Thursday, August 9, 2012

பிறந்த நாள்



ஸ்ரீ இங்க வாம்மா ....என அம்மா கூப்பிட ஸ்கூல்பேக் எடுத்துக்கொண்டு

ஓடினேன், என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவாக நடந்தாள்

அம்மா, இன்னும் நேரம் இருக்கு பள்ளி வாகனம் வர..

சுசி அக்காவும்,அத்தையும் வந்தாங்க,அத்தை அம்மாவுடன்

பேசி கொண்டே வந்தாங்க.சுசி அக்கா என் கையை பிடித்து

தன்னுடன் என்னை சேர்த்து நடந்தாள்....

சுசி அக்கா நீங்க நேற்று சொன்னது போல ஈவ்னிங் வீட்டுக்கு

வாங்க உங்க கை நிறைய சாக்லேட் கேக் எல்லாம் தரேன் ....

ம். வரேண்டா ....

எங்க பஸ் முன்னாடி வந்திடும் நான் உனக்காக வெய்ட் செய்கிறேன்...

உனக்கு என்ன வேணும்னு சொல்லு அக்கா வாங்கிகொண்டு வரேன்....


டா... டா டா ...


கல்லூரி பேருந்துக்குள் ஏறும் வரை என் கவனம் ஸ்ரீ மீது..எல்லாருக்கும்

சாக்லேட் கொடுத்து கொண்டிருந்தது பஸ் நிலையத்தில்..

இன்று கல்லூரியில் ஸ்ரீயை பற்றி தோழிகளிடம் அதிகம் பேசினேன்...

முதல் வகுப்பில் படிக்கும் அவளுக்கு,அழகான ஒரு பென்சில்

பாக்ஸும், குட்டி கரடி பொம்மையும் வாங்கினேன்... ஸ்ரீ கேட்ட

பெயின்டிங் செட்டும் வாங்கி கொண்டேன்....


அவளுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்..

மாமா பிள்ளைகளை அழைத்து கொண்டு பள்ளிவேனில்

சென்றார் புன்னகையுடன்...

ஸ்ரீ யின் பஸ் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்றது...

பின்னால் சத்தம் போட்டு கொண்டு

மக்கள் ஓடி வர...பஸ்சிலிருக்கும்

பிள்ளைகள் அழுது கொண்டே இறங்க .

டிரைவர் இறங்கி ஓட மக்கள் விரட்ட....

பரபரப்பு..அங்குமிங்கும் ஸ்ரீ யை தேட என் கண்கள்....

தார் சாலையில் தாராய் அவளின் ரத்தம் ஓட ...

சுருண்டு கிடந்தாள்...

முதல் சுவாசம் கிடைத்தநாளில் ...சுவாசமின்றி..
---------------------------------------------------------------------

No comments:

Post a Comment