Thursday, March 29, 2012

காணி நிலம்







எல்லையில்லா கனவுகள்.
நினைத்து நினைத்து -நான்
ஏங்கிய காணி நிலம் -விழி
விரித்து பார்க்க பார்க்க
விண்ணை தொடும் ஏக்கங்கள் ..
ஏர் உழுது ...நீர் பாய்ச்சி...
சேற்றுக்குள் சுகமாக நடந்து ..
நாற்று நட்டு ---விடியல்தோறும் ..
காணி நிலம் என் கண்ணுக்குள்...
களை எடுக்க............
மருந்து தெளிக்க ...பயிர்
முகம் சிரித்து செழித்து வளர
நாளை அறுவடை .....
இங்கேயே உங்களுக்கு
மதிய உணவு என சொல்ல ....
என்னாலும் முடிந்ததே விவசாயம்
செய்ய ...
இனி செய்வேனா விவசாயம் ???
காணி நிலம் முழுதும் கவர்ன்மெண்டின்
ஆக்கிரமிப்பில் ....
எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏங்கிய
என் விழிகள் கனவுகளில்.............
மட்டுமே செயல்படும்..........

No comments:

Post a Comment