வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Wednesday, February 29, 2012
சாலை வாழ்வில்.....சில கணங்கள் .....
ஒரு நாளைக்குள் எத்தனை வார்த்தைகள் ...
தினம் தாங்கியே பக்குவபட்ட மனங்கள் ...
விடியலில் இன்றைய பொழுதை ..
எதிர் நோக்கும் கணங்கள்.....பதினாறுகள்..
இனிப்பை மட்டுமே எதிர் பார்க்கும் பிள்ளைகள்..
துக்கத்தையும் தாங்கும் சில கணங்களில் ...
பொழுது முழுதும் தொடரும் எண்ணங்கள் ...
சாய்ந்த அந்தி பொழுதின் உன் அர்ச்சனைகள் ..
எதையுமே உணராத பயமில்லாத
என்னை சுற்றி ஓடும் எலிகள்,கரப்பான்கள் ..
வேதனையை வெளி உணரும் தருணங்கள் ...
சந்தோசத்தையே உணராத உன் மனம்-என்
எண்ணங்களின் வெளிப்பாடுகள் ... எதிலும்
ஒட்டாமல் முடியும் தருணங்கள் ....
வானமே கூரை என்றாலும்
வண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...
மரப்பெட்டிகளும் பிளாஸ்டிக் ....
குடங்களும் சொத்துக்கள் - மீண்டும்
பயம் உன் வார்த்தைகளின் வேகத்தினால் ..
மறைப்பில்லாத தினம் தினம் ...
புது சேலை உடுத்தி அமர்ந்திருக்கும் ..
உன்னை கையெடுத்து கும்பிடும் கரங்கள் ...எக்கணத்திலும் ..
எதை எதிர் நோக்கி நீளும் வார்த்தைகள்
வீண் வதைகளையே தரும் வார்த்தைகளை
சார்ந்த உன் எண்ணங்கள் அதில் வெளிபடுத்தப்படும்
புன்னகையின் நீளங்கள் போல ....பூக்கள்
பூக்கும் தருணங்கள் போல -தெரியாமலே
போகிறது வாசனையுடன் -உன் அர்ச்சனைகள்
தேவை முடித்ததும் தொடருகிறது ...
அடுத்த சில கணங்களில் ...
பொழுது புலருகிறது மனங்களின் -பல
வேண்டுதல்களோடு ...மீண்டும்
தொடர்கதையை சாலை பயணங்கள் ...
Sunday, February 26, 2012
ஜெர்மானிய விருதுக்கு நன்றி
Thenakka ( LIEBSTER BLOG AWARD)
சும்மா சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!! என்ற வலைப்பதிவு எழுதிவரும் THENAMMAI LAKSHMANAN
அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள்.
இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.
இதை நான் 1.http://rathnavel-natarajan.blogspot.in/
2.http://ragasiyasnegithiye.blogspot.in/
3. http://podhigairajan.varuga.com/
4. கரிசல்குளத்தானின... வயக்காடு!
5 http://kavithaivaasal.blogspot.in/
இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை
உணர்வோம்..:)
Thenakka ( LIEBSTER BLOG AWARD)
சும்மா சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!! என்ற வலைப்பதிவு எழுதிவரும் THENAMMAI LAKSHMANAN
அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள்.
இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.
இதை நான் 1.http://rathnavel-natarajan.blogspot.in/
2.http://ragasiyasnegithiye.blogspot.in/
3. http://podhigairajan.varuga.com/
4. கரிசல்குளத்தானின... வயக்காடு!
5 http://kavithaivaasal.blogspot.in/
இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை
உணர்வோம்..:)
அந்த வாசம் ....
எழுந்திரும்மா .அம்மா கூப்பிட... ம்ம் ..இதோ வரேம்மா என முனகியபடியே திரும்பி படுத்தேன் ,என்ன கிழமை மா ,,,இன்னைக்கு சண்டே டி ..மீண்டும் அம்மாவின் குரல் பதில் ஏதும் கூறாமல் கிளம்பினேன் .
அங்கிள் என்ன இன்னைக்கு இவ்வளவு வேகம் மெல்லமா போங்க ...வயசாகுது சொல்லிட்டு சின்ன சிரிப்புடன் திரும்பினேன்.... அம்மா எப்போதும் போல 10 அடி இடைவெளி விட்டு ....
இங்க நடக்கிறதில இருக்கிற சந்தோசம் எதிலும் இல்லம்மா னு குரல் காற்றில்...
வேகமாக நடந்து கரைந்து போனார் அந்த அதிகாலையில் இதமான பனியில் ...
சென்னையின் நுழைவு வாயில்..அழகிய மரங்களடர்ந்த மலை சார்ந்த கிராமம் ,அந்த மலைப்பாதையில் தான் எங்களின் காலை நடை பயிற்சி ...சினிமா,அரசியல் அக்கம் பக்கம் வீடு கதைகள் ,மாமியார் மருமகள் சண்டை ,பிள்ளைகளை பற்றிய குறை,யோகா மாஸ்டர் பற்றி கிசுகிசு அனைத்தும் அங்கே கேட்கும் அந்த அதிகாலையில் ..
அந்த சில்லென்ற அதிகாலையில் மூலிகைகளுடன் கூடிய ஒரு நறுமணம் ஆஹா..அற்புதம் .எங்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய ஒன்று சென்னையின் புறநகரில் வாழ்ந்தும் யோசித்து கொண்டே நடந்தேன்..அம்மா இன்னைக்கு கொஞ்சம் குளிர் அதிகம் அம்மா என் சொல்லி திரும்பி பார்க்க அம்மா தன்னுடைய சீரான நடையில் என்னம்மா என கேட்க ,
ஒண்ணுமில்ல ..நடையை துரிதமாக்கினேன்,இன்னைக்கு லீவ் நாள் அதனாலே நிறைய சந்திப்புகள் அங்கு ...
என்னை கடக்குமுன் அம்மவரலையா கேட்டவர்கள் கடந்த பின் வணக்கம் மா.. சொல்லுவது காதில் கேட்டது..
எப்போது சந்தித்தாலும் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்"அந்தோணி அங்கிள் ..யோசனையுடன் நடக்க ..அப்ப்பப்பா என்ன ஒரு வாசம் என்றுமில்லாமல் ..
"சின்ன புன்னகையுடன் வேகமான நடையில் என்னை கடந்தார் "அந்தோணி அங்கிள் "
ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு சென்றாலும் ஒரு சிலர் நம்ம ஊரிலயே தங்கி இங்கு வாழ்ந்தவர்களில் " அந்தோணி அங்கிள் " குடும்பமும் ஒன்று..
சந்திக்கும் போதெல்லாம்"நானும் உங்க அப்பாவும்னு "ஆரம்பிப்பார் நேரம் ஆகுது அங்கிள் உங்க மகள் தேடுவாங்க பேத்தி அழும்னு சொன்ன,உடனே ஓகே வரேம்மா னு போய்டுவார் ...
எங்களின் இடம் ...எப்போதும் நாங்கள் செல்லும் தூரம் வந்தது அங்கு ஒரு அழகான கல் ..அதை ரொம்ப ரசிப்பேன் சில நேரம் அதில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு தான் திரும்புவேன் ...
மெல்ல மூச்சு பயிற்சி செய்துகொண்டிருக்க மீண்டும் அதே இனிமையான வாசம் என்னை தாக்கியது .அம்மாவும் நெருங்கி வந்துவிட்டார் .அம்மா சில உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்க
"அந்தோணி அங்கிள் "மீண்டும்...மலை பாதையில் நடக்கிறார் ,..... ஓகே இன்னைக்கு லீவ் தானே அதனால மீண்டும் தொடருகிறார் போல நினைத்து ..அம்மாவிடம் அம்மா "அப்பா" இருந்த நம்மகூட வந்து இருப்பாங்க தானேனு கேட்டேன் ,இதற்கு இப்பவும் உங்களுடனே இருக்கிறார் அங்கிள் பதில் கொடுத்துகொண்டே சென்றார் ...
அம்மா இன்னிக்கு குளிர் அதிகம் அம்மா ,சித்திரை மாசம் ஒரு பூ பூக்குமே அம்மா இந்த மலையில அந்த வாசம் இப்போ வந்தது அம்மா னு சொல்ல சீக்கிரமா போகலாம்மா,பாபு வருவான்னு அம்மா சொல்ல மீண்டும் தொடர்ந்தோம் நடையை..
சாலையை அடைந்தோம்...ஆரம்பித்து விட்டது வாகனங்களின் போக்கு வரத்து ... சூரியனும் மேலேழும்பிவிட்டான் , போகும்போது இருந்த குளிர சூரியன் சாப்பிட்டது போல வெப்பம் .........
சாலையின் இடது பக்கத்தில் "அந்தோணி அங்கிள்"அவங்க வீடு ஒரே கூட்டம் குழப்பம் ....ஏன்
என நினைத்துகொண்டே அம்மா இப்படியே இருங்கள் விசாரித்துவிட்டு வருகிறேன்னுசொல்ல..
வீட்டினுள் செல்ல எத்தனிக்க ...........குரல் ஒன்று காற்றில்
"அப்பா" உயிர் பிரிந்து 10 நிமிடம் .....முழுதும் கேட்குமுன் ...
அந்தவாசம் என்னை தாக்க "அப்படியே உறைந்து போனேன் "
Monday, January 23, 2012
"எங்களுக்கும் காலம் வரும்"
அம்மா அம்மா ..எத்தனை முறை அழைத்தாலும் ம்ஹும் ..கதவு திறக்கவேயில்லை
,அம்மாவிடம் கேட்டேன் ஏனம்மா நம்ம கதவு மட்டும் திறக்க மாட்றாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு மா..
.சத்தமா கூப்பிட்டாலும் வந்து மிரட்டிட்டு போறாங்க ..
ஆனா அவங்க மட்டும் அவங்க பிள்ளைங்க கூட வெளியே போறாங்க கார்ல..
அழுகை அழுகையா வருதுமா,,,அம்மா அம்மா பதில் சொல்லுமா .. ம்ஹும் சத்தமே இல்லை வெறும் பார்வையால் வேதனையை வெளிபடுத்தினாள் அம்மா ..
எங்களுக்கு எல்லாமே இந்த அறைதான் ,சாப்பாடும் தருவாங்க தண்ணியும் தருவாங்க ..
அப்போ மட்டும் அறைக் கதவை திறப்பாங்க ம்ம் நல்ல வாசனையா சுப்பர் சுப்பரா இருக்கும் ...
அவங்களுக்கு நல்ல மூட் இருந்தால் எங்களையும் வெளியே அழைச்சிட்டு போவாங்க,
ரொம்ப ஜாலியா இருக்கும்அவங்க கூடவே தான் இருப்பாங்க...
ஆனாலும் அம்மாகிட்ட தனியே பேசிடுவேன் அம்மா இப்போ அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட தருவாங்க..
ம்ம்.அப்போதான் வெளிச்சத்தையே பார்ப்போம் .. கொஞ்சம் நேரம்தான்...
எங்களை வெளியே கூட்டிட்டு வந்தவங்களுக்கு அம்மா இருக்காங்க,
அவங்க வயசானவங்க அவங்க வந்து ஏன் இவ்வளவு நேரம் "அப்படின்னு சொன்னதுதான் தாமதம் ,
மீண்டும் நாங்கள் எங்கள் அறையில்...........கொஞ்சம் கழித்து அம்மா கிட்ட கேட்டேனா ,
அம்மா சொல்றாங்க ..
என்ன எங்க அம்மா நல்ல பாத்துக்க மாட்டங்கன்னு அந்த அம்மா சொல்றாங்கன்னு சொன்னங்க ,
நான் ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன் ,
அம்மா விடுங்கடாசெல்லம் ,நமக்கும் காலம் வரும் அப்படின்னு சொன்னங்க ....
திடீர்னு அம்மா பயங்கரமா சத்தம் போட்டாங்க ..
அறை வாசலில் பூனை ..நாங்களெல்லாம் அம்மாவின் இறகுகளுக்குள் .....
,அம்மாவிடம் கேட்டேன் ஏனம்மா நம்ம கதவு மட்டும் திறக்க மாட்றாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு மா..
.சத்தமா கூப்பிட்டாலும் வந்து மிரட்டிட்டு போறாங்க ..
ஆனா அவங்க மட்டும் அவங்க பிள்ளைங்க கூட வெளியே போறாங்க கார்ல..
அழுகை அழுகையா வருதுமா,,,அம்மா அம்மா பதில் சொல்லுமா .. ம்ஹும் சத்தமே இல்லை வெறும் பார்வையால் வேதனையை வெளிபடுத்தினாள் அம்மா ..
எங்களுக்கு எல்லாமே இந்த அறைதான் ,சாப்பாடும் தருவாங்க தண்ணியும் தருவாங்க ..
அப்போ மட்டும் அறைக் கதவை திறப்பாங்க ம்ம் நல்ல வாசனையா சுப்பர் சுப்பரா இருக்கும் ...
அவங்களுக்கு நல்ல மூட் இருந்தால் எங்களையும் வெளியே அழைச்சிட்டு போவாங்க,
ரொம்ப ஜாலியா இருக்கும்அவங்க கூடவே தான் இருப்பாங்க...
ஆனாலும் அம்மாகிட்ட தனியே பேசிடுவேன் அம்மா இப்போ அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட தருவாங்க..
ம்ம்.அப்போதான் வெளிச்சத்தையே பார்ப்போம் .. கொஞ்சம் நேரம்தான்...
எங்களை வெளியே கூட்டிட்டு வந்தவங்களுக்கு அம்மா இருக்காங்க,
அவங்க வயசானவங்க அவங்க வந்து ஏன் இவ்வளவு நேரம் "அப்படின்னு சொன்னதுதான் தாமதம் ,
மீண்டும் நாங்கள் எங்கள் அறையில்...........கொஞ்சம் கழித்து அம்மா கிட்ட கேட்டேனா ,
அம்மா சொல்றாங்க ..
என்ன எங்க அம்மா நல்ல பாத்துக்க மாட்டங்கன்னு அந்த அம்மா சொல்றாங்கன்னு சொன்னங்க ,
நான் ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன் ,
அம்மா விடுங்கடாசெல்லம் ,நமக்கும் காலம் வரும் அப்படின்னு சொன்னங்க ....
திடீர்னு அம்மா பயங்கரமா சத்தம் போட்டாங்க ..
அறை வாசலில் பூனை ..நாங்களெல்லாம் அம்மாவின் இறகுகளுக்குள் .....
Thursday, January 19, 2012
ஸ்பரிசம்

ஸ்பரிசம்
உணர்வாலும் எண்ணத்தாலும் மகிழ்ந்த தருணம் எது என
எண்ணி எண்ணி துவண்டு தளர்ந்து கிடந்தாள் இந்து ,
அவள் நினைவினில் தடம் பதித்து சென்ற அந்த தருணம்...
சிந்து பிறந்ததும் அவள் நேரத்தை,
கவனிக்க இன்பமாய் இதமாய் ஒரு ஸ்பரிசம் உரச ...
மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ....
வேலை வேலை என்றிருந்த நேரங்களில் அவளின் நினவு மட்டும் உரசலாய் ..
சிந்து வீட்டில் இருந்தபோது ஒரே களேபரமாய் இருக்கும்,
பணி முடிந்து திரும்பினால் வீடு முழுதும் புத்தகமாய் ,
பேனாவுமாய்,இறைந்து கிடக்கும்,
இதன் நடுவில் அவள் கையில் மொபைலும் ,
எதிரில் கையடக்க கணினியும் நெட்டுடன் இணைந்து இருக்கும்,
அவளையும் என்னையும் போல ..
அம்மா வருவதை கூட கவனியாமல் ...ம்ம் என கூறி நான் சென்றால் ..
என்னம்மா என்ற கொஞ்சலுடன் கூடிய வார்த்தையில் மூழ்கடிப்பாள்,
எதிர் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டு அம்மா என கொஞ்சுவாள்..
கண்ணாலே பேசி என்னை பேசமால் இருக்க செய்வாள்..
கையடக்க கணினி முன் கண்ணாலும் ,குரலாலும் மகிழ்விக்கிறாள்.....
அவள் ஸ்பரிசம் இன்றி ..
அதிக பிணையதொகை கட்டி பராமரிக்கும்
முதியோர் இல்லத்தில் இந்துவாகியநான் இந்தியாவில்
Friday, January 13, 2012
நீர்த்துளி
மனதில் உள்ளவைகளை புரிந்து கொள்ள வந்தாய்
சொல்லியும் சொல்லாமலும் புரியவில்லை
விழி பார்த்து இதயம் உணர்ந்து அறியும் உறவு..........
நினைவுகளின் பயணம் வெகுதூரம் .........
இமைகள் பொருந்திய தடத்தில்.....
எங்கெங்கோ செல்ல
காற்று, மழை ,வெப்பம், நீ நான் என செல்ல ..
பிரிந்த இமை தடத்திலும் நினைவுகள் ...
இமை கதவை அடித்து மூட ...
மீண்டும் இணைந்த தடத்தில் ..
இணையா தண்டவாளமாய் ,
துக்கத்திலும் ஆறுதல்,மகிழ்விலும் பகிர்வு ,
பாசத்திலும் மிஞ்சாமல் பரிவுடன்...
அலையும் விரல்அளந்து.. இமை தடத்தில்
நேர்கோடாய் அருகில்...
எண்ணங்களால் அடித்து செல்ல நிழலாய் ..
விழியோரம் கசியும் துளி நீர் வெள்ளமாய் பெருக..
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இமை தடம் ..
மூழ்கி பாதை பிரிய ..விக்கித்து நிற்க விழி...
இறுகிய இதயம் செயலிழந்து ...
பார்த்து உணர்ந்த உறவு பரிதவித்து போக...
புரியும் நிலையில் புரிந்து கொள்ள முடியாமல் ..
விக்கித்து நிற்கும் விழி பார்த்து ஒரே தடத்தில்
விழித்து நிற்க ...நீர்த்துளி தானே வழிந்து
தன் பாதை தேடி ..........
Sunday, January 1, 2012
விழி வழி தேடுகிறேன்

புன்னகையுடன் ..
சிறு துளியோரப்பார்வை ..
பேசுகையில் சட்டென திரும்பி வரும் பார்வை ..
கவனிக்க வைக்கும் அந்த பார்வை ..
கை மறைத்து பார்க்கும் பார்வை ...
கோவமாய் பார்வை பார்க்க நான் ...
சட்டென திரும்பும் பார்வை ...
ஏங்குகிறேன் அதற்க்கு ....
நாளும் கடக்க மீண்டும் பார்வை..
தாக்குகிறது பார்வையால் என்னை...
கோபத்திலும் பார்வை..ரசிக்க
பார்வைக்காக ஆடுகிறேன் ...
பாடுகிறேன் தூங்க மறுக்கிறேன் ..
நமக்கான பார்வை இதுதானா என..
தேட தேட கிடைத்தது பார்வை..
உன் விழி என் பார்வை...நீ பார்த்த பார்வை ...
தேடுகிறேன் தேடுகிறேன் நான் இன்று
எதை தேடினேன்.... தேடுகிறேன்
புரியவில்லை...விழி வழி...............
Subscribe to:
Posts (Atom)



