்போம்

பார்வதியம்மா வீடு சூப்பரா இருக்கும் .

நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள்னு வீட்டை சுற்றி

ரொம்ப அழகா இருக்கும் ...

பார்வதியம்மா சுத்தமா வைத்திருப்பாங்க வீட்டை..

நாங்க கொஞ்சம் அப்படி இப்படின்னு ,இருந்தா கூட

வேலைக்காரிய விட்டு சரி செய்ய சொல்லுவாங்க..

எங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க ...

ஆனால் இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு

ஒண்டு குடித்தனம்...நிறைய பிரச்சனைகள் ..நகரத்தில

இருந்தோம் ,அங்க காத்து கூட சரியா வராது ...

நாங்க இருந்த வீட்டுக்கு மாடில செல் போன் கோபுரம்

போடுவதற்கு வந்தாங்க...எங்களை காலி செய்ய

சொல்லிட்டாங்க ..... கஷ்டத்தில ,ஆளுக்கு ஒரு

மூலையில இருந்தோம் ...............


எங்க பெரியப்பா வீட்டுக்கு வந்தாங்க இப்படி நகரத்தில

இருந்து என்னத்தை கண்டீங்க....

பெரியவளுக்கு இருக்க வீடு கூட இல்லை ...ம்ம் ...

காலம் அப்படி போய்கொண்டிருக்கு ,என்ன செய்ய....

என்னோட பேச்சை கேளு "தம்பி னு எங்க அப்பா கிட்ட

பேசி ,எங்களை அவர் இருக்கிற கிராமத்துக்கு கூட்டிட்டு

வந்திட்டார் ..

அழகான கிராமம்,அமைதியான ஊர் ..அதிலும்

நாங்க இருக்கிற பார்வதியம்மா வீடு நினச்சாலே ரொம்ப

சந்தோசமா இருக்கு ..


கதவை திறக்கிற சத்தம் , அம்மாதான் வர்றாங்க ..

கண்ணு சீக்கிரமா வா.... சாப்பிடு ..நான்

திரும்ப போயிட்டு சீக்கிரமா வரேன்....

இல்லேன்னா பார்வதியம்மா "சாமிக்கு பூ"பறிச்சிட்டு

போய்டுவாங்க ....

அப்புறமா உனக்கு பிடிச்ச தேன் கிடைகாதுடா

என்றாள் ,என் அம்மா கீச் கீச்...

கொஞ்சு மொழியில் ...

அட என்ன பாக்கறீங்க ...இந்த பசுமை மாறா

கிராமத்தில் சிறகடிக்கின்றோம் ..

இன்னும் இருகின்றோம் .கீச் கீச் கீச்...

இங்கு வாழும் மக்கள் இங்கிருக்கும் எங்களை

போன்ற வர்களுக்காக "செல் கோபுரத்தை"

தவிர்த்ததால் இன்னும் இருக்கிறோம் .."நாங்க சிட்டு குருவிகள்தான் "


வாங்க எங்களையும் கணக்கெடுங்க ....கீச் கீச் ...






Thursday, March 8, 2012

வேகத்தடை .................



பிரண்ட்ஸ் எல்லோரும் பைக் வாங்கிட்டாங்க ,எனக்கும் பைக் வாங்கி தாங்கம்மா,

ம்ம்ம் ....கொஞ்சம் அழுது அடம் பிடித்து புதிய model ...பைக் வாங்கினேன்...

சின்ன பூஜை வீட்டில்..வண்டிக்குத்தான், எடுத்துகொண்டு சிட்டாய் பறந்தேன்...

அப்பப்பா...சைக்கிளில் போவதை விட இந்த சந்தோசம்..........

காற்றை கிழித்து கொண்டு போகும் சுகம் ,தனி சுகம்டா..


ஒரு வேலை அம்மா வேண்டாம்னு சொல்லியிருந்தால் அப்பா வாங்கி தந்திருக்க மாட்டார்....

அம்மாக்கு சின்ன பரிசு வாங்கணும் ,யோசித்துகொண்டே.."pizza corner " வந்தேன் ...

நண்பர்களின் கூட்டம்.....வா...... மச்சி, வாடா..... மாப்பிள்ளை ....வாடா கிரண் ...

"pizza corner " ரில் இருக்கும் அனைவரும் திரும்பி பார்க்க பசங்க சத்தமா கூப்பிட்டாங்க

,"ஸ்டைல்" ஆக வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு வந்தேன் ...

டபுள் cheese ...pizza ..... ஆர்டர் செய்து வெயிட் செய்துகொண்டிருந்தோம் ...

என்னதான் அப்பா அம்மா கூட வந்தாலும் இப்படி நண்பர்கள் கூட வருவதே தனி சுகம் ...

கிரண் மச்சி, என்ன யோசனை....எப்போ ஆரம்பிக்கலாம் என்றான் வினு ,மெசேஜ் செய்து கொண்டே ....

செமஸ்டர் லீவ் ல , செய்யலம்மா னு கேட்டான் வினு .... ..நாம எடுக்கபோற படத்தை பத்தி எங்க அப்பாகிட்ட பேசணும்வினு ....

... அவர் ஓகே சொன்ன பிறகு இதை ஆரம்பிக்கணும்.....

2 மணி நேரம் போனதே தெரியவில்லை ...

அப்போதும் போன் பேசிகொண்டே இருந்தான் வினு ... ...டேய் மச்சி போதும்டா..,எல்லோரும் ஒன்றாய் கூற ...

சிரித்துகொண்டே நான் .. பேசிக்கொண்டே மற்ற நண்பர்களும் கிளம்பினோம் ....

. வினு .. போன் பேசிக்கொண்டே கை ஆட்டி வேகமாய் பைக் ஸ்டார்ட் செய்தான் ...


நல்லா இப்படியும் அப்படியுமாக திரும்பி திரும்பி படுத்துகொண்டிருந்தேன்,இன்னும் அப்பா வரவில்லை..

காலிங் பெல் அடிக்கும் சத்தம் ....திரும்பினால் அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் ...

,படியிறங்கி வந்து, ஹால் லைட் போட்டு கதவு திறக்க...கிரில் கேட்டின் மறுபுறம் கிரண் கதவு திறடா, என்ற வினு வின் குரல் .....


வினு வீட்டுக்கு போகலியா ,கேட்டபடி கதவு திறந்தேன் ...வெளியே சில்லுனு காற்று ...மழை வருபோல இருந்தது ...

அவளை பாக்க போனேன் ,பாக்க முடியல... ரொம்ப நேரம் ஆயாச்சு ...இந்த நேரத்தில போனா எங்க அம்மா திட்டுவாங்கடா ..

..ப்ளீஸ் கிரண் உன் கூட ,உங்க வீட்ல இருந்தேன்னு சொல்லிடுடா எங்க அம்மா கேட்டா.....

சரி சரி உள்ள வா , அவனுக்கு படுக்க என் STUDY ரூம் ARRANGE செய்து கொடுத்தேன்

உங்க அம்மாக்கு தெரிய வேண்டாம் கிரண் .....என்றான் வினு ..

இன்னும் அப்பா வரல டா .காலிங் பெல் அடிச்ச நீ கதவு திறக்காதே .."ஓகே " சொன்னான் வினு .

வேறு உடை எடுத்து கொடுத்து விட்டு , அம்மா பக்கத்தில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தேன்

நேரம் ஆகுதுடா கிரண் ..7 மணிக்கு போகணும்னு சொன்னியே , அம்மா கீழிருந்து சத்தம் போட ,துள்ளி எழுந்தேன்

பக்கத்தில வினு நின்றுகொண்டிருந்தேன் ..டேய் எப்போ மாடிக்கு வந்த , அம்மா உன்னை பாத்தாங்களா..

இல்ல கிரண் மச்சி , அம்மா என்னை பார்க்கவில்லை ,நீ சீக்கிரம் கிளம்புடா னு சொல்லி அமர்ந்தான் சோபாவில் வினு...
.
நான் எழுதிய "வேகத்தடை " கதை யை படித்து கொண்டிருந்தான் .....

ஆனந்தமான குளியல் , எனக்கு பிடித்த ஷர்ட் எடுத்து வைத்து விட்டு போய் இருந்தாங்க அம்மா ...

கிளம்பறேன்மானு சொல்ல,இரு இரு பூஸ்ட் எடுத்து கொண்டு வரேன் கிரண் சாப்பிட்டு போடான்னு சொன்னாங்க அம்மா ....

... வினு வந்திருக்கான் ,அவனுக்கும் எனக்கும் பூஸ்ட் தாங்கம்மா ....

வினு வோ ஏதும் வேண்டாம் , சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்லியபடியே பாத் ரூம் குள் நுழைந்தான்

பூஸ்ட் எடுத்து கொண்டுவந்தாங்க அம்மா. .எங்கடா வினு ?

அம்மா கேட்க ..பாத் ரூம் ல இருக்கிறான் அம்மா என்றேன் ..

என்ன ...........என்றுமில்லமால் இன்று இப்படி காற்று .............வீசுகிறதே .........

தனக்குள் பேசிகொண்டே போனாங்க அம்மா ....

வினு அம்மா உன் கிட்ட பேசணும்னு வந்தாங்கடா ....

பதில் ஏதும் கூறாமல் PERFUME எடுத்து அடித்து கொண்டிருந்தான் .. போதும்டா மச்சான் ,.....

கொஞ்சமாவது அதில் இருக்கட்டுமே எனக்கு என்றேன் சிரித்து கொண்டே.....

ஏன்டா வினு ...அவளை பார்க்க போன இப்படிதான் போவியா ...

சிரித்தான் வினு ...காற்று மிக பலமாக வீசியது ...வண்டியை வீட்டு உள்ளிருந்து எடுத்தேன் .. .

கிரண் எனக்கு எழுந்ததிலிருந்து தலை வலிக்குதுடா ,அந்த நாயர் கடையில ஒரு டீ சாப்பிட்டு போவோம் என்றான் வினு ...........

,அம்மா பூஸ்ட் கொடுத்தாங்க சாப்பிடமா வந்த ..இப்போ நாயர் கடைக்கு போகலாம்னு சொல்ற....

போன் அடிக்குது பார் எடுத்து பேசுடா வினு...

கிரண்,.அவளை பாக்காம வந்திட்டேன்னு அவளுக்கு கோவம்....அதான்

போன் பண்ணிடே இருக்காடா ..என்ன பதில் சொல்லன்னு தெரியலடா என்று வினு சொல்ல ...

இன்னும் சண்டை போடறாளா.. டா ..சிரித்தான் ..

இல்லடா கிரண் ,ரொம்ப பாசமா இருக்காடா .......

திடீர்னு கோவப்படறாடா..எங்கயும் பைக் எடுத்துக்கொண்டு போக கூடாதாம் .

அவளை மட்டும் தான் வண்டியில கூட்டிட்டு போகணுமாம் பிரண்ட்ஸ் கூட ஏறக்கூடாதாம் ,ரொம்ப ஆர்டர் போடறாடா, மச்சி

என்றான் வினு ..

சிரித்தேன் நான்.."காதலில் கண்டிப்பும் சுகமா தானே இருக்கும் ...சொல்லிட்டே ,

அம்மா, கிளம்பறேம்மா.. என்றேன் ..
.
..பத்திரமா போகணும் பா , அப்பா மொபைலுக்கு பேசு .. சொல்லி கொண்டே, அம்மாவின் குரல் எங்கள் அருகில் கேட்க

கிரண் சீக்கிரமா கிளம்பு உங்க அம்மா கேக்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது டா என்று வினு கூற

......சிரித்தேன் நான் ...

அம்மா வருவதற்குள் சீறியது என் வண்டி............மிக பலமாக காற்று வீசியது ....

தொடர்ந்து மொபைல் அடித்து கொண்டே இருந்தது ,

வினு போன் எடுத்து பேசுடா , என்றேன்

... அங்க போன பிறகு பேசலாம்னு சொன்னான் வினு ....

காற்றை கிழித்துகொண்டு வேகமாக செல்ல ஆரம்பித்தேன் ...

வழியில் சந்துரு அவனுடைய பைக்ல,அவனும் எங்களோடு .........

ஷ்யாம் வீடு வாசலில் பைக் நிறுத்தினேன் ..மொபைல் கையிலெடுத்தேன் விடாமல் அடித்தது..அம்மாதான் ..

அவன் எங்கடா என கேட்டான் சந்துரு ..யார் ? டா மச்சான் .. அதான் நம்ம காதல் மன்னன் வினு ...

என்னோடதானே வந்தான்னு சொல்ல ....என்னடா கிரண் நீ மட்டும் தானே வந்த ...என்னாச்சு உனக்கு சந்துரு கேக்க .....

கொஞ்சம் யோசனையுடன் . அம்மாவுக்கு போன் செய்தேன் ..லைன்

பிஸி யாகவே இருந்தது ........

ராமின் கால் உள்ளே வர அதை அட்டென்ட் செய்தேன்......நேத்து ..நைட் ACCIDENT டா கிரண் ..

வண்டில வேகமா போயிருக்கான் வினு , ஸ்பீட் பிரேக் கவனிக்காம போய் ,விழுந்து இருக்கான்டா .

தலையில பலமா அடிப்பட்டு ..........குரல் கமற,

நம்மளை எல்லாம் விட்டு போய்டாண்டா வினு ..

..சொல்லி அழ ஆரம்பித்தான் ராம் ..... .

உயிர் என்னுள உறைய

......... . வினு என்று கதறினேன்

Saturday, March 3, 2012

அந்த நிமிடம் ...



அந்த நிமிடம் ...

"உள்ளாடும் கற்பனைகள் ஒரு கோடி" அனுபவித்து கொண்டிருந்தேன் , அந்த குரல் அல்லவா என்னை ஈர்த்தது ...அந்த நிலையில்

ரயில் பிளாட்பாரத்தில் இருக்கும் அனைவரும் என்னை பார்க்கும் உணர்வு ..அழகிய சிவப்பு வண்ணத்தில் சின்ன வேலைப்பாடுடன் கூடிய

சேலை எனக்கே என்னை பிடித்திருந்தது ..

ஒரு "பீச் கொடுங்க என கை நீட்டியபோதும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் , அவனின் பார்வை என்மீதே ..மீண்டும்" பீச் ஸ்டேஷன் "

கொடுங்கன்னு கேட்டவுடன் ரயில் அரை மணி நேரம் லேட் என்றான் ...அதே பார்வையில் ..டிக்கெட் கொடுங்க ..என் கவனம் முழுதும் டிக்கெட்

வாங்குவதிலேயே ....

ம்ம். முதலாய் நிகழ போகும் சந்திப்பு அசை போட்டபடி திரும்பினால் ..சில்லறை இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு போங்க அப்படின்னு

சொன்னான் அவன் ....இவன் நம்மை போக விட மாட்டான் போலிருக்கே...நினைக்க ரூபாய் கொடுத்துவிட்டு நகர்ந்தேன் ..கவுன்ட்டர்

குள்ளிருந்தும் அவன் பார்வை என்னை தீண்ட .ச்சே ..நினைத்துகொண்டே ..அவன் பார்வை மறையும் இருக்கையில் அமர்ந்தேன் ...

அம்மாவிடம் தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என பொய் சொல்லிய குற்ற உணர்வு ..ம்ம் அதை மீறியும் குளிர்ந்த உணர்வு எனக்கு..இந்த

சந்திப்பு ..எப்படி இருக்கும் ..நான் எப்படி பேச வேண்டும் ..கொஞ்சம் பயமும் வெக்கமும் வந்தது ,சில்லென்ற காற்றில் முகத்தில் பட

வெளியே கவனித்தேன் ,ரெயில் மெதுவாக நின்றது ..

அக்கா இன்னைக்கு ஏதும் வாங்கலையான்னு, கேட்டுட்டு அடுத்த இருக்கை நோக்கி சென்றாள், மேரி ..௦ நான் படிக்கும் பருவத்திலிருந்தே

தெரியும் அவளை ,சின்ன சின்ன பொருள்கள் ரயிலில் விற்பது அவள் தொழில், அவளுடைய அம்மா பழம் விற்பவள்...கூப்பிட்டவுடன்

என்னக்கா வேணும், "கீ - செயின் "இருக்காம்மானு என்று கேட்க, இருக்குக்கா ..இதோ வரேன் என்றாள்..

அழகியதொரு "கீ - செயின் ...ஒரு சிறு இதயவடிவமும் பெரிய இதய வடிவுமும் சேர்ந்தது போல .."வெள்ளை மெட்டலில்" வாங்கினேன்

...ஒண்ணும் புரியவில்லை , சிறு பதட்டமும் ,படபடப்பும் மட்டுமே ..ரெயில் கிளம்பி விட்டது மெதுவாக ...

குளிர்ச்சியான உணர்வு மெல்ல உடல் முழுதும் பரவ...பயந்தே போய் விட்டேன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி போய் விடலாமா என்று

.."போனில் பேசும்போது மட்டும் தைரியமாய் பேசி இருக்கும் நான் ,,,,நேர்ல சந்திக்க போறோம் அதனாலா இப்படியான்னு, என்னையே கேட்டு

கொண்டேன்...என்னுடைய மொபைல் பேசியில் வந்த தொடர்பை நான் எடுக்காமல் இருந்திருந்தால் இப்படியொரு நிலை..சே சே...ஒரு

வருடமாய் பேசிவிட்டு இப்போது ஏன் இப்படி ஒரு எண்ணம்....பயம்தான் ..

அதற்குள் பீச் ஸ்டேஷன் அடைந்தேன் ..இறங்கி என்ன செய்வது எப்படி கண்டுபிடிப்பது ..ஒண்ணும் புரியவில்லை அப்படியும் இப்படியும்

பார்த்து விட்டு ,அங்கிருக்கும் ஸ்டால்ல தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கையில் அமர்ந்தேன் ..


15 நிமிடம் யாரும் வரவில்லை ,போன் செய்தேன் ...மீண்டும் எப்போதும் பேசும்போது, பாடும் பாடலையே பாடினான் ...

கோவம் தானே உனக்கு உன்னை காக்க வைத்துவிட்டேன் என்று ...இப்போதும் உன்னை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் என்று...சொல்ல

சில்லென்ற ஒரு உணர்வு ...அங்கும் இங்கும் அலை பாய்ந்தது என் மனதை போல கண்களும் .."கண்களும் கவி பாடுதே " மீண்டும் பாடல்

...நான் அமைதியாய் இருக்க ....

"நானே உன்னை வந்து பார்த்து பேசுகிறேன்..உன்னை எனக்கு தெரியாது..ஆனால் எனக்கு உன்னை தெரியும்னு சொல்லி சிரித்து லைன் கட்

செய்தான் ..என்ன செய்ய அவனை ...கோவத்துடன் யோசிக்க ...
.
இரு ரெயில் கடந்து சென்றது அதன் பாதையில்...தவறான் பாதையை தேர்ந்தெடுத்து விட்டோமா ..னு, நினைக்க ,

மனம் அலை பாய்ந்தது ..தனியே அமர்ந்திருந்தேன் ,மதிய வேலை நெருங்க வயிற்றில் இனம் புரியாத பயம்...பார்க்கும் யாரும் இவனா

அவனா என நினைக்க.....

மீண்டும் counterku சென்று டிக்கெட் கேட்டேன் வீடு திரும்ப ...மனம் வலிக்க ஆரம்பித்தது .....

டிக்கெட் தரதில்லீங்க குரல் ....கேட்டது போன்ற உணர்வு ...நிமிர்ந்தேன் ..

எங்கள் ரயில் நிலையத்தில் பார்த்தவன் அல்லவா ......."கண்டேன் காதல் வரம்" என்று பாடியபடியே ..என் முன் அவன்...

எப்போதும் கோவத்துடன் அவனை பார்க்கும் நான் நிமிரவே இல்லை அந்த நிமிடம் ....

Friday, March 2, 2012

சின்னவள் .........


தாயை எதிர்ப்பார்த்தபடி நான்

அவள் அவர்களின் குரலுக்கு கட்டுபட்டவளாய்..

நான் அவளுடைய சிந்தனையிலே ..

அதோ வந்து விட்டாள், என் அருகே --



சின்னவளாக உன்னை அவங்க -பார்த்ததால

நான் விலை போகல டா -அங்க



ஜாதியா ,இருக்கிறாள் இவள் இருக்கட்டும் ....

அவளை எடுத்து கொள்வோம் ..இன்றைய நம்ம மார்கெட் ல

நல்ல விலை போவா ... கொஞ்சம் வளர்ந்தால் --

இதை கேட்டு பயந்தபடி நான் -தனியே ...


மாறும் உலகில் .......



மாறும் உலகில் .....
இப்படியே உறைந்து போனாலும் ....

உன் நினைவுகள் என்னுடனே உறையட்டும்.
வெப்பம் இல்லா உலகில்......

குளிர்ந்து என்னுடனே இருக்கட்டும்..
படிவமாய் வெளிப்படும் காலத்திலும் ...

பக்குவமாய் என்னுளே நீ ...
நீ எனக்குள்ளே எப்படி என்று....
யோசிக்கட்டும்....இது எப்படி சாத்தியம் என்று....