Friday, August 3, 2012

கருவறை ஊமை

மலையில நாம் ஓடி இருந்தால் நிச்சயம் வளைந்து நெளிந்து ஓடி

பாதையை பிடித்திருப்போம்..

ஆனா இப்படி எல்லாருடனும் ஓட வேண்டி இருக்கே நொந்துகொண்டேன்.

நான் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி மட்டுமே எனக்கு.

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களோடு ஓடிவர நான் மட்டும் வெற்றிக்கனி பறித்தேன்,

அளவில்லா ஆனந்தத்தில் மிதக்க..

என்னுடன் இன்னொருவரும் இணைந்து வர.....

நான் மிகவும் வேதனையோடு வெற்றியை பகிர்ந்து கொள்ளணுமா

என நினைத்து கண்ணீர் விட்டேன்..

அம்மா சந்தோஷத்தில் தடவி கொடுத்தார்.. விட்டு கொடுத்தேன்..

நாட்கள் நகர்ந்தன, நிறைய வேறுபாடுகள்

எங்களுக்குள். நிறைய சந்தோசங்கள்

சின்ன புன்னகைகள் ,விட்டு கொடுத்து இருப்பது

என எல்லாவிதத்திலும் ஒற்றுமையாய் இருந்தோம்..

புது உலகை நோக்கி எங்கள் பயணம் முதலில் அவளும் ,பின்னர் நானும் ..

எங்கள் அருகினில் அம்மா ......சந்தோசங்கள் கொஞ்சல்கள் ...

அவள் தங்கையாம்,நான் அண்ணன் என்று பல குரல்கள்....

அருகினில் அம்மா... சட்டென்று ஒரு மயான அமைதி அருகினில் குரல்களை காணோம்

.கண் விழித்து பார்க்க தங்கையை காணோம் ..குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள்

9து மாதங்கள் என்னுடன் வாழ்ந்தவள்,இருட்டுக்குள் என் அன்பை பெற்றவள்

பிறக்கும்முன்னே வெற்றி பெற்றவள் பெண் குழந்தை என்பதால்..

அழிக்கப்பட்டாள் என் சகோதரி .


விருப்பமில்லா பிறப்பை ஊமையாய் எதிர் கொண்டேன் நான்...



2 comments:

  1. பெண்சிசுக் கொலை பற்றிய உங்கள் பதிவு அருமை

    ReplyDelete