வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Monday, October 6, 2014
Friday, June 6, 2014
ஒரு மதியபொழுதினில்.....
முற்றத்து நடுவினில் ஓயாமல்
சத்தமிட்டபடி தானியத்தை
கொத்தித்தின்றன
குருவிகளும் காக்கைகளும்
புறாக்களும்
ஒரு மதியபொழுதினில்
இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்
இறக்கை அடிப்பிலே
தெரிந்தது அதில்
ஒற்றை புறா ஒன்று உணவை விழுங்கி
ஊட்டிக்கொண்டிருந்தது
பிள்ளைக்கு
அடுக்களையில் புகை சூழ்
நடுவே
கற்றையாய் விழும் கூந்தலை
அள்ளி முடிக்க வியர்வை
மழையால்
குளித்து போயிருந்தன அவள்
விழிகளும்
சைக்கிளின்
மணிச்சத்தத்தில் படபடவென
பறந்த பறவைகள் ஒலி
கேட்டுக்கொண்டிருந்தது
கிடுகிடுவென்று வாசல் போனது
மனம்
நீள்வாசலின் நேரேதிரே
மாட்டியிருந்த
அலமாரி கண்ணாடி கூறியது அவள்
நெற்றி பொட்டிழந்தக்கதையை
..அவன்
நினைவுக்குழந்தையாய் கரம்
பற்றி அணைத்திருந்தான்
அழவுமில்லை மீண்டும்
பொட்டிட துணிவுமில்லை
பறவைகளினூடே
ரெக்கைகட்டிபறந்தமனம் சிலாகித்தது ..!!
நெல் மணிகளை
சிதறிக்கொண்டிருந்தது
கைவிரல்கள்..!
கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**
புரிதலற்று காத்திருக்கிறது காதல்

சங்கமிக்கும்
எண்ணங்கள் மனதினில் ஓராயிரம் ,
வலிகள்,
அதில் எழும்புகிறது…துடித்தெழுந்து
ஆர்பரிக்கும்
விழிகள் நிரம்புகிறது குளமாய்
வழிந்தோடும்
வேதனைகளின் சூட்டில் அனைத்தும்
தொலைந்து
போகிறது.
தனிமையில்
சுட்டெரிக்கும் சூரியானாய்
உதிக்கும்
நினைவுகள் எனக்கும் மட்டும்தானா?
பொய்சொற்களை
புகலும் உன் எண்ணத்திலும்
வடிகிறது
வியர்வை துளிகள் ! அட ஆமாம்..!
நீ
பொய்தான் புகன்றிருக்கிறாய்..!
பாசமதன்
மீது வேஷம் கட்டிய கட்டியக்காரனாய்,
மேடை
நாடகம் நிகழ்த்துகிறாய்…
இடைவெளி
விட்டு கூவிக்கொண்டே வரும்
நாகரீக
கோமாளியாக்குகிறாய் என்னை…
இதயத்தில்
எழுதிய பெயரை திரையிட்டு
மறைக்கிறது..
உன் மெளனப்பூச்சு பூசிய இதழ்..!
எங்கோ
என்றோ விட்டு சென்ற உணர்வை ,
தொட்டு
தொடரும் எழுத்துக்களாய் என்னில்
எழுதிவிட்டு
ஏக்கங்களை சுமக்க வைத்து
காத்திருக்கும்
மயானமாய் ஆக்கிவிட்டாய்..!
கொட்டு
மேளத்தையும் வாசனை திரவியத்தையும்
எதிர்கொண்டு
காத்திருக்கிறேன்… அது
எந்த
மாலை பெற ஏன்று அறியாதவளாய்,
எதுவும்
நடக்கட்டும் என பூவிழி கரைய,
புரிதலற்று காத்திருக்கிறது காதல் கொண்ட மனது..!
Tuesday, March 25, 2014
நினைவுகளில் கூடுவோம்...

ஆராதிக்கும் அழகாய் அன்பின் வலியாய்
உன் நினைவுகள் நிரம்பியிருக்கிறது என்னுள்...
மணம் வீசும் மாலை நேர பூக்கள் கதைபேசும்
காற்றினில் அசைந்து இசைவாய் இணைக்கும்
நம் எண்ணங்களை..
தவிக்கும்பொழுதுகள் அற்புதமாய் பூத்திருக்கும்
அந்திமாலையில் அவளின் வருகையில்..
ஆனந்தமாய் அழகூட்டும் அவளின் அருகாமை
அந்நியப்பட்டு போகும் அந்திமாலையின் பொழுதுகள்
பூவாய் மென்னிதழ் புன்னகையில் பூத்தஅசைவும்
மொழியென்று என் விழிகள் அறியும்..
நீண்ட பொழுதின் காத்திருத்தலில் மெல்லிய
இருக்கங்கள் கூடுதாலாகிபோகிறது தனிமையில்..
மணம்வீசும் குழலின் கூடிய விரல்கள் வீணையாய்
மீட்டுவதில் மெய் மறந்துதான் போவாய் அப்பொழுதெல்லாம்
நீ….என் மடிமீதினில்….
நினைவுகளில் கூடுவோம் வாழ்வினில் கூடுதாலாகி
போகின்ற நாட்களை எதிர்க்கொண்டுகாத்திருக்கிறேன்
உனக்காக……
கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**
Subscribe to:
Posts (Atom)




