Friday, January 24, 2014

ஒரு மதியபொழுதினில் ஒர் நாள் ..1930 ல்.....







முற்றத்து நடுவினில் ஓயாமல்

சத்தமிட்டபடி தானியத்தை கொத்தித்தின்றன

குருவிகளும் காக்கைகளும் புறாக்களும்

ஒரு மதியபொழுதினில்


இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்

இறக்கை அடிப்பிலே தெரிந்தது  அதில்

ஒற்றை புறா ஒன்று உணவை  விழுங்கி

ஊட்டிக்கொண்டிருந்தது பிள்ளைக்கு


அடுக்களையில் புகை சூழ் நடுவே

கற்றையாய் விழும் கூந்தலை

அள்ளி முடிக்க வியர்வை மழையால்

குளித்து போயிருந்தன அவள் விழிகளும்


சைக்கிளின் மணிச்சத்தத்தில் படபடவென

பறந்த பறவைகள் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது

கிடுகிடுவென்று வாசல் போனது மனம்


நீள்வாசலின் நேரேதிரே மாட்டியிருந்த

அலமாரி கண்ணாடி கூறியது அவள்

நெற்றி பொட்டிழந்தக்கதையை ..அவன்

நினைவுக்குழந்தையாய் கரம் பற்றி 

அணைத்திருந்தான்


அழவுமில்லை மீண்டும் பொட்டிட துணிவுமில்லை

பறவைகளினூடே ரெக்கைகட்டிபறந்தமனம் 

சிலாகித்தது ..!!

நெல் மணிகளை சிதறிக்கொண்டிருந்தது

கைவிரல்கள்..!



கவிதையாக்கம் 
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்** 

4 comments:

  1. சோகம் இழியோடும் கவிதை. இனிமை.

    ReplyDelete
  2. சோகம் இழையோடும் கவிதை. இனிமை.

    ReplyDelete