Thursday, March 8, 2012

வேகத்தடை .................



பிரண்ட்ஸ் எல்லோரும் பைக் வாங்கிட்டாங்க ,எனக்கும் பைக் வாங்கி தாங்கம்மா,

ம்ம்ம் ....கொஞ்சம் அழுது அடம் பிடித்து புதிய model ...பைக் வாங்கினேன்...

சின்ன பூஜை வீட்டில்..வண்டிக்குத்தான், எடுத்துகொண்டு சிட்டாய் பறந்தேன்...

அப்பப்பா...சைக்கிளில் போவதை விட இந்த சந்தோசம்..........

காற்றை கிழித்து கொண்டு போகும் சுகம் ,தனி சுகம்டா..


ஒரு வேலை அம்மா வேண்டாம்னு சொல்லியிருந்தால் அப்பா வாங்கி தந்திருக்க மாட்டார்....

அம்மாக்கு சின்ன பரிசு வாங்கணும் ,யோசித்துகொண்டே.."pizza corner " வந்தேன் ...

நண்பர்களின் கூட்டம்.....வா...... மச்சி, வாடா..... மாப்பிள்ளை ....வாடா கிரண் ...

"pizza corner " ரில் இருக்கும் அனைவரும் திரும்பி பார்க்க பசங்க சத்தமா கூப்பிட்டாங்க

,"ஸ்டைல்" ஆக வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு வந்தேன் ...

டபுள் cheese ...pizza ..... ஆர்டர் செய்து வெயிட் செய்துகொண்டிருந்தோம் ...

என்னதான் அப்பா அம்மா கூட வந்தாலும் இப்படி நண்பர்கள் கூட வருவதே தனி சுகம் ...

கிரண் மச்சி, என்ன யோசனை....எப்போ ஆரம்பிக்கலாம் என்றான் வினு ,மெசேஜ் செய்து கொண்டே ....

செமஸ்டர் லீவ் ல , செய்யலம்மா னு கேட்டான் வினு .... ..நாம எடுக்கபோற படத்தை பத்தி எங்க அப்பாகிட்ட பேசணும்வினு ....

... அவர் ஓகே சொன்ன பிறகு இதை ஆரம்பிக்கணும்.....

2 மணி நேரம் போனதே தெரியவில்லை ...

அப்போதும் போன் பேசிகொண்டே இருந்தான் வினு ... ...டேய் மச்சி போதும்டா..,எல்லோரும் ஒன்றாய் கூற ...

சிரித்துகொண்டே நான் .. பேசிக்கொண்டே மற்ற நண்பர்களும் கிளம்பினோம் ....

. வினு .. போன் பேசிக்கொண்டே கை ஆட்டி வேகமாய் பைக் ஸ்டார்ட் செய்தான் ...


நல்லா இப்படியும் அப்படியுமாக திரும்பி திரும்பி படுத்துகொண்டிருந்தேன்,இன்னும் அப்பா வரவில்லை..

காலிங் பெல் அடிக்கும் சத்தம் ....திரும்பினால் அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் ...

,படியிறங்கி வந்து, ஹால் லைட் போட்டு கதவு திறக்க...கிரில் கேட்டின் மறுபுறம் கிரண் கதவு திறடா, என்ற வினு வின் குரல் .....


வினு வீட்டுக்கு போகலியா ,கேட்டபடி கதவு திறந்தேன் ...வெளியே சில்லுனு காற்று ...மழை வருபோல இருந்தது ...

அவளை பாக்க போனேன் ,பாக்க முடியல... ரொம்ப நேரம் ஆயாச்சு ...இந்த நேரத்தில போனா எங்க அம்மா திட்டுவாங்கடா ..

..ப்ளீஸ் கிரண் உன் கூட ,உங்க வீட்ல இருந்தேன்னு சொல்லிடுடா எங்க அம்மா கேட்டா.....

சரி சரி உள்ள வா , அவனுக்கு படுக்க என் STUDY ரூம் ARRANGE செய்து கொடுத்தேன்

உங்க அம்மாக்கு தெரிய வேண்டாம் கிரண் .....என்றான் வினு ..

இன்னும் அப்பா வரல டா .காலிங் பெல் அடிச்ச நீ கதவு திறக்காதே .."ஓகே " சொன்னான் வினு .

வேறு உடை எடுத்து கொடுத்து விட்டு , அம்மா பக்கத்தில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தேன்

நேரம் ஆகுதுடா கிரண் ..7 மணிக்கு போகணும்னு சொன்னியே , அம்மா கீழிருந்து சத்தம் போட ,துள்ளி எழுந்தேன்

பக்கத்தில வினு நின்றுகொண்டிருந்தேன் ..டேய் எப்போ மாடிக்கு வந்த , அம்மா உன்னை பாத்தாங்களா..

இல்ல கிரண் மச்சி , அம்மா என்னை பார்க்கவில்லை ,நீ சீக்கிரம் கிளம்புடா னு சொல்லி அமர்ந்தான் சோபாவில் வினு...
.
நான் எழுதிய "வேகத்தடை " கதை யை படித்து கொண்டிருந்தான் .....

ஆனந்தமான குளியல் , எனக்கு பிடித்த ஷர்ட் எடுத்து வைத்து விட்டு போய் இருந்தாங்க அம்மா ...

கிளம்பறேன்மானு சொல்ல,இரு இரு பூஸ்ட் எடுத்து கொண்டு வரேன் கிரண் சாப்பிட்டு போடான்னு சொன்னாங்க அம்மா ....

... வினு வந்திருக்கான் ,அவனுக்கும் எனக்கும் பூஸ்ட் தாங்கம்மா ....

வினு வோ ஏதும் வேண்டாம் , சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்லியபடியே பாத் ரூம் குள் நுழைந்தான்

பூஸ்ட் எடுத்து கொண்டுவந்தாங்க அம்மா. .எங்கடா வினு ?

அம்மா கேட்க ..பாத் ரூம் ல இருக்கிறான் அம்மா என்றேன் ..

என்ன ...........என்றுமில்லமால் இன்று இப்படி காற்று .............வீசுகிறதே .........

தனக்குள் பேசிகொண்டே போனாங்க அம்மா ....

வினு அம்மா உன் கிட்ட பேசணும்னு வந்தாங்கடா ....

பதில் ஏதும் கூறாமல் PERFUME எடுத்து அடித்து கொண்டிருந்தான் .. போதும்டா மச்சான் ,.....

கொஞ்சமாவது அதில் இருக்கட்டுமே எனக்கு என்றேன் சிரித்து கொண்டே.....

ஏன்டா வினு ...அவளை பார்க்க போன இப்படிதான் போவியா ...

சிரித்தான் வினு ...காற்று மிக பலமாக வீசியது ...வண்டியை வீட்டு உள்ளிருந்து எடுத்தேன் .. .

கிரண் எனக்கு எழுந்ததிலிருந்து தலை வலிக்குதுடா ,அந்த நாயர் கடையில ஒரு டீ சாப்பிட்டு போவோம் என்றான் வினு ...........

,அம்மா பூஸ்ட் கொடுத்தாங்க சாப்பிடமா வந்த ..இப்போ நாயர் கடைக்கு போகலாம்னு சொல்ற....

போன் அடிக்குது பார் எடுத்து பேசுடா வினு...

கிரண்,.அவளை பாக்காம வந்திட்டேன்னு அவளுக்கு கோவம்....அதான்

போன் பண்ணிடே இருக்காடா ..என்ன பதில் சொல்லன்னு தெரியலடா என்று வினு சொல்ல ...

இன்னும் சண்டை போடறாளா.. டா ..சிரித்தான் ..

இல்லடா கிரண் ,ரொம்ப பாசமா இருக்காடா .......

திடீர்னு கோவப்படறாடா..எங்கயும் பைக் எடுத்துக்கொண்டு போக கூடாதாம் .

அவளை மட்டும் தான் வண்டியில கூட்டிட்டு போகணுமாம் பிரண்ட்ஸ் கூட ஏறக்கூடாதாம் ,ரொம்ப ஆர்டர் போடறாடா, மச்சி

என்றான் வினு ..

சிரித்தேன் நான்.."காதலில் கண்டிப்பும் சுகமா தானே இருக்கும் ...சொல்லிட்டே ,

அம்மா, கிளம்பறேம்மா.. என்றேன் ..
.
..பத்திரமா போகணும் பா , அப்பா மொபைலுக்கு பேசு .. சொல்லி கொண்டே, அம்மாவின் குரல் எங்கள் அருகில் கேட்க

கிரண் சீக்கிரமா கிளம்பு உங்க அம்மா கேக்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது டா என்று வினு கூற

......சிரித்தேன் நான் ...

அம்மா வருவதற்குள் சீறியது என் வண்டி............மிக பலமாக காற்று வீசியது ....

தொடர்ந்து மொபைல் அடித்து கொண்டே இருந்தது ,

வினு போன் எடுத்து பேசுடா , என்றேன்

... அங்க போன பிறகு பேசலாம்னு சொன்னான் வினு ....

காற்றை கிழித்துகொண்டு வேகமாக செல்ல ஆரம்பித்தேன் ...

வழியில் சந்துரு அவனுடைய பைக்ல,அவனும் எங்களோடு .........

ஷ்யாம் வீடு வாசலில் பைக் நிறுத்தினேன் ..மொபைல் கையிலெடுத்தேன் விடாமல் அடித்தது..அம்மாதான் ..

அவன் எங்கடா என கேட்டான் சந்துரு ..யார் ? டா மச்சான் .. அதான் நம்ம காதல் மன்னன் வினு ...

என்னோடதானே வந்தான்னு சொல்ல ....என்னடா கிரண் நீ மட்டும் தானே வந்த ...என்னாச்சு உனக்கு சந்துரு கேக்க .....

கொஞ்சம் யோசனையுடன் . அம்மாவுக்கு போன் செய்தேன் ..லைன்

பிஸி யாகவே இருந்தது ........

ராமின் கால் உள்ளே வர அதை அட்டென்ட் செய்தேன்......நேத்து ..நைட் ACCIDENT டா கிரண் ..

வண்டில வேகமா போயிருக்கான் வினு , ஸ்பீட் பிரேக் கவனிக்காம போய் ,விழுந்து இருக்கான்டா .

தலையில பலமா அடிப்பட்டு ..........குரல் கமற,

நம்மளை எல்லாம் விட்டு போய்டாண்டா வினு ..

..சொல்லி அழ ஆரம்பித்தான் ராம் ..... .

உயிர் என்னுள உறைய

......... . வினு என்று கதறினேன்

1 comment:

  1. கதை நன்றாக இருக்கிறது! என் கதையை படித்திருக்கிறீர்களா தமிழ்ச்செல்வி!

    ReplyDelete