Sunday, February 2, 2014

இது உனக்கானது…!!





தனிமையில் தாள் எடுத்தேன் என் காதல்

தனை உன்னில் எடுத்துரைக்க

இனிப்புச்சுவையில் திகட்டாத சுவையுமாய்

அமிழ்தமாய் எனதன்பில் கலந்து

கிடக்கும் என்னுடைய முகவரியே

என்னுயிரே..!!

முக்கனியே ..!!

முழுமதியே ..!!

உனை பற்றி எழுத

தென்றலினூடே தழுவி

தூண்டுகிறாய் என்னை..!

விண்மீனெல்லாம் கூடி ஒன்றாய்

மறைந்திருக்க

பூஞ்சோலையும் குயிலை உறங்கச்சொல்லி

காத்திருக்க

விடியும் வேளையும், நீல வானமும்

பசும் பட்டாடைஉடுத்திய நிலமும்

நான்  உனை  நினைத்து வடிக்கும் வார்க்கும்

வார்த்தைகளை பார்த்து அதிசயப்பட்டு போகிறது..!!

எனில் நகைக்கும் விழிமலருடையவளே

நீ மட்டும் தனிமையில் படித்துவிடு….!!

இது உனக்கானது…..!!


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

2 comments: