Sunday, January 12, 2014

நீளும் விழியாள்

January 12, 2014 at 8:18p

வெண்ணிற தாமரையாய்
வெளியில் உதித்த ஒன்று!

விழிச்சிரிப்பில்வீதிவழி புறப்பட
பஞ்சுப்பாதம் தாங்கிய

பவள மேனியாளை
கண்ணுற்ற காற்றும் நெகிழ

கண் கொண்டு அணைத்தவர்கள்
கருகிதான் போயினர்!

கார் கூந்தல் அலையும் நடை
பார்த்து ,இடை ஒடிந்திடுமோ!

என துவண்டுத்தான் போயினர்!

நீளும் விழியாள் நெற்றி நிலம்
நோக்க நீண்டுத்தான் போனது பாதையும்…

நெடிதில் மறைந்துதான் போனாள்
நினைவுக்கனவினில்……!

பூத்தது உலகம் விழித்தது விடியல்!


**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)


2 comments: