Sunday, August 26, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......




பகுதி - 2

மெல்ல எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.

தாக்கங்கள் என்னை எதோ செய்தது..

பேசியதில்லை ,பார்த்திருக்கிறேன்..யாரோ எனும் நினைப்பில்அவனை,

ஆனால் இன்று அவன் நினைவு முழுதும் நிரம்பி...தளும்புகிறது .

அவனில்லை இங்கு ,நினைக்க நினைக்க அவன் கடிதம் எழுதும்போது பார்த்ததுதான்

நினைவுக்கு வருகிறது ..

அந்த முகமே மனதில்,நினைவில் வருகிறது..

இது காதலா ..யோசிக்க பயமும் கூடவே...கையை திருப்பி

மணி பார்க்க நேரம் ,நரகமாக ஓடி கொண்டிருந்தது .

இன்னும் அரை மணியில் சுந்தரி எனை பார்க்க வந்து விடுவாள் ..கிளம்பணும்

நானும்,கிளம்பணுமா என்ற எண்ணம் தலை தூக்க ..

ஒரு தட்டு நானே தட்டினேன் என் தலையில் ,வீட்டிற்கு

கிளம்ப யோசிக்கும் அளவுக்கு என் நிலை ...என்னையே

திட்டிக்கொண்டு உள்ள சென்றேன்..

என் கைபையை எடுத்து கொண்டு வெளியே வந்தேன் .

யாரிடமும் கிளம்புவதாக கூறவில்லை .தொலைபேசியை

பார்த்து கொண்டே கிளம்பினேன் .

வெளியில் வந்து பார்த்தேன் எப்போதும் போல அந்த மகிழம்பூ

மரத்தடியில் சுந்தரி ..அருகினில் அந்த இருசக்கரம் நின்று கொண்டிருந்தது.

அதன் மேல சாய்ந்து கொண்டு நான் வருவதையே பார்த்து கொண்டிருந்தான்

அவன்..அந்த மரத்தடிக்கு கூட போக வில்லை கொஞ்சம் தூரத்திலிருந்தே

நான் வருவதை பார்த்த சுந்தரி எழுந்து வந்து விட்டாள்...

வாடி என் செல்ல புன்னகையே என் கூப்பிட்டுகொண்டே என்

அருகினில்....சுந்தரி.

அதே புன்னகயுடன் நான் அவள் கைபிடித்து வேகமாக கிளம்பினேன்.

சுந்தரி கணக்கராக துணி கடையில் பணி செய்கிறாள்.

அவள் இன்று அலுவலகத்தில் நடந்த விசயங்களை சொல்லி கொண்டே

வந்தாள்..சுவரசியமாக கேட்டு கொண்டே வந்தேன்..அந்த இரு சக்கர வாகனம் எனை கடந்து

சென்றது..ரயில் பாதை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருதோம்..

அப்படியே திரும்பி பார்க்க அந்த அவன் வண்டியை நிறுத்தி விட்டு

எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் .

No comments:

Post a Comment