Tuesday, March 25, 2014

நினைவுகளில் கூடுவோம்...




ஆராதிக்கும் அழகாய் அன்பின் வலியாய்
உன் நினைவுகள் நிரம்பியிருக்கிறது என்னுள்...

மணம் வீசும் மாலை நேர பூக்கள் கதைபேசும்
காற்றினில் அசைந்து இசைவாய் இணைக்கும்
நம் எண்ணங்களை..

தவிக்கும்பொழுதுகள் அற்புதமாய் பூத்திருக்கும்
அந்திமாலையில் அவளின் வருகையில்..

ஆனந்தமாய் அழகூட்டும் அவளின் அருகாமை
அந்நியப்பட்டு போகும் அந்திமாலையின்  பொழுதுகள்

பூவாய் மென்னிதழ் புன்னகையில் பூத்தஅசைவும்
மொழியென்று என் விழிகள் அறியும்..

நீண்ட பொழுதின்  காத்திருத்தலில் மெல்லிய
இருக்கங்கள் கூடுதாலாகிபோகிறது தனிமையில்..

மணம்வீசும் குழலின் கூடிய விரல்கள் வீணையாய்
மீட்டுவதில் மெய் மறந்துதான் போவாய் அப்பொழுதெல்லாம்
நீ….என் மடிமீதினில்….        

நினைவுகளில் கூடுவோம் வாழ்வினில் கூடுதாலாகி 
போகின்ற நாட்களை எதிர்க்கொண்டுகாத்திருக்கிறேன்
 உனக்காக……


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

No comments:

Post a Comment