Saturday, April 13, 2013

உன் முப்பொழுதுகளிலும் காதல் மட்டுமே!!!!!

என் முப்பொழுதுகளும்

உன்னுடையதெனின்,
உனை நினைக்கும்
பொழுதுகளே
என்னிடம் இல்லை”
*******************************************
”சின்ன சங்கிலியில்
உயிரெழுத்தாய் -என்
முதலெழுத்தை
இணைத்து கொண்டாய்”
***********************************************
உனை காணாமல்
தவித்த என் விழிகளும்
இதழுடன் சேர்ந்து
புன்னகைத்தது ,
நீ வருகிறாய் என் பொழுதுகள் முழுதும்
*********************************************
என் மனதில் உறைந்த
உன் நினைவுகள்
உருகி தான் போயின
சலனத்தில் ”
”உறைந்து போன
உன் நினைவுகளால்
மரத்துதான் போன மனம் என் பொழுதுகள் முழுதும்
**********************************************
ஒளி கீற்றுகளுக்குள்
சிக்கிய இருளாய்
உன் புன்னகை
எனக்குள் பொதிந்து
கிடக்கிறது, உனை
காணும் வரை”
உனை எதிர்பார்த்து
காத்திருப்பதுமில்லை
நீயே நானான பொழுதுகளில்”
**************************************************

”காதலில் வீழ்ந்தது முதலில்

நான்தான், என்று பொய்யாய்
சொல்லி, ரசிக்கிறாய் என்னை உன் முப்பொழுதுகளிலும் ”

3 comments:

  1. கவிதையை படித்ததும் காதல் கொண்டேன் எழுத்துக்களின் கோர்வைகளை ..சூப்பர் ..

    ReplyDelete
  2. தமிழ் வார்த்தைகளை கையாளும் தங்களுக்கு தமிழன்னையின் ஆசி நிறைய உண்டு. எழுத்துக்களின் சாரம்...வீச்சு...நன்றாக உள்ளது. படைப்பாளி என்ற கர்வம் இன்றி எழுத்துக்கள்...வாழ்த்துக்கள்...உங்கள் எழுத்து ஈர்ப்பில்...


    **சூர்யா**

    ReplyDelete