Friday, June 15, 2012

வண்ணங்களின் ஆளுமைகள்





வண்ணங்களில் ஒளிந்து கிடக்கிறது....
அடர்ந்த ஒன்று கோரமேன்றும்...
மற்றொன்று அழகென்றும்...
மாந்துளிர்களை கொண்டது போதுமென்றும்...
வண்ணங்களின் எண்ணங்கள் ...

ஒளிந்துதான் உள்ளது எல்லோரிடத்திலும் ...
அதை கொண்டுதான் வாழ்கை நடக்கிறது .......................
நான் அவைகளை கண்டுகொள்ள போவதில்லை .......

உண்மையும்,பொய்யும் தொடர்கின்றன -என்னை....
இனங்களிலும் ,மதங்களிலும் ஆளுகின்றன அவை ....
என்னையும் அவை தனக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கின்றன..

காலங் காலமாய் வண்ணங்கள் பிரித்தாளுகின்றன....
தொட்டு வாங்குவது,தொடமால் போடுவது...
தொடாத நீர் நிலைகள், வணங்காத கோயில்கள் ..
நான் ஒதுக்க முயற்சி மேற்கொள்கிறேன்...

இதை மாற்ற முயற்சிகொண்டு ...........
மற்றதை ...........தொடர நினைக்கிறேன் ,

வண்ணங்களில் சிக்கி கொள்கிறேன்.......

//எண்ணங்களுக்கேற்றபடி வண்ணங்களும் மாறும் அம்மா//.

4 comments:

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. காலங் காலமாய் வண்ணங்கள் பிரித்தாளுகின்றன....
    தொட்டு வாங்குவது,தொடமால் போடுவது...
    தொடாத நீர் நிலைகள், வணங்காத கோயில்கள் ..
    நான் ஒதுக்க முயற்சி மேற்கொள்கிறேன்...----------
    -------------------------------------------------
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
    ----------------------------------------------
    நந்தினி மருதம், நியூயார்க், 2012-07-11

    ReplyDelete
  3. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
    ----------------------------------------------

    ReplyDelete