வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Wednesday, September 19, 2012
உயிரின் தோன்றல்
“நானே பயப்படலை..நீங்க ஏன் அதிகம் பயப்படறீங்க” ன்னு அவருக்கு
நான் தைரியம்சொல்லி வாசல்வரை போய் வழியனுப்பிவிட்டு....
வந்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டுத்தூங்க தாயரானபோது..
“ஏன் மா மாப்பிள்ளை அதிகம் பயப்படுகிறாரா….? ன்னு கேட்ட
அம்மாவிற்கு.............
சிரிப்பினூடே “ம்” என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்தபோது அருகில்
உட்கார்ந்து மெல்ல என் வயிற்றை தடவி ,“நாள் கடந்துடுச்சேடா ….
இன்னும் உனக்கான நாள் வரலையேப்பா ” என்று அம்மா சொன்னபோது,
முதல்முறையாய் எனக்குள் பயம் வந்தது….
காட்டிக்கொள்ளக் கூடாது என்று மறுபக்கம் திரும்பி படுத்தபோது
சன்னமாக வலித்தது..என் பயம்போலவே அதுவும் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்தது .முகத்தை திருப்பி கட்டிலின் அருகே கீழே
தூங்கத் தயாரான அம்மாவிடம்…. “ம்மா வலிக்குதும்மா” எனச்
சொல்வதற்குள் இன்னும் அதிகமாக “வலிக்குதுமா ....
ரொம்ப வலிக்குதும்மா ..” என சன்னமாகக் கூற
“பொறுத்துக்கம்மா..பொய்வலியாய் இருக்கும்.. காலையில
டாக்டர்கிட்ட போகும்போது சொல்லலாம் டா” ன்னு சொன்னபோது..
“….ம்மா ..ரொம்ப வலிக்கிது ம்மா..” என்று வலியால் துடித்த
என் முகத்தைப்பார்த்துக் களேபரம் ஆன அவள் வாரிச் சுருட்டிக்
கொண்டு எழுந்தாள்...
இருவருமாய் கிளம்பினபோது, நடுக்கூடத்தில் அப்பா உறங்கிக்கொண்டு
இருந்தார் ..“நாங்க ஆஸ்பிடலுக்கு போறோம் கதவை பூட்டிகிங்க” என்று
சொல்லிக்கொண்டே என்னை தாங்கிபிடித்து நடந்தாள் அம்மா..
போகும்வழியில் அவருக்குச் செய்தி சொல்ல அவரும் அங்கு வந்துவிட்டார்..
அவர் இவர் என எல்லோரும் சுறுசுறுப்பாய் இயங்க கையில் ஊசி
குத்தப்பட்டு ட்ரிப்ஸ் இறங்கியது , வலி வந்து வந்து போகிறது ..
அப்படியே அந்த நாள் முழுதும் ,தாங்க முடியா வேதனை ...
ஆனால்… அன்றும் ஏதுவும் நடக்கவில்லை....ஒரு நாள் போனது வலியிலும்
வேதனையிலுமாய்….
மறுநாள் அத்தை வந்தாங்க….நிறைய பிரசவம் பார்த்தவங்க….
“ஏண்டிமா… எப்படி இருக்கே” "அருகில்வந்து பேசியது... எங்கேயோ
துரத்திலிருந்து கேட்பதுபோல் கேட்டது எனக்கு..."
”எத்தனையோ பிரசவம் பார்த்திருக்கேன் நான்…உனக்கு மட்டும்
இவ்வளவு பிரச்சனை ....” என்று சொன்னபோது பயம் என்னை மீண்டும்
தொற்றிக்கொண்டது.
…வலியும் வேதனையும் என்னையே அன்னியப்படுத்திக்கொண்டிருந்தன.
வந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் வெளியேற ..நான் மட்டும்
வலியுடன் உள்ளயே... “பயப்படாதே” எனச் சொல்லி அத்தையும்
வெளியே போனார்கள் .ஆரம்பித்தது அந்த வலி…. சொல்லமுடியாத
அளவுக்கு சத்தம் போட்டேன்...கூடவே திட்டும் வாங்கினேன்
அங்குள்ளோரிடம் ..
மருத்துவர் வந்து பார்த்து அவசர அவசரமாய் ஏதோ பேசினாங்க..
“ஆபரேஷனுக்கு ரெடி செய்யுங்க” ன்னது மட்டும் பளீரென்றது என்
காதில்….ஐயோ எனக்கு ஊசின்னாலேயே வலிக்குமே....இப்போ
என்ன செய்ய..
என் வயிற்றில் இருப்பது மகள்தான் என்ற நினைவில் வலியிலும்
வேதனையிலும் பேசினேன் அவளிடம்...
அம்மாடி ….செல்லமே உனக்கு பிடித்த நேரத்தில் பத்திரமாய்
வந்து விடுடா ...அம்மாவுக்கு ரொம்ப வலிக்கும்டா….
ரொம்ப வலிக்கும்டா …செல்லம்… எனத் திரும்பத் திரும்பச்
சொல்லிகொண்டேயிருந்தபோது..
உறைவது போன்ற குளிரை எனக்குள் உணர..சில்லென்று ஒரு கை,
சுண்டு விரலில் மச்சத்துடன் …யாரென்று பார்க்க…. அந்தப் புன்னகை மட்டும்
அடிமனதில் பதிய…. அப்படியே மயங்கி ...............
……கண் திறந்தபோது… மங்கலான வெளிச்சத்தில் தோன்றினாள்
“அவள்”…. என் தலையைக்கோதிக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது….
நான் அதிகசிரமப்பட்டு கண்களை அகல விழிக்க….அவள் ஒரு
பந்துபோல சுருண்டு காற்றாய் எனக்குள் போக…சில மணித்துளிகளில்
…தும்மலுடன் "மகள்" பிறந்தாள் …!
வேதனையின்றி…… என்னையும்…. என் குழந்தையையும்
காற்றைப் போலப் பிரித்தாள் அவள்...!!
Monday, September 3, 2012
வெள்ளை ரோஜா
வண்ணங்களை துடைத்து போன்றது போன்ற வெளிச்சம் என் முகத்தில்.
ஏன் இப்படி என்றும் இல்லாமல் ஒரு பிரகாசம். என்னையே
நான் கேட்டு கொண்டேன் ,கண்ணாடியை பார்த்து.....
நேரம் 8 மணி..ஏன் இன்னும் என் கைபேசி ஒலிக்கவில்லை ..
நேற்று நடந்த சண்டையின் தாக்கமாக இருக்கும் என
நினைத்து கொண்டே ,குளியலுக்கு சென்றேன்....
அம்மா சந்திரா என கூப்பிட வரேன் மா ..என சொல்லிவிட்டு
குளியலறையில் புகுந்து கொண்டேன்..
"நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன சிறகை"
பாடலை பாடிகொண்டே குளியல்.....
அம்மா கத்தி கொண்டே இருந்தார் ..
அம்மா வந்துவிட்டேன் ..சொல்லுங்க ..ம்ம்ம்.
குளிக்க போனால் ஒரு மணி நேரம் எனகேட்டுகொண்டே
எனை பார்க்க, தலை துவட்டியபடியே நான் ....
தினம் தினம் தலையில் தண்ணீர் ஊற்றாதேனு சொன்னால்
கேட்க மாட்டியா?
மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்கு தெரியுமில்ல ..
என சொல்லிகொண்டே சமையலைறைக்கு சென்றுவிட்டாள்.
"என்ன சத்தம் இந்த நேரம்" என ஒலித்துகொண்டிருந்த
கை பேசியை ஆசையாய் எடுத்தேன் ..
இந்து பேசினாள்....
இன்னைக்கு 11 மணிக்கு பரீட்சை முடிவு ..நினைவிருக்கா....
கொஞ்சம் பயத்துடன் ம்ம்.
நினவிருக்கு..சொல்லிட்டு .....
என்ன அமைதியாய் இருக்க சந்திரா ....
ஏன் நேற்று நடந்ததையே நினைத்து கொண்டிருக்க..
என இந்து கேட்க
அமைதியாய் நான் ..
போன் ஏதும் வரவில்லையா,
குறுஞ்செய்தி கூட வரவில்லையா,
நீயாவது பேசிவிடு...
சண்டையை தொடர்ந்து வைத்து கொள்ளாதே
என சொல்லிகொண்டிருக்கும்போதே தொடர்பு அறுபட்டது...
அந்த அழைப்பு வரும்னு நினத்துகொண்டேயிருக்க
நேரம் ஓடி கொண்டே இருந்தது..ம்ஹ்ம்..வரவில்லை....
மீண்டும்இந்துவின் அழைப்பு ...அம்மா விடம் கொடு...
என்றாள்..
அம்மாவும் அவளும் பேசி கொண்டிருந்தாங்க ..
என்னுடைய சிறு வயது தோழி ஆயிற்றே அவள் ..
அம்மாவிடம் சொல்லிவிடுவளோ என்ற பயம் இருந்து
கொண்டே இருந்தது...அம்மா முகத்தையே பார்த்து
கொண்டிருந்தேன் ..ஒன்றும்
நடக்கவில்லை..சிரித்து கொண்டே இருந்தாள்..
புன்னகைதான் அழகு அவளுக்கு ...எப்போதும்
அப்பாவின் சிந்தனயில் சோகமாய்
இருப்பாள்..ஆனால் இந்து பேசியதால் அழகான புன்னகை முகம் ..
கைபேசியில் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தேன் அம்மாவை...
பரீட்சை முடிவு வந்தாச்சுன்னு இந்து போன் செய்தாள்..
நான் எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் என்று சொன்னாள்.
ஏதும் ஏன் காதில் விழ வில்லை ..ஏன் என்னாச்சு..
நான் பேசட்டுமா அவளிடம் என கேட்க .....வேண்டாம்
இந்து என்றேன் ....
புரிந்து கொள்ளாத என ஆரம்பித்து அப்படியே நிறுத்தி விட்டேன் ...
என்னுடைய வாழ்வில் எப்போதும் வேண்டும் நட்பாய்,
தோழியாய்..நீ மட்டும் ....
உன்னையும் என்னையும் புரிந்து கொள்ளாதா , அந்த காதல்
வேண்டாம் என்றான் சந்திரா என்கிறசந்திரன் ....அமைதியாய் .
நட்பை புரிந்து கொள்ளாத காதல் வாழ் நாள் முழுதும் புகைந்து
கொண்டே இருக்கும்... என்றான்
யோசிக்காதே சந்திரா ....ஏதும்...
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருகிறேன்....ஏன் கூறி
அழைப்பை துண்டித்தாள் ..
அம்மா என அழைத்து கொண்டே இந்துமதி
வீட்டிற்குள் ....வந்தாள்....
எனக்கு பிடித்த வெள்ளை ரோஜாக்களுடன் ......
நட்பு தூய்மையானது என்றும் ரோஜாவை போல
Thursday, August 30, 2012
பொம்மலாட்டம் .
வேகமா போற ..மெதுவா போ .இன்னும் நாடகம் ஆரம்பிக்கலை..
சீக்கிரம் போனாதான் இடம் பிடிக்க முடியும் .
மெல்லமாக இருளில் எனை இடித்து கொண்டு போனாள்...என்னவள்
ரொம்ப பத்திரமா பாத்துக்கோ அவளை, அவ எனக்கு முக்கியம் ..
அவளில்லாத வாழ்வு என்னால நினைக்க முடியாத ஒன்று..
ம்ம் கோவம் கோவமா வந்தது ,அவ மட்டும் தான் நேசிக்கனுமா ,
ஏன் நான் உன்னைய நேசிக்க கூடாதா ,நான் உனக்கு சொந்தமில்லையா?
என்ன கொஞ்சம் தூரத்தில இருக்கேன் ,நான் இல்லாம நீ இருக்க முடியுமா....
நம்ம நிகழ்சிகள் ஏதும் நடக்குமா.. புரிந்து கொள்ளாமல்,
நீ அவளுக்கு மட்டும் சொந்தம்னு சொல்றது சரியில்ல ..
ஆரம்பித்தது பொம்மலாட்டம் ..சீதா புராணம் ...ரொம்ப சுவையா நடந்து கொண்டிருந்தது .
அவளை மெதுவாக கவனித்தேன் ... அவள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்..
ம்ம் உள்ளே வரட்டும் பார்த்து கொள்கிறேன்... பொம்மலாட்டம்
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் முன் ஒரு சிறு இடைவேளை ....
ரொம்ப வலித்தது எனக்கு ,என்னை பார்த்து கொண்டே இருந்த,
அவளை மெல்லமாக தொட முயற்சிக்க அவள் மற்ற என் சொந்தங்களுடன்,
சேர்ந்து வழி விடாமல் ....கவலையோடு .....நான் ..
பேச ஆரம்பித்தேன் பொம்மலாட்டம்
வருசத்திற்கு ஒரு முறை என்றாகி விட்டது ,அழிந்து போக ஆரம்பித்து விட்டது.
நாம் சரியாக ஒன்று கூடி சிறப்பாக நடத்தினாள் மீண்டும் இந்த கலைக்கு
புத்துயிர் கொடுக்க முடியும் என் பேசி முடிக்க
மீண்டும் ஆரம்பித்தது பொம்மலாட்டம் ...சுழன்று சுழன்று ஆடினாள் அவள் .
நான் அமைதியாக அவளை கவனித்தேன் .. திடீரன என்னை இணைத்து ,
அவள் சுழல பொம்மலாட்டம் களை கட்டியது... .ஒரே கை தட்டல் விசில்
என தூள் பறந்தது அங்கு ...இது மாதிரியான நேரங்களில் மட்டும் அவள்
என்னை நெருங்க முடியும் ..என்ன செய்ய அவள் ஓரிடம் நான் வேறிடம் .
அவளின்றி என்னால் இயங்க முடியாது நான் இன்றி அவள் மட்டுமல்ல
யாராலும் இயங்க முடியாது .
பொம்மலாட்டம் நிறைவு பெற்றது என கூறி சேர்ந்தன விரல்கள்...
கட்டை விரல் எட்டி பார்த்தது சுண்டு விரலை ...
மெல்லமாக இடித்து கொண்டு போனவள் கை விரல்கள்
கோர்த்து வீடு திரும்பினாள் கணவனோடு...
Sunday, August 26, 2012
காதல்ஆரம்பம் .... இப்படியும் ......
பகுதி - 2
மெல்ல எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.
தாக்கங்கள் என்னை எதோ செய்தது..
பேசியதில்லை ,பார்த்திருக்கிறேன்..யாரோ எனும் நினைப்பில்அவனை,
ஆனால் இன்று அவன் நினைவு முழுதும் நிரம்பி...தளும்புகிறது .
அவனில்லை இங்கு ,நினைக்க நினைக்க அவன் கடிதம் எழுதும்போது பார்த்ததுதான்
நினைவுக்கு வருகிறது ..
அந்த முகமே மனதில்,நினைவில் வருகிறது..
இது காதலா ..யோசிக்க பயமும் கூடவே...கையை திருப்பி
மணி பார்க்க நேரம் ,நரகமாக ஓடி கொண்டிருந்தது .
இன்னும் அரை மணியில் சுந்தரி எனை பார்க்க வந்து விடுவாள் ..கிளம்பணும்
நானும்,கிளம்பணுமா என்ற எண்ணம் தலை தூக்க ..
ஒரு தட்டு நானே தட்டினேன் என் தலையில் ,வீட்டிற்கு
கிளம்ப யோசிக்கும் அளவுக்கு என் நிலை ...என்னையே
திட்டிக்கொண்டு உள்ள சென்றேன்..
என் கைபையை எடுத்து கொண்டு வெளியே வந்தேன் .
யாரிடமும் கிளம்புவதாக கூறவில்லை .தொலைபேசியை
பார்த்து கொண்டே கிளம்பினேன் .
வெளியில் வந்து பார்த்தேன் எப்போதும் போல அந்த மகிழம்பூ
மரத்தடியில் சுந்தரி ..அருகினில் அந்த இருசக்கரம் நின்று கொண்டிருந்தது.
அதன் மேல சாய்ந்து கொண்டு நான் வருவதையே பார்த்து கொண்டிருந்தான்
அவன்..அந்த மரத்தடிக்கு கூட போக வில்லை கொஞ்சம் தூரத்திலிருந்தே
நான் வருவதை பார்த்த சுந்தரி எழுந்து வந்து விட்டாள்...
வாடி என் செல்ல புன்னகையே என் கூப்பிட்டுகொண்டே என்
அருகினில்....சுந்தரி.
அதே புன்னகயுடன் நான் அவள் கைபிடித்து வேகமாக கிளம்பினேன்.
சுந்தரி கணக்கராக துணி கடையில் பணி செய்கிறாள்.
அவள் இன்று அலுவலகத்தில் நடந்த விசயங்களை சொல்லி கொண்டே
வந்தாள்..சுவரசியமாக கேட்டு கொண்டே வந்தேன்..அந்த இரு சக்கர வாகனம் எனை கடந்து
சென்றது..ரயில் பாதை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருதோம்..
அப்படியே திரும்பி பார்க்க அந்த அவன் வண்டியை நிறுத்தி விட்டு
எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் .
பகுதி - 2
மெல்ல எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.
தாக்கங்கள் என்னை எதோ செய்தது..
பேசியதில்லை ,பார்த்திருக்கிறேன்..யாரோ எனும் நினைப்பில்அவனை,
ஆனால் இன்று அவன் நினைவு முழுதும் நிரம்பி...தளும்புகிறது .
அவனில்லை இங்கு ,நினைக்க நினைக்க அவன் கடிதம் எழுதும்போது பார்த்ததுதான்
நினைவுக்கு வருகிறது ..
அந்த முகமே மனதில்,நினைவில் வருகிறது..
இது காதலா ..யோசிக்க பயமும் கூடவே...கையை திருப்பி
மணி பார்க்க நேரம் ,நரகமாக ஓடி கொண்டிருந்தது .
இன்னும் அரை மணியில் சுந்தரி எனை பார்க்க வந்து விடுவாள் ..கிளம்பணும்
நானும்,கிளம்பணுமா என்ற எண்ணம் தலை தூக்க ..
ஒரு தட்டு நானே தட்டினேன் என் தலையில் ,வீட்டிற்கு
கிளம்ப யோசிக்கும் அளவுக்கு என் நிலை ...என்னையே
திட்டிக்கொண்டு உள்ள சென்றேன்..
என் கைபையை எடுத்து கொண்டு வெளியே வந்தேன் .
யாரிடமும் கிளம்புவதாக கூறவில்லை .தொலைபேசியை
பார்த்து கொண்டே கிளம்பினேன் .
வெளியில் வந்து பார்த்தேன் எப்போதும் போல அந்த மகிழம்பூ
மரத்தடியில் சுந்தரி ..அருகினில் அந்த இருசக்கரம் நின்று கொண்டிருந்தது.
அதன் மேல சாய்ந்து கொண்டு நான் வருவதையே பார்த்து கொண்டிருந்தான்
அவன்..அந்த மரத்தடிக்கு கூட போக வில்லை கொஞ்சம் தூரத்திலிருந்தே
நான் வருவதை பார்த்த சுந்தரி எழுந்து வந்து விட்டாள்...
வாடி என் செல்ல புன்னகையே என் கூப்பிட்டுகொண்டே என்
அருகினில்....சுந்தரி.
அதே புன்னகயுடன் நான் அவள் கைபிடித்து வேகமாக கிளம்பினேன்.
சுந்தரி கணக்கராக துணி கடையில் பணி செய்கிறாள்.
அவள் இன்று அலுவலகத்தில் நடந்த விசயங்களை சொல்லி கொண்டே
வந்தாள்..சுவரசியமாக கேட்டு கொண்டே வந்தேன்..அந்த இரு சக்கர வாகனம் எனை கடந்து
சென்றது..ரயில் பாதை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருதோம்..
அப்படியே திரும்பி பார்க்க அந்த அவன் வண்டியை நிறுத்தி விட்டு
எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் .
Monday, August 20, 2012
காதல்ஆரம்பம் .... இப்படியும் .......
ரயில் விட்டு இறங்கி ரயில்பாதை கடந்து நடந்தாள்..அவளை தாண்டியும் முன்னும் பின்னுமாய் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் காலெடுத்து வைத்தாள் , இன்னும் ஒரு 5 நிமிடத்தில் உள்ளே நுழைந்து விடலாம் ..சட்டென. ஒரு குரல் நமஸ்தே ஜி..
நமஸ்தே என சொல்லிவிட்டு பரப்புடன் அலுவலகத்தில் நுழைந்தாள்.
உள்ளே நுழையும் போதே ஒரே வாசம் பொங்கல்,இட்லி வடை சட்னி என என் மூக்கை துளைத்தது ....வாம்மா துளசி உள்ளே டிபன் சாப்பிட்டு விட்டு சீட்டுக்கு போகலாம் என கூப்பிட டிபன் அறைக்குள் நுழைந்தேன்...
2இட்லி யும் வடையும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே ..அப்பாவின் நண்பர் எத்திராஜுலு சார், இந்தாம்மா என்றார் ஒரு சிகப்பு ரோஜாவும் அத்துடன் ஒரு கடிதமும்...அங்கிள் நீங்களே படியுங்க,தினம் தான் இந்த கதை நடக்குதே , அந்த பூவையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்னு சொல்லிட்டு என் சீட்டுக்கு சென்றேன்..
தபால் அலுவலகம் நான் பணி புரிந்தது..மிலிடரி கேம்பஸ் குள் இருந்தது ..எங்கு நோக்கினும் ஹிந்தி மட்டுமே..எனக்கு சுத்தமாக ஹிந்தி வராது..
பேசுபவர்களிடம் மட்டும் கொஞ்சம் உளறி வைப்பேன் ஹிந்தியில்...
கவுண்டருக்கு போனேன் ஒரே கூட்டம் கட கடவென வேலை ஓடிக்கொண்டிருக்க
எதோ ஒன்று நம்மை பார்ப்பது போல உணர்வு..
திரும்பி பார்க்க, கலா மேடம் ..என் அருகினில் வந்து அமர்ந்தார்கள் ..
துளசி துளசி என கூப்பிட ,ம்.... கொட்டிவிட்டு வேலையை தொடர்ந்தேன்..
அப்பாடா . கொஞ்சம் காலியானது..கவுன்ட்டர்...
நிமிர்ந்து வெளியே பார்க்க எனை பார்த்து பின் தலை குனிவதுமாக கடிதம் எழுதி கொண்டிருந்தான் அவன்......
மேடம் சொல்லுங்க என சொல்லி திரும்ப, சூப்பர் ஆ இருக்கு உன்னோட blouse எங்க தைக்கிறாய்..என்னோட மகளுக்கு தைக்கனும்னு சொல்ல, சரிங்க மேடம் நீங்க கொண்டு வந்து தாங்க நான் தைத்து வாங்கி தரேன்னு சொல்லி நிமிர,
கடிதம் எழுதாமல் என்னையே பார்த்து கொண்டிருந்தான் ..என்ன வேண்டும் என கேட்க மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டான்.. நான் அவனையே கவனிக்க சட்டென்று எழும்பி வந்து விட்டான் என் அருகில், என்ன கேட்பது வென்று தெரியாமல் பார்க்க ,
ஸ்டாம்ப் வேணும் என கேட்க்க ,அந்த கவுன்டருக்கு போங்க என, மேடம் உடனே சொல்லிட்டாங்க...
என்ன துளசி என்னவாம் அவனுக்கு ரொம்ப நேரம் இங்கு இருக்கிறான் என என்னிடம் கேட்க அமைதியாய் நான் ..தெரியவில்லை என தலையாட்டினேன நினைவுகளில் அவன் வேலை செய்ய ,நிமிர்ந்து பார்க்க காணவில்லை அவனை ....
மேடம் நாளை எனக்கு மோர்னிங் ஷிப்ட் .நீங்க அடுத்த வாரம் எடுத்து வந்து கொடுங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். எனக்காக சுந்தரி வாசலில் காத்திருந்தாள்..அழகோவியமாய் அவள்...
என்னுடன்..அவளுக்கு நான் என்றால் மிக இஷ்டம் ...
ரயில் பிடிக்க விரைவாக நடந்து கொண்டிருந்தோம்
..மீண்டும் அந்த சத்தம் அந்த புல்லெட் காரன் ..அவளிடம் அவனை பற்றி பேசி கொண்டே ,கண்கள் அலை பாய ..ரயில் நிலையத்தை அடைந்தேன்..
ஒரு ரயில் மிஸ் செய்து விட்டு பேசிகொண்டிருந்தோம் " அம்மா வேர்கடலை" என அந்த பெரியவர் கேட்க..இருவரும் வாங்கி கொண்டு செங்கல் பட்டு ரயிலுக்காக காத்திருந்தோம்..அப்போதும் எனை தூண்டிய உணர்வு திரும்பி பார்க்க சொல்ல, யாருமில்லை ..மீண்டும் வேர்கடலையுடன் நாங்கள்..
ரயில் வந்து கிளம்ப ரயில் நிலையம் தாண்டும் முன்
அந்த பெயர் போர்டில் சாய்ந்த வண்ணம் இருப்பது யார் என்று யோசிக்க சட்டென நினைவுக்கு வந்தான் கடிதம் எழுதியவன் , சுந்தரி அவன்தான் அங்கே பாரு நல்ல எட்டி பாருடி நான் சொன்னனே என கூற நிலையம் முழுதுமாய் மறைந்தது....அவள் பார்க்கவில்லை,என் கண்கள் முழுதும் அவன் ..
காலை 6.30 ரயில் பிடித்து நான் வந்து நிலையத்தில் இறங்க.. யாருமில்லாதது போன்ற உணர்வு...நடையை துரிதமாக்கி அலுவலகத்தில் நுழைந்தேன் ....அந்த புல்லெட் காரன் கவுன்ட்டருக்கே வந்து விட்டான்...எப்படியோ அவன் கொண்டுவந்த வேலையை முடித்து கொடுத்தேன்..
நினைவு ஓடி கொண்டிருக்க மீண்டும் சிகப்பு ரோஜாவும் கடிதமுமாய் எத்திராஜுலு சார், என்னருகில் ..இது யாருன்னு கண்டு பிடித்து ஒரு பதில் சொல்லிவிடும்மா என கூற
பார்வையால் என்ன அங்கிள் நீங்களே இப்படி சொல்லறீங்க.. நேரம் நெருங்க அடுத்த ஷிப்டுக்கு வந்து விட்டார்கள், நான் கிளம்ப ,இன்று தனியாக ரயில் நிலையம் போகணுமேன்னு நினைத்துகொண்டே கிளம்பினேன் ..வாசல் வரை வரும்போதே உள்ளிருந்து துளசி உனக்கு போன்,
வாம்மா என்ற கலா மேடமின் குரல்..
யார்.............யாராக இருக்கும்..யாருக்கும் இந்த நம்பர் தெரியாதேன்னு கேட்டுகொண்டே எடுத்தேன் தொலைபேசியை ..
சில நிமிட மௌனங்கள் யார்..யார் என நான் கேட்க.ப்ளீஸ் வெச்சிடாதீங்க நான் சொல்றதை கேளுங்க..இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போகிறேன்.இனி உங்களை பார்க்க முடியாது.என்னுடைய அட்ரஸ் உங்களுக்கு தருகிறேன் உங்களுக்கு சரியென்று பட்டால் கடிதம் எழுதவும்..
நான் சரியாகத்தான் தேர்ந்தேடுத்திருகிறேன் என்று சொல்லிவிட்டு ,ஹெலோ நீங்க யாரு என கேட்பதற்குள்தொலைபேசி அணைக்கப்பட்டது ...
யோசித்து கொண்டே எழுந்தேன் ரயில்நிலையம் வரை தனியாக செல்லணுமே ..யோசித்து கொண்டே நடக்க மீண்டும் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் என் அருகினில் வந்து வண்டியை நிறுத்தினான் ....சைகை செய்தான்..மேற்கொண்டு நடக்க முடியாமல் என்னவென்று தமிழில் கேட்க..அவன் சொல்வது புரிந்து புரியாமல் நடக்க ஆரம்பித்தேன்.....
ரயில் நிலையம் வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்..ரயில் வர ஏறாமல் அமர்ந்திருந்தேன் ..
வெள்ளை உடையில் எனை கடந்து சென்றவன் என் பார்வையை இழுக்க ஆரம்பிக்க மெல்லமாக திரும்பினால் அந்த கடிதம் எழுதியவன்..ஓ இவன் கப்பற்படையில் வேலை பார்பவனோ என நினைத்து கொண்டே அடுத்த ரயில் வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன் ,ஒரே படபடப்பு என்னிடம் .
ரயில் கிளம்பியது ,வேகமாக ஓடி வந்த அவனின் கையில் இருந்த ஒரு புத்தகத்தைசன்னல் வழியாக தந்துவிட்டு மறைந்தான் ..நான் திரும்பு நேரம் அவனை காணவில்லை..பக்கத்தில் இருப்பவர்கள் என்னை பார்ப்பது போன்ற உணர்வு.....இனம் புரியா படபடப்பு.
மெதுவாக எடுத்து பிரித்து பார்த்தேன் ..காதல் கவிதைகள் 12 மட்டுமே..அதற்கான காரணத்தை நேரில் காணும் போது சொல்கிறேன் என்று குறிப்பு வேறு.....
எனை பார்த்த தினத்திலிருந்து இன்று வரை அனைத்தும் குறிப்பிட்டு எழுதிருந்தான், அதன் கடைசியில் அலுவலக முகவரி...
அதை வைத்து அவனை கண்டு பிடிக்கணும் என சொல்லி கொண்டே திரும்ப கட்டிலிருந்து விழுந்தேன்..அம்மா என்னவென்று கேட்க ..இனம் புரியா சந்தோசம் எனக்கு....ஒன்றுமில்ல என சொல்லிவிட்டு கிளம்பினேன் அலுவலகத்திற்கு..
கடிதம் எழுதிகொண்டிருந்தேன் அவனுக்கு ....அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ..என்ன எழுத ஒண்ணும் புரியல.... ...
துளசி உனக்கு பார்சல் வந்திருக்குமா ...பிரிங்க அங்கிள்..
பாரும்மா இதிலையும் சிகப்பு ரோஜா,...என சொல்லி கடிதத்தை அங்கிள் பிரிக்க ...கடிதத்தை பிடுங்கிக்கொண்டு ,அந்த பழைய கடிதங்களையும் தாருங்கள் அங்கிள் என சொல்லி , என் சீட்டுக்கு சென்றேன்.
அங்கிள் ரோஜாவை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் ......
என் எண்ணங்கள் முழுதும் சிதறிய வண்ணங்களாய் ....இதுதான் காதலா ..............
Thursday, August 9, 2012
பிறந்த நாள்
ஸ்ரீ இங்க வாம்மா ....என அம்மா கூப்பிட ஸ்கூல்பேக் எடுத்துக்கொண்டு
ஓடினேன், என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவாக நடந்தாள்
அம்மா, இன்னும் நேரம் இருக்கு பள்ளி வாகனம் வர..
சுசி அக்காவும்,அத்தையும் வந்தாங்க,அத்தை அம்மாவுடன்
பேசி கொண்டே வந்தாங்க.சுசி அக்கா என் கையை பிடித்து
தன்னுடன் என்னை சேர்த்து நடந்தாள்....
சுசி அக்கா நீங்க நேற்று சொன்னது போல ஈவ்னிங் வீட்டுக்கு
வாங்க உங்க கை நிறைய சாக்லேட் கேக் எல்லாம் தரேன் ....
ம். வரேண்டா ....
எங்க பஸ் முன்னாடி வந்திடும் நான் உனக்காக வெய்ட் செய்கிறேன்...
உனக்கு என்ன வேணும்னு சொல்லு அக்கா வாங்கிகொண்டு வரேன்....
டா... டா டா ...
கல்லூரி பேருந்துக்குள் ஏறும் வரை என் கவனம் ஸ்ரீ மீது..எல்லாருக்கும்
சாக்லேட் கொடுத்து கொண்டிருந்தது பஸ் நிலையத்தில்..
இன்று கல்லூரியில் ஸ்ரீயை பற்றி தோழிகளிடம் அதிகம் பேசினேன்...
முதல் வகுப்பில் படிக்கும் அவளுக்கு,அழகான ஒரு பென்சில்
பாக்ஸும், குட்டி கரடி பொம்மையும் வாங்கினேன்... ஸ்ரீ கேட்ட
பெயின்டிங் செட்டும் வாங்கி கொண்டேன்....
அவளுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்..
மாமா பிள்ளைகளை அழைத்து கொண்டு பள்ளிவேனில்
சென்றார் புன்னகையுடன்...
ஸ்ரீ யின் பஸ் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்றது...
பின்னால் சத்தம் போட்டு கொண்டு
மக்கள் ஓடி வர...பஸ்சிலிருக்கும்
பிள்ளைகள் அழுது கொண்டே இறங்க .
டிரைவர் இறங்கி ஓட மக்கள் விரட்ட....
பரபரப்பு..அங்குமிங்கும் ஸ்ரீ யை தேட என் கண்கள்....
தார் சாலையில் தாராய் அவளின் ரத்தம் ஓட ...
சுருண்டு கிடந்தாள்...
முதல் சுவாசம் கிடைத்தநாளில் ...சுவாசமின்றி..
---------------------------------------------------------------------
Friday, August 3, 2012
கைம்பெண்ணின் கனவுகள்
என் நினைவுகளின் நேரங்கள் ...
தன் வயம் கொண்டகனவுகள்
குழலின் நாதம்போல நீண்டுசெல்லும்நேரங்கள்....
இனம்புரியாமல் காணுகின்ற கனவுகள்
விழிக்கையில் இனம் புரியா படப்படப்பு
உயிர் துடிக்க உடலெங்கும் தகிக்க ..
விழிகளின் வேலிகளுக்குள் நீ எனை
மீண்டும் அழைக்க.உன்னுடனான அந்த
கனவு கோட்டைக்குள்....அளவில்லா
ஆனந்தங்கள் ,கரிய இருளுக்குள்...
வெளிச்சத்தை கொண்டு வரும் ..
நினைவுக்கனவுகள்
பலவண்ணங்களாய் சிதற தினம் தினம்
கனவுக்குளியல் சிறகடித்து பறக்க...
வெடவெடத்து உயிர் நடுங்க ...
தனிமை கனவுகள் உடலை சருகாக்கும்
தீயிலிட்டு பொசுக்கும் தருணம்
சாரலாய் தூறலாய் நீ என் மேல் விழ...
நிலையில்லா கனவுகளின் மேலிருந்து
விழுந்து ,வேதனைகளை...மறைத்து ,
சன்னல் கம்பி பிடித்து எழுந்தேன்
கோடி சாரலாய் கொட்டிய மழையுடன்
இணைந்தேன் நீ என்று..................
Subscribe to:
Posts (Atom)






