Tuesday, July 17, 2012

எப்போதும் என் நினைவில் நீ ....


விடியலின் பொழுதுகளில் உன்
ஞாபகம் எப்போதும் ...
இரவின் துவக்கத்தில் -உன்
மடி சாய்ந்த ஞாபகம் .....

நீ உறங்குகையிலும் உன்
முகம் எனை எதிர்பார்த்து ....
வந்துவிட்டேன் உன்னருகில் -இனி
எப்போதும் உன்னை விட்டு செல்ல
மனம் விரும்பவில்லை ....

ஆழ்ந்து உறங்குகிறாய் ..உன்
உறக்கத்தில் தான் எத்துணை
சந்தோசம் அம்மா ...என் அருகாமை
இன்றி எத்தனை வேளைகள்
எத்தனை பொழுதுகள் -நீ
காத்து கொண்டிருக்கிறாய் ..எனக்காக ..

உன் உறக்கத்திலும் உன்
விரல்கள் என்னை வருடுகின்றன..
தேடுகின்றன என் மோதிரத்தை ...
அப்பாவினோடது நினைவாக ..
என் விரல்களில் ....

எத்தனை காய்ப்பும், கரடு
முரடுகளும் உன் கைகளுக்குள்..
எத்துணையும் இன்றி ....
உன் கைகளுக்குள் நான்
இத்துணை வயதிலும் .....

வார்த்தைகள் எப்போதும்
மென்மையானது உனக்கு-
அந்த மென்மை உன்னை
மேன்மை ஆக்குகிறது அம்மா
எப்போதும் எனக்குள் ...

ஓராயிரம் ஆண்டுகள்....
ஆனாலும் உன் அன்பிற்கும் ,
அரவணைப்புக்கும் இணை....
உன் அன்பு மட்டுமே ...அம்மா

எத்துணையின்றி இத்தனை
காலம் அம்மா நீ -
என் துணையுடன் இனி வரும்
காலமெல்லாம் நீ என்னுடனே அம்மா

1 comment:

  1. வார்த்தைகள் எப்போதும்
    மென்மையானது உனக்கு-
    அந்த மென்மை உன்னை
    மேன்மை ஆக்குகிறது அம்மா
    எப்போதும் எனக்குள் ...
    .......................
    மென்மையானவள் என்பதால்தான் எப்போதும் மேன்மையானாள் அம்மா அருமை

    ReplyDelete