Friday, January 17, 2014

குயிலோசையில் மூழ்கிய நினைவோசை.....



வட்ட நிலவாய்! உருளும் விழியாய்!

மழைநேரத்தும்பியாய்! தேனருந்தும் தட்டானாய்!

மனதிற்கிசைவாய்! மெல்லிய குரலொளிக்க

நினைவுச்சோலையில் நீந்திக்களிக்கையில்

பாடியது அந்தி வெய்யிலா?

வெளிவரக்காத்திருக்கும் மதியா?

அந்தியைமுத்தமிடக்காத்திருக்கும் சமுத்திரமா?

அங்குமிங்குமாய் அலைபாயும் கருவிழிகளில்

காந்தலாய், கருப்பாய், கரும்பாய்

நீல்வால் கொண்டு நெடிதுயர்ந்த மரம்தனில்

தனியே நான் களிக்க உன் குயிலோசை!!

நீந்தும் வெண்மேகமாய் நீட்டித்த அந்திப்பொழுதின்

மழைநேரமேகத்தூதனாய்  எனக்குள் சொட்டும்

தேனாய் தித்திக்க சட்டென்று படபடத்து பறக்க

கருமை சூழ்மேகம் தாரையாய் பொழிய ஆரம்பித்தது

ஆனந்த களிப்பினில் மூழ்க ஆரம்பித்தது என் மனம்

உன் வரவில்....


**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))



2 comments: