Saturday, March 3, 2012

அந்த நிமிடம் ...



அந்த நிமிடம் ...

"உள்ளாடும் கற்பனைகள் ஒரு கோடி" அனுபவித்து கொண்டிருந்தேன் , அந்த குரல் அல்லவா என்னை ஈர்த்தது ...அந்த நிலையில்

ரயில் பிளாட்பாரத்தில் இருக்கும் அனைவரும் என்னை பார்க்கும் உணர்வு ..அழகிய சிவப்பு வண்ணத்தில் சின்ன வேலைப்பாடுடன் கூடிய

சேலை எனக்கே என்னை பிடித்திருந்தது ..

ஒரு "பீச் கொடுங்க என கை நீட்டியபோதும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் , அவனின் பார்வை என்மீதே ..மீண்டும்" பீச் ஸ்டேஷன் "

கொடுங்கன்னு கேட்டவுடன் ரயில் அரை மணி நேரம் லேட் என்றான் ...அதே பார்வையில் ..டிக்கெட் கொடுங்க ..என் கவனம் முழுதும் டிக்கெட்

வாங்குவதிலேயே ....

ம்ம். முதலாய் நிகழ போகும் சந்திப்பு அசை போட்டபடி திரும்பினால் ..சில்லறை இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு போங்க அப்படின்னு

சொன்னான் அவன் ....இவன் நம்மை போக விட மாட்டான் போலிருக்கே...நினைக்க ரூபாய் கொடுத்துவிட்டு நகர்ந்தேன் ..கவுன்ட்டர்

குள்ளிருந்தும் அவன் பார்வை என்னை தீண்ட .ச்சே ..நினைத்துகொண்டே ..அவன் பார்வை மறையும் இருக்கையில் அமர்ந்தேன் ...

அம்மாவிடம் தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என பொய் சொல்லிய குற்ற உணர்வு ..ம்ம் அதை மீறியும் குளிர்ந்த உணர்வு எனக்கு..இந்த

சந்திப்பு ..எப்படி இருக்கும் ..நான் எப்படி பேச வேண்டும் ..கொஞ்சம் பயமும் வெக்கமும் வந்தது ,சில்லென்ற காற்றில் முகத்தில் பட

வெளியே கவனித்தேன் ,ரெயில் மெதுவாக நின்றது ..

அக்கா இன்னைக்கு ஏதும் வாங்கலையான்னு, கேட்டுட்டு அடுத்த இருக்கை நோக்கி சென்றாள், மேரி ..௦ நான் படிக்கும் பருவத்திலிருந்தே

தெரியும் அவளை ,சின்ன சின்ன பொருள்கள் ரயிலில் விற்பது அவள் தொழில், அவளுடைய அம்மா பழம் விற்பவள்...கூப்பிட்டவுடன்

என்னக்கா வேணும், "கீ - செயின் "இருக்காம்மானு என்று கேட்க, இருக்குக்கா ..இதோ வரேன் என்றாள்..

அழகியதொரு "கீ - செயின் ...ஒரு சிறு இதயவடிவமும் பெரிய இதய வடிவுமும் சேர்ந்தது போல .."வெள்ளை மெட்டலில்" வாங்கினேன்

...ஒண்ணும் புரியவில்லை , சிறு பதட்டமும் ,படபடப்பும் மட்டுமே ..ரெயில் கிளம்பி விட்டது மெதுவாக ...

குளிர்ச்சியான உணர்வு மெல்ல உடல் முழுதும் பரவ...பயந்தே போய் விட்டேன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி போய் விடலாமா என்று

.."போனில் பேசும்போது மட்டும் தைரியமாய் பேசி இருக்கும் நான் ,,,,நேர்ல சந்திக்க போறோம் அதனாலா இப்படியான்னு, என்னையே கேட்டு

கொண்டேன்...என்னுடைய மொபைல் பேசியில் வந்த தொடர்பை நான் எடுக்காமல் இருந்திருந்தால் இப்படியொரு நிலை..சே சே...ஒரு

வருடமாய் பேசிவிட்டு இப்போது ஏன் இப்படி ஒரு எண்ணம்....பயம்தான் ..

அதற்குள் பீச் ஸ்டேஷன் அடைந்தேன் ..இறங்கி என்ன செய்வது எப்படி கண்டுபிடிப்பது ..ஒண்ணும் புரியவில்லை அப்படியும் இப்படியும்

பார்த்து விட்டு ,அங்கிருக்கும் ஸ்டால்ல தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கையில் அமர்ந்தேன் ..


15 நிமிடம் யாரும் வரவில்லை ,போன் செய்தேன் ...மீண்டும் எப்போதும் பேசும்போது, பாடும் பாடலையே பாடினான் ...

கோவம் தானே உனக்கு உன்னை காக்க வைத்துவிட்டேன் என்று ...இப்போதும் உன்னை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் என்று...சொல்ல

சில்லென்ற ஒரு உணர்வு ...அங்கும் இங்கும் அலை பாய்ந்தது என் மனதை போல கண்களும் .."கண்களும் கவி பாடுதே " மீண்டும் பாடல்

...நான் அமைதியாய் இருக்க ....

"நானே உன்னை வந்து பார்த்து பேசுகிறேன்..உன்னை எனக்கு தெரியாது..ஆனால் எனக்கு உன்னை தெரியும்னு சொல்லி சிரித்து லைன் கட்

செய்தான் ..என்ன செய்ய அவனை ...கோவத்துடன் யோசிக்க ...
.
இரு ரெயில் கடந்து சென்றது அதன் பாதையில்...தவறான் பாதையை தேர்ந்தெடுத்து விட்டோமா ..னு, நினைக்க ,

மனம் அலை பாய்ந்தது ..தனியே அமர்ந்திருந்தேன் ,மதிய வேலை நெருங்க வயிற்றில் இனம் புரியாத பயம்...பார்க்கும் யாரும் இவனா

அவனா என நினைக்க.....

மீண்டும் counterku சென்று டிக்கெட் கேட்டேன் வீடு திரும்ப ...மனம் வலிக்க ஆரம்பித்தது .....

டிக்கெட் தரதில்லீங்க குரல் ....கேட்டது போன்ற உணர்வு ...நிமிர்ந்தேன் ..

எங்கள் ரயில் நிலையத்தில் பார்த்தவன் அல்லவா ......."கண்டேன் காதல் வரம்" என்று பாடியபடியே ..என் முன் அவன்...

எப்போதும் கோவத்துடன் அவனை பார்க்கும் நான் நிமிரவே இல்லை அந்த நிமிடம் ....

1 comment: