Friday, January 13, 2012

நீர்த்துளி



மனதில் உள்ளவைகளை புரிந்து கொள்ள வந்தாய்
சொல்லியும் சொல்லாமலும் புரியவில்லை
விழி பார்த்து இதயம் உணர்ந்து அறியும் உறவு..........
நினைவுகளின் பயணம் வெகுதூரம் .........
இமைகள் பொருந்திய தடத்தில்.....
எங்கெங்கோ செல்ல
காற்று, மழை ,வெப்பம், நீ நான் என செல்ல ..
பிரிந்த இமை தடத்திலும் நினைவுகள் ...
இமை கதவை அடித்து மூட ...
மீண்டும் இணைந்த தடத்தில் ..
இணையா தண்டவாளமாய் ,
துக்கத்திலும் ஆறுதல்,மகிழ்விலும் பகிர்வு ,
பாசத்திலும் மிஞ்சாமல் பரிவுடன்...
அலையும் விரல்அளந்து.. இமை தடத்தில்
நேர்கோடாய் அருகில்...
எண்ணங்களால் அடித்து செல்ல நிழலாய் ..
விழியோரம் கசியும் துளி நீர் வெள்ளமாய் பெருக..
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இமை தடம் ..
மூழ்கி பாதை பிரிய ..விக்கித்து நிற்க விழி...
இறுகிய இதயம் செயலிழந்து ...
பார்த்து உணர்ந்த உறவு பரிதவித்து போக...
புரியும் நிலையில் புரிந்து கொள்ள முடியாமல் ..
விக்கித்து நிற்கும் விழி பார்த்து ஒரே தடத்தில்
விழித்து நிற்க ...நீர்த்துளி தானே வழிந்து
தன் பாதை தேடி ..........

2 comments:

  1. //.நீர்த்துளி தானே வழிந்து
    தன் பாதை தேடி .........//

    ஆழமான கவிதை. அருமையான இறுதி வரி!

    ReplyDelete