Friday, January 10, 2014

சிகரம் தேடிய தென்றல்



உழன்றது மனது 

உனைநினைத்து

என்னுள் ஊறிய 

ஒன்று உடையாமல்

கடலில் ஊறிய 

அலையாய்

சூரியனில் ஊறிய 

வெப்பமாய்

காற்றில் ஊறிய 

சுழலாய்

மலரில் ஊறிய 

மணமாய்

நேர்த்தியாய் 

சங்கு கழுத்தின்

வளைவுகளாய் 

கோர்க்கபட

வர்ணஜாலம் 

கூடிக்கொண்டிருக்கிறது

என்னுள்ளிருந்து 

வார்த்தைகளாய்....

கண்டதும் 

அணிவிப்பேன்

காதலில் ஊறிய 

மாலையை உன்னுள்!!!

கட்டவிழ்ந்த பறவையாய் 

சில்வண்டாய்

சிகரம் தேடிய தென்றலாய்

சிறகடிக்கிறேன் இனிமையாய்....


**தமிழ்**

(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)


No comments:

Post a Comment