Monday, January 13, 2014

இனிய “தை” மற்றும் தமிழர் “திருநாள் வாழ்த்துக்கள்..



பச்சைபட்டை உடுத்தியது போன்ற உன் வண்ணம்
பசும்தேகமெங்கும் பசுமையாய் என் முன்னம்

எங்கெங்கு நோக்கினும் உன் வண்ணம்
வானவில்லாய் வளைந்து மின்னும்

காணும் பொழுதினில் தலைசாய்த்து
நிலம் நோக்க நடமாடும் பொன்வண்ணம்

புன்சிரிப்பினில் நளினமாய் நாட்டியமாடும்
சலசலக்கும் இசையோடு மாலை வெயிலின்

பொன்னிறத்து மங்கையவள் இடைவெளியின்றி
சாய்ந்தாடும் பசுந்தோகையவள்

ரகத்திற்கு ஒன்றெனினும் என் உயிருக்குள்
உயிராய் விளைந்தெழும் நெல்மணியின்

திருநாளாம் அறுவடைதிருநாளை
ஆரத்தழுவி ஆண்டாண்டு தோறும்
புத்தாண்டாம்..தமிழர் திருநாளாம்….

இந்த பொங்கல் திருநாளில் உங்கள் அனைவருக்கும்
எனது இனிய “தை” மற்றும் தமிழர் “திருநாள் வாழ்த்துக்கள்..

அன்புடன்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்”

2 comments:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete