
அதிகபடியான அன்பு உன்னை அழிக்கும்
அன்பு செலுத்தும் போதும் அது கிடைக்கும்போதும் சந்தோசப்படும் நாம் .
அந்த அன்பு அதிகபடியான அன்பாக மாறும் பொது...வெறுப்புக்கு மட்டுமே உள்ளகிறோம்..எதுவுமே அளவுக்குள் இருக்கணும்..அப்படிதானே..எல்லையை தாண்டும்போது.. எதுவும் நம்மை விட்டு சென்று விடுகிறது..அன்பு ஒரு பக்கம் இன்றி இரு பக்கத்திலும் இருக்கணும்..அது தாய் அன்பாக இருந்தாலும் தந்தை அன்பாக இருந்தாலும்...கணவன் மற்றும் பிள்ளைகள் அன்பாக இருந்தாலும்..
அதிகபடியான அன்பு..நம்மை விலகியே இருக்கவைக்கிறது..
பிறந்ததிலிருந்து கிடைக்கும் தாயன்பும் இன்னொரு பிள்ளை பிறந்த பின் மாறுகிறது.
கூட பிறந்தவர்களின் அன்பும் ஒரு கால கட்டத்தில் நம்மை விட்டு மாறுகிறது..
பழகும் நட்புகளின் உண்மையான அன்பு..சில சமயங்களில் எல்லை தாண்டுகிறது...
அன்பு மாறாமல் என்று..நிலைக்கும் .எப்போது...???
இது கேள்வி குறியாகவே உள்ளது..
இன்றிய கால கட்டத்தில் ..
கணவன் மனைவி அன்பும்..மாறுகிறது..நம்பிக்கை இழக்கும்போது ...சந்தேகம் ஆட்கொள்ளும்போதும்..
அன்றைய வாழ்கை நிலையில் பெண் சந்தேகப்பட்டாலும்..அது பெரிதாக எடுக்காமல் ஆண்கள் செய்வதே சரி என்று இருந்தது..
அனால் அப்போதாவது குடும்பம் வாழ்க்கை என்பது சரியான பாதையில் சென்றது ..
ஆனால் இன்றைய நிலைபாட்டில்..நம்பிக்கை அற்ற தன்மையாலும்.அதீத அன்பினாலும்..அனைத்தையும் இழக்கிறோம்.
பெண் என்று எடுத்துகொண்டால் அவள் வேலைக்கு சென்றாலும் அல்லது படித்தாலும்..எங்கு சென்றாலும் அவள் யாரிடம் பேசினாலும் அவளை தவறாகவே எடுத்துகொள்ளும் மனோபாவம் அதிகபடியான அன்பு செலுத்தும் கணவனுக்கு வந்து விடுகிறது .அதை புரிந்து கொள்ளும் பெண்ணின் வாழ்க்கை நிலை இந்த சமுகத்தில் சரியாக அமைகிறது..அனால் அவளுடைய நிலை கணவனை விட அந்தஸ்துள்ளதாக மாறிவிட்டால்..அவள் இந்த வாழ்க்கையே வேண்டாம் இந்த அன்பே வேண்டாம் என்று தன நிலை மாறிகொள்கிறாள்..அப்படி அவள் மாறும்போது..அவன் நிலையிலிருந்து மாறி கொலை காரனகிறான்...அல்லது..ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்ற அவப்பெயருடன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான்..
தயவு செய்து அதிகபடியான அன்பை மாற்றிகொள்ளுங்கள் இது சந்தோசமாக வாழ வைக்கும்..விட்டு கொடுத்து வாழுங்கள்.இது உங்களை இன்னும் அதிகமாக சந்தோசப்படுத்தும் .நிலையான அன்பு..நம்பிக்கையான அன்பும் வேருன்றி வாழும் காலங்கள் கடந்தும் .............................