Thursday, August 30, 2012

பொம்மலாட்டம் .





வேகமா போற ..மெதுவா போ .இன்னும் நாடகம் ஆரம்பிக்கலை..
சீக்கிரம் போனாதான் இடம் பிடிக்க முடியும் .
மெல்லமாக இருளில் எனை இடித்து கொண்டு போனாள்...என்னவள்

ரொம்ப பத்திரமா பாத்துக்கோ அவளை, அவ எனக்கு முக்கியம் ..
அவளில்லாத வாழ்வு என்னால நினைக்க முடியாத ஒன்று..
ம்ம் கோவம் கோவமா வந்தது ,அவ மட்டும் தான் நேசிக்கனுமா ,
ஏன் நான் உன்னைய நேசிக்க கூடாதா ,நான் உனக்கு சொந்தமில்லையா?
என்ன கொஞ்சம் தூரத்தில இருக்கேன் ,நான் இல்லாம நீ இருக்க முடியுமா....
நம்ம நிகழ்சிகள் ஏதும் நடக்குமா.. புரிந்து கொள்ளாமல்,
நீ அவளுக்கு மட்டும் சொந்தம்னு சொல்றது சரியில்ல ..
ஆரம்பித்தது பொம்மலாட்டம் ..சீதா புராணம் ...ரொம்ப சுவையா நடந்து கொண்டிருந்தது .
அவளை மெதுவாக கவனித்தேன் ... அவள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்..

ம்ம் உள்ளே வரட்டும் பார்த்து கொள்கிறேன்... பொம்மலாட்டம்
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் முன் ஒரு சிறு இடைவேளை ....
ரொம்ப வலித்தது எனக்கு ,என்னை பார்த்து கொண்டே இருந்த,
அவளை மெல்லமாக தொட முயற்சிக்க அவள் மற்ற என் சொந்தங்களுடன்,
சேர்ந்து வழி விடாமல் ....கவலையோடு .....நான் ..

பேச ஆரம்பித்தேன் பொம்மலாட்டம்
வருசத்திற்கு ஒரு முறை என்றாகி விட்டது ,அழிந்து போக ஆரம்பித்து விட்டது.
நாம் சரியாக ஒன்று கூடி சிறப்பாக நடத்தினாள் மீண்டும் இந்த கலைக்கு
புத்துயிர் கொடுக்க முடியும் என் பேசி முடிக்க
மீண்டும் ஆரம்பித்தது பொம்மலாட்டம் ...சுழன்று சுழன்று ஆடினாள் அவள் .
நான் அமைதியாக அவளை கவனித்தேன் .. திடீரன என்னை இணைத்து ,
அவள் சுழல பொம்மலாட்டம் களை கட்டியது... .ஒரே கை தட்டல் விசில்
என தூள் பறந்தது அங்கு ...இது மாதிரியான நேரங்களில் மட்டும் அவள்
என்னை நெருங்க முடியும் ..என்ன செய்ய அவள் ஓரிடம் நான் வேறிடம் .
அவளின்றி என்னால் இயங்க முடியாது நான் இன்றி அவள் மட்டுமல்ல
யாராலும் இயங்க முடியாது .

பொம்மலாட்டம் நிறைவு பெற்றது என கூறி சேர்ந்தன விரல்கள்...
கட்டை விரல் எட்டி பார்த்தது சுண்டு விரலை ...

மெல்லமாக இடித்து கொண்டு போனவள் கை விரல்கள்
கோர்த்து வீடு திரும்பினாள் கணவனோடு...

2 comments: