Friday, August 3, 2012

கைம்பெண்ணின் கனவுகள்




என் நினைவுகளின் நேரங்கள் ...
தன் வயம் கொண்டகனவுகள்
குழலின் நாதம்போல நீண்டுசெல்லும்நேரங்கள்....
இனம்புரியாமல் காணுகின்ற கனவுகள்
விழிக்கையில் இனம் புரியா படப்படப்பு
உயிர் துடிக்க உடலெங்கும் தகிக்க ..

விழிகளின் வேலிகளுக்குள் நீ எனை
மீண்டும் அழைக்க.உன்னுடனான அந்த
கனவு கோட்டைக்குள்....அளவில்லா
ஆனந்தங்கள் ,கரிய இருளுக்குள்...
வெளிச்சத்தை கொண்டு வரும் ..
நினைவுக்கனவுகள்

பலவண்ணங்களாய் சிதற தினம் தினம்
கனவுக்குளியல் சிறகடித்து பறக்க...
வெடவெடத்து உயிர் நடுங்க ...
தனிமை கனவுகள் உடலை சருகாக்கும்
தீயிலிட்டு பொசுக்கும் தருணம்

சாரலாய் தூறலாய் நீ என் மேல் விழ...
நிலையில்லா கனவுகளின் மேலிருந்து
விழுந்து ,வேதனைகளை...மறைத்து ,
சன்னல் கம்பி பிடித்து எழுந்தேன்
கோடி சாரலாய் கொட்டிய மழையுடன்
இணைந்தேன் நீ என்று..................

1 comment: