Wednesday, December 5, 2012

காதலிக்கப்பட்டவன்



காதலிக்கப்பட்டவன்


காதலிக்கப்பட்டவன்

இதயத்தில் நான் மட்டுமே ...

எதோ புரிதலில் என்று

நினைக்கும்முன்,

உன் உயிர் என்றாய்..

ஏதும் சொல்ல நினைக்கும்

முன், என் வார்த்தைகளை,

உன் நினைவினாலே

நிறுத்தினாய், உண்மை..

இது என்று...விழிகளில்

பேசிய நேரம் போக,

கைபேசியும் போதவில்லை

என் வாழ்வு முழுதும்

போதாது உன்னுடன் பேச,

என்று சொன்ன நீ, பேசாமல்

உன் வாழ்வினில் இருகின்றாய் ..

உன்னுடனான என் புரிதல்,

எனக்கு புரியும் முன்

என்னுடனான உன் வாழ்வு

இன்று உன் வாழ்வாகி போனது .

விலக்கப்பட்டதால்

விலகித்தான்

போனேன் ....

விளங்காமல் தான்

நிற்கிறேன்

உன் நினைவுகளால்

நிரம்பிய என் வாழ்வில் ...

1 comment: