Friday, March 22, 2013

தம்பி.....................



உனை காண வரும்
பொழுதில், உன்
உயிர் துடித்து
விடை பெறும்
தருணம்
உனை பெயர்
சொல்லி அழைத்தேனே
தெரிந்ததா உனக்கு?என்னை

எனை பார்த்தாயா?
எப்படி வந்தேன்!
என நினைத்தாயா?
என் கண்ணீர் கண்டாயா?

உன் விழியோர கண்ணீர்
வழிந்தோடி உன்
அன்பு கூற..உன் மூச்சு
மேலும் கீழுமாய்
எனை வா, என்று
சொல்வது போல்,
அய்யோ!!! என அலரும்
குரல். அந்த தருணம்

உன் முகம் நான்
பார்க்க, எங்கேயடா
போனாய்!
எப்படியடா போனாய் !
எங்களை விட்டு
உன் உயிர் காற்று
காண்கையிலேயே
காணாமல் போனது
எப்படி!!!!

எங்கு எப்போது
காண்பேன்
உனை இனி.
வாழ்வு உனக்கு
ஏனடா ? முடிந்தது?
போதுமா டா?
இவ்வுலக வாழ்வு...

No comments:

Post a Comment