Friday, May 25, 2012

ஒத்தையாய் பெற்றதால் ...


ஒத்தையாய் பெற்றதால் ....................

தாயும் உண்டு...அருகே
தந்தையில்லை ....
கணவன் உண்டு - அருகே
கடல் தாண்டி வேலை கொண்டு ...
சகோதரிகள் உண்டு -அருகே
மாலை மாற்றி, வேறு வீடு
சென்றதால் பிரச்சனைகள் -கொண்டு
சகோதரன் உண்டு- அருகே
மனைவியின் வீட்டில் சத்தமில்லாமல் ...

ஆறுதல் கூற ஆளில்லாமல் -அருகே
தலை சாய தோளில்லாமல்-என்
சிரம் தாழ்ந்து எதையோ நோக்கி -என்
நினைவுகள் உனை நோக்கி படையெடுக்க-என்

தாயும் தந்தையுமானவளே-உன்
கல்லூரி சுற்று பயணம் -முடித்து
சீக்கிரம் இந்த தாய் -அருகே
வந்துவிடு என் கண்மணியே....

No comments:

Post a Comment