Monday, October 1, 2012

வாழாவெட்டி................


உன் பார்வை உன் வாசம்
என்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது .
நான் நடக்கையிலும் என்னை சுற்றியே
என்னுடனே வீதிதோறும் வலம் வருகின்றது.

என்னை முழுமையாக
ஆக்கிரமித்து கொண்டிருகிறது .
நீ இல்லாத நேரங்களிலும் ..
என்னிடத்தில் மிக நெருக்கமாக அளவலாவுகின்றது .

நித்தம் நான் செய்யும்வேலைகள் அனைத்திலும்
என்னுடனே உலாவுகின்றது..
கோவத்திலும் சோகத்திலும் என் உள்ளே
சென்று என்னை அமைதியாக்குகிறது.

வாழாவெட்டியாக\" இருந்தாலும்
வாழ்ந்த காலங்களின் வாசம்-உன்
வாசம் மட்டுமே எனக்கு
புது தெம்பை தருகின்றது ..

உன் வாசம் என் வாழ்விருள்
போக்கி ஒளி தருகின்றது.
குத்தல் பேச்சுகள் நிறைந்த
இடங்களில் நீ என்னுடனே
என்னை அணைத்து உன் வாசத்திற்குள்
கூட்டி செல்கிறாய் ..

எப்போதுமே என்னருகினில் எனை சுற்றியே
நிறைந்திருப்பதால் ...உன்னை சுற்றியே
நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..
வாழும் நாட்களில் உன் வாசத்தில்
கரைகிறேன் ..

1 comment: