Monday, August 20, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் .......



ரயில் விட்டு இறங்கி ரயில்பாதை கடந்து நடந்தாள்..அவளை தாண்டியும் முன்னும் பின்னுமாய் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் காலெடுத்து வைத்தாள் , இன்னும் ஒரு 5 நிமிடத்தில் உள்ளே நுழைந்து விடலாம் ..சட்டென. ஒரு குரல் நமஸ்தே ஜி..
நமஸ்தே என சொல்லிவிட்டு பரப்புடன் அலுவலகத்தில் நுழைந்தாள்.

உள்ளே நுழையும் போதே ஒரே வாசம் பொங்கல்,இட்லி வடை சட்னி என என் மூக்கை துளைத்தது ....வாம்மா துளசி உள்ளே டிபன் சாப்பிட்டு விட்டு சீட்டுக்கு போகலாம் என கூப்பிட டிபன் அறைக்குள் நுழைந்தேன்...

2இட்லி யும் வடையும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே ..அப்பாவின் நண்பர் எத்திராஜுலு சார், இந்தாம்மா என்றார் ஒரு சிகப்பு ரோஜாவும் அத்துடன் ஒரு கடிதமும்...அங்கிள் நீங்களே படியுங்க,தினம் தான் இந்த கதை நடக்குதே , அந்த பூவையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்னு சொல்லிட்டு என் சீட்டுக்கு சென்றேன்..

தபால் அலுவலகம் நான் பணி புரிந்தது..மிலிடரி கேம்பஸ் குள் இருந்தது ..எங்கு நோக்கினும் ஹிந்தி மட்டுமே..எனக்கு சுத்தமாக ஹிந்தி வராது..

பேசுபவர்களிடம் மட்டும் கொஞ்சம் உளறி வைப்பேன் ஹிந்தியில்...

கவுண்டருக்கு போனேன் ஒரே கூட்டம் கட கடவென வேலை ஓடிக்கொண்டிருக்க
எதோ ஒன்று நம்மை பார்ப்பது போல உணர்வு..
திரும்பி பார்க்க, கலா மேடம் ..என் அருகினில் வந்து அமர்ந்தார்கள் ..
துளசி துளசி என கூப்பிட ,ம்.... கொட்டிவிட்டு வேலையை தொடர்ந்தேன்..
அப்பாடா . கொஞ்சம் காலியானது..கவுன்ட்டர்...
நிமிர்ந்து வெளியே பார்க்க எனை பார்த்து பின் தலை குனிவதுமாக கடிதம் எழுதி கொண்டிருந்தான் அவன்......

மேடம் சொல்லுங்க என சொல்லி திரும்ப, சூப்பர் ஆ இருக்கு உன்னோட blouse எங்க தைக்கிறாய்..என்னோட மகளுக்கு தைக்கனும்னு சொல்ல, சரிங்க மேடம் நீங்க கொண்டு வந்து தாங்க நான் தைத்து வாங்கி தரேன்னு சொல்லி நிமிர,

கடிதம் எழுதாமல் என்னையே பார்த்து கொண்டிருந்தான் ..என்ன வேண்டும் என கேட்க மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டான்.. நான் அவனையே கவனிக்க சட்டென்று எழும்பி வந்து விட்டான் என் அருகில், என்ன கேட்பது வென்று தெரியாமல் பார்க்க ,

ஸ்டாம்ப் வேணும் என கேட்க்க ,அந்த கவுன்டருக்கு போங்க என, மேடம் உடனே சொல்லிட்டாங்க...
என்ன துளசி என்னவாம் அவனுக்கு ரொம்ப நேரம் இங்கு இருக்கிறான் என என்னிடம் கேட்க அமைதியாய் நான் ..தெரியவில்லை என தலையாட்டினேன நினைவுகளில் அவன் வேலை செய்ய ,நிமிர்ந்து பார்க்க காணவில்லை அவனை ....

மேடம் நாளை எனக்கு மோர்னிங் ஷிப்ட் .நீங்க அடுத்த வாரம் எடுத்து வந்து கொடுங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். எனக்காக சுந்தரி வாசலில் காத்திருந்தாள்..அழகோவியமாய் அவள்...
என்னுடன்..அவளுக்கு நான் என்றால் மிக இஷ்டம் ...

ரயில் பிடிக்க விரைவாக நடந்து கொண்டிருந்தோம்

..மீண்டும் அந்த சத்தம் அந்த புல்லெட் காரன் ..அவளிடம் அவனை பற்றி பேசி கொண்டே ,கண்கள் அலை பாய ..ரயில் நிலையத்தை அடைந்தேன்..
ஒரு ரயில் மிஸ் செய்து விட்டு பேசிகொண்டிருந்தோம் " அம்மா வேர்கடலை" என அந்த பெரியவர் கேட்க..இருவரும் வாங்கி கொண்டு செங்கல் பட்டு ரயிலுக்காக காத்திருந்தோம்..அப்போதும் எனை தூண்டிய உணர்வு திரும்பி பார்க்க சொல்ல, யாருமில்லை ..மீண்டும் வேர்கடலையுடன் நாங்கள்..

ரயில் வந்து கிளம்ப ரயில் நிலையம் தாண்டும் முன்
அந்த பெயர் போர்டில் சாய்ந்த வண்ணம் இருப்பது யார் என்று யோசிக்க சட்டென நினைவுக்கு வந்தான் கடிதம் எழுதியவன் , சுந்தரி அவன்தான் அங்கே பாரு நல்ல எட்டி பாருடி நான் சொன்னனே என கூற நிலையம் முழுதுமாய் மறைந்தது....அவள் பார்க்கவில்லை,என் கண்கள் முழுதும் அவன் ..

காலை 6.30 ரயில் பிடித்து நான் வந்து நிலையத்தில் இறங்க.. யாருமில்லாதது போன்ற உணர்வு...நடையை துரிதமாக்கி அலுவலகத்தில் நுழைந்தேன் ....அந்த புல்லெட் காரன் கவுன்ட்டருக்கே வந்து விட்டான்...எப்படியோ அவன் கொண்டுவந்த வேலையை முடித்து கொடுத்தேன்..

நினைவு ஓடி கொண்டிருக்க மீண்டும் சிகப்பு ரோஜாவும் கடிதமுமாய் எத்திராஜுலு சார், என்னருகில் ..இது யாருன்னு கண்டு பிடித்து ஒரு பதில் சொல்லிவிடும்மா என கூற

பார்வையால் என்ன அங்கிள் நீங்களே இப்படி சொல்லறீங்க.. நேரம் நெருங்க அடுத்த ஷிப்டுக்கு வந்து விட்டார்கள், நான் கிளம்ப ,இன்று தனியாக ரயில் நிலையம் போகணுமேன்னு நினைத்துகொண்டே கிளம்பினேன் ..வாசல் வரை வரும்போதே உள்ளிருந்து துளசி உனக்கு போன்,
வாம்மா என்ற கலா மேடமின் குரல்..

யார்.............யாராக இருக்கும்..யாருக்கும் இந்த நம்பர் தெரியாதேன்னு கேட்டுகொண்டே எடுத்தேன் தொலைபேசியை ..

சில நிமிட மௌனங்கள் யார்..யார் என நான் கேட்க.ப்ளீஸ் வெச்சிடாதீங்க நான் சொல்றதை கேளுங்க..இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போகிறேன்.இனி உங்களை பார்க்க முடியாது.என்னுடைய அட்ரஸ் உங்களுக்கு தருகிறேன் உங்களுக்கு சரியென்று பட்டால் கடிதம் எழுதவும்..
நான் சரியாகத்தான் தேர்ந்தேடுத்திருகிறேன் என்று சொல்லிவிட்டு ,ஹெலோ நீங்க யாரு என கேட்பதற்குள்தொலைபேசி அணைக்கப்பட்டது ...

யோசித்து கொண்டே எழுந்தேன் ரயில்நிலையம் வரை தனியாக செல்லணுமே ..யோசித்து கொண்டே நடக்க மீண்டும் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் என் அருகினில் வந்து வண்டியை நிறுத்தினான் ....சைகை செய்தான்..மேற்கொண்டு நடக்க முடியாமல் என்னவென்று தமிழில் கேட்க..அவன் சொல்வது புரிந்து புரியாமல் நடக்க ஆரம்பித்தேன்.....
ரயில் நிலையம் வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்..ரயில் வர ஏறாமல் அமர்ந்திருந்தேன் ..

வெள்ளை உடையில் எனை கடந்து சென்றவன் என் பார்வையை இழுக்க ஆரம்பிக்க மெல்லமாக திரும்பினால் அந்த கடிதம் எழுதியவன்..ஓ இவன் கப்பற்படையில் வேலை பார்பவனோ என நினைத்து கொண்டே அடுத்த ரயில் வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன் ,ஒரே படபடப்பு என்னிடம் .

ரயில் கிளம்பியது ,வேகமாக ஓடி வந்த அவனின் கையில் இருந்த ஒரு புத்தகத்தைசன்னல் வழியாக தந்துவிட்டு மறைந்தான் ..நான் திரும்பு நேரம் அவனை காணவில்லை..பக்கத்தில் இருப்பவர்கள் என்னை பார்ப்பது போன்ற உணர்வு.....இனம் புரியா படபடப்பு.

மெதுவாக எடுத்து பிரித்து பார்த்தேன் ..காதல் கவிதைகள் 12 மட்டுமே..அதற்கான காரணத்தை நேரில் காணும் போது சொல்கிறேன் என்று குறிப்பு வேறு.....

எனை பார்த்த தினத்திலிருந்து இன்று வரை அனைத்தும் குறிப்பிட்டு எழுதிருந்தான், அதன் கடைசியில் அலுவலக முகவரி...
அதை வைத்து அவனை கண்டு பிடிக்கணும் என சொல்லி கொண்டே திரும்ப கட்டிலிருந்து விழுந்தேன்..அம்மா என்னவென்று கேட்க ..இனம் புரியா சந்தோசம் எனக்கு....ஒன்றுமில்ல என சொல்லிவிட்டு கிளம்பினேன் அலுவலகத்திற்கு..

கடிதம் எழுதிகொண்டிருந்தேன் அவனுக்கு ....அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ..என்ன எழுத ஒண்ணும் புரியல.... ...

துளசி உனக்கு பார்சல் வந்திருக்குமா ...பிரிங்க அங்கிள்..
பாரும்மா இதிலையும் சிகப்பு ரோஜா,...என சொல்லி கடிதத்தை அங்கிள் பிரிக்க ...கடிதத்தை பிடுங்கிக்கொண்டு ,அந்த பழைய கடிதங்களையும் தாருங்கள் அங்கிள் என சொல்லி , என் சீட்டுக்கு சென்றேன்.
அங்கிள் ரோஜாவை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் ......
என் எண்ணங்கள் முழுதும் சிதறிய வண்ணங்களாய் ....இதுதான் காதலா ..............

1 comment:

  1. அருமை...
    ஆரம்பம்முதலே விருவிருப்பாய் கொண்டுசென்றுள்ளீர்கள்..வாழ்த்துக்களும் பாராடுக்களும்!

    ReplyDelete