Wednesday, October 17, 2012

துயரம் ...




என் முகம் முழுதும்
ஓடும் சாலைகள்
நீ வருவாய் என
காத்திருக்கிறது ..

என் தலை முழுதும்
முடிகள்..ஆனாலும்
உன் சிந்தனைகளால்
நரைத்து போய்...

என் விரல்களில் நீ
அணிவித்த மோதிரம்
இளமையாய் ...
இருக்கமாய் இன்னும் ..

உனக்கு பிடித்த என்
மூக்குத்தி
எனக்குள்ளே
பொதிந்து போய்...

என் விழி முழுதும்
உன்னை தொலைத்த
துயரம்

2 comments: