Tuesday, February 4, 2014

வாடைக்காற்று



சலசலக்கும் இலைகள் தழுவிய வாடைக்காற்று 

அதன் தழுவலில் தேன் துளியென விழித்த மனது

சுழன்ற அந்தஒரு பொழுதின்உன்னுடனான

நினைவுகுமிழ்கள் மூச்சுக்காற்றில் பயணிக்க

அதனுடன் இணைந்து நானும் பயணிக்கிறேன்

அரவமற்ற அமைதியான நறுமணம் சூழ

உன்னுடன் இணையும் அந்த தருணம்

நான் என்னையிழந்த தருணம்..!!

கன்னக்கதுப்பில் பனிக்காற்றின் குத்தலில்

குழம்பித்தான் போய்விட்டேன் நிஜமா ?

நினைவா?

 என்று புரண்டு படுக்கிறேன் வெற்றிடமாய் ..!!

வெப்பமாய் காற்று உள்ளேயும் வெளியேயுமாய்

விழித்து பார்க்கிறேன்….!! 


புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கிறாய்நீ .!!




கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ் 

2 comments: