Monday, January 23, 2012

"எங்களுக்கும் காலம் வரும்"

அம்மா அம்மா ..எத்தனை முறை அழைத்தாலும் ம்ஹும் ..கதவு திறக்கவேயில்லை
,அம்மாவிடம் கேட்டேன் ஏனம்மா நம்ம கதவு மட்டும் திறக்க மாட்றாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு மா..

.சத்தமா கூப்பிட்டாலும் வந்து மிரட்டிட்டு போறாங்க ..
ஆனா அவங்க மட்டும் அவங்க பிள்ளைங்க கூட வெளியே போறாங்க கார்ல..

அழுகை அழுகையா வருதுமா,,,அம்மா அம்மா பதில் சொல்லுமா .. ம்ஹும் சத்தமே இல்லை வெறும் பார்வையால் வேதனையை வெளிபடுத்தினாள் அம்மா ..

எங்களுக்கு எல்லாமே இந்த அறைதான் ,சாப்பாடும் தருவாங்க தண்ணியும் தருவாங்க ..
அப்போ மட்டும் அறைக் கதவை திறப்பாங்க ம்ம் நல்ல வாசனையா சுப்பர் சுப்பரா இருக்கும் ...

அவங்களுக்கு நல்ல மூட் இருந்தால் எங்களையும் வெளியே அழைச்சிட்டு போவாங்க,
ரொம்ப ஜாலியா இருக்கும்அவங்க கூடவே தான் இருப்பாங்க...

ஆனாலும் அம்மாகிட்ட தனியே பேசிடுவேன் அம்மா இப்போ அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட தருவாங்க..

ம்ம்.அப்போதான் வெளிச்சத்தையே பார்ப்போம் .. கொஞ்சம் நேரம்தான்...
எங்களை வெளியே கூட்டிட்டு வந்தவங்களுக்கு அம்மா இருக்காங்க,

அவங்க வயசானவங்க அவங்க வந்து ஏன் இவ்வளவு நேரம் "அப்படின்னு சொன்னதுதான் தாமதம் ,
மீண்டும் நாங்கள் எங்கள் அறையில்...........கொஞ்சம் கழித்து அம்மா கிட்ட கேட்டேனா ,
அம்மா சொல்றாங்க ..

என்ன எங்க அம்மா நல்ல பாத்துக்க மாட்டங்கன்னு அந்த அம்மா சொல்றாங்கன்னு சொன்னங்க ,
நான் ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன் ,
அம்மா விடுங்கடாசெல்லம் ,நமக்கும் காலம் வரும் அப்படின்னு சொன்னங்க ....

திடீர்னு அம்மா பயங்கரமா சத்தம் போட்டாங்க ..

அறை வாசலில் பூனை ..நாங்களெல்லாம் அம்மாவின் இறகுகளுக்குள் .....

4 comments:

  1. " தாயின் அரவ​ணைப்பு" க​தை அரு​​மையாக இருக்கிறது தமிழ்.

    ReplyDelete
  2. அருமைடா தமிழ்.. உனக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் . பெற்றுக் கொள்ளவும்.:)

    ReplyDelete