Monday, September 3, 2012

வெள்ளை ரோஜா




வண்ணங்களை துடைத்து போன்றது போன்ற வெளிச்சம் என் முகத்தில்.

ஏன் இப்படி என்றும் இல்லாமல் ஒரு பிரகாசம். என்னையே

நான் கேட்டு கொண்டேன் ,கண்ணாடியை பார்த்து.....

நேரம் 8 மணி..ஏன் இன்னும் என் கைபேசி ஒலிக்கவில்லை ..

நேற்று நடந்த சண்டையின் தாக்கமாக இருக்கும் என

நினைத்து கொண்டே ,குளியலுக்கு சென்றேன்....

அம்மா சந்திரா என கூப்பிட வரேன் மா ..என சொல்லிவிட்டு

குளியலறையில் புகுந்து கொண்டேன்..

"நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன சிறகை"

பாடலை பாடிகொண்டே குளியல்.....

அம்மா கத்தி கொண்டே இருந்தார் ..

அம்மா வந்துவிட்டேன் ..சொல்லுங்க ..ம்ம்ம்.

குளிக்க போனால் ஒரு மணி நேரம் எனகேட்டுகொண்டே

எனை பார்க்க, தலை துவட்டியபடியே நான் ....

தினம் தினம் தலையில் தண்ணீர் ஊற்றாதேனு சொன்னால்

கேட்க மாட்டியா?

மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்கு தெரியுமில்ல ..

என சொல்லிகொண்டே சமையலைறைக்கு சென்றுவிட்டாள்.


"என்ன சத்தம் இந்த நேரம்" என ஒலித்துகொண்டிருந்த

கை பேசியை ஆசையாய் எடுத்தேன் ..

இந்து பேசினாள்....

இன்னைக்கு 11 மணிக்கு பரீட்சை முடிவு ..நினைவிருக்கா....

கொஞ்சம் பயத்துடன் ம்ம்.

நினவிருக்கு..சொல்லிட்டு .....

என்ன அமைதியாய் இருக்க சந்திரா ....

ஏன் நேற்று நடந்ததையே நினைத்து கொண்டிருக்க..

என இந்து கேட்க

அமைதியாய் நான் ..

போன் ஏதும் வரவில்லையா,

குறுஞ்செய்தி கூட வரவில்லையா,

நீயாவது பேசிவிடு...

சண்டையை தொடர்ந்து வைத்து கொள்ளாதே

என சொல்லிகொண்டிருக்கும்போதே தொடர்பு அறுபட்டது...

அந்த அழைப்பு வரும்னு நினத்துகொண்டேயிருக்க

நேரம் ஓடி கொண்டே இருந்தது..ம்ஹ்ம்..வரவில்லை....

மீண்டும்இந்துவின் அழைப்பு ...அம்மா விடம் கொடு...

என்றாள்..

அம்மாவும் அவளும் பேசி கொண்டிருந்தாங்க ..

என்னுடைய சிறு வயது தோழி ஆயிற்றே அவள் ..

அம்மாவிடம் சொல்லிவிடுவளோ என்ற பயம் இருந்து

கொண்டே இருந்தது...அம்மா முகத்தையே பார்த்து

கொண்டிருந்தேன் ..ஒன்றும்

நடக்கவில்லை..சிரித்து கொண்டே இருந்தாள்..

புன்னகைதான் அழகு அவளுக்கு ...எப்போதும்

அப்பாவின் சிந்தனயில் சோகமாய்

இருப்பாள்..ஆனால் இந்து பேசியதால் அழகான புன்னகை முகம் ..

கைபேசியில் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தேன் அம்மாவை...


பரீட்சை முடிவு வந்தாச்சுன்னு இந்து போன் செய்தாள்..

நான் எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் என்று சொன்னாள்.

ஏதும் ஏன் காதில் விழ வில்லை ..ஏன் என்னாச்சு..

நான் பேசட்டுமா அவளிடம் என கேட்க .....வேண்டாம்

இந்து என்றேன் ....

புரிந்து கொள்ளாத என ஆரம்பித்து அப்படியே நிறுத்தி விட்டேன் ...

என்னுடைய வாழ்வில் எப்போதும் வேண்டும் நட்பாய்,

தோழியாய்..நீ மட்டும் ....

உன்னையும் என்னையும் புரிந்து கொள்ளாதா , அந்த காதல்

வேண்டாம் என்றான் சந்திரா என்கிறசந்திரன் ....அமைதியாய் .

நட்பை புரிந்து கொள்ளாத காதல் வாழ் நாள் முழுதும் புகைந்து

கொண்டே இருக்கும்... என்றான்

யோசிக்காதே சந்திரா ....ஏதும்...

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருகிறேன்....ஏன் கூறி

அழைப்பை துண்டித்தாள் ..

அம்மா என அழைத்து கொண்டே இந்துமதி

வீட்டிற்குள் ....வந்தாள்....

எனக்கு பிடித்த வெள்ளை ரோஜாக்களுடன் ......

நட்பு தூய்மையானது என்றும் ரோஜாவை போல

1 comment:

  1. சந்திரா யார் என பிற்பகுதியில் சொன்னது...கதைக்கு சுவை சேர்த்தது!

    ReplyDelete