Monday, January 27, 2014

உனை காண காத்திருக்கையில்…


நிலவும் விண்மீனும் வானத்தில் நடனமாடும்..!!

மீனினம் கடலினில் சேர்ந்தாடும்..!!

மாம்பழ வாசமதில் மரத்தினை சுற்றி

வண்டும் சுழன்றாடும்..!!

அள்ளி தெளிக்கும் வாசல் நீரும்

கைகளில் நின்றாடும்..!!

புள்ளிவைத்து கோலமிடும் விரல்கள்

நாணத்தில் நாட்டியமாடும்..!!

பின்னலிட்ட கூந்தலும் தன்னிலை மறந்து

அவிழ்ந்து அலைபாயும்..!!

இருளின் வைரமாய் மின்னும் விளக்கின்

ஒளியும் நின்றாடும்..!!

என் மன ஒலியும் ஆர்பரிப்பாய்

உன்புன்னகையில் துள்ளிவிளையாடும்..!!

உனை காண வேண்டி தவம் இருக்கையில்

விரல்களுடன் இணைந்த நாரும் பூக்களுடன்

சேர்ந்தாடும் !!இவையனைத்தும் போதும் எனில்

விரைவினில் வந்து முகம் காட்டிவிடு..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்

2 comments: